Tuesday, December 31, 2019

ஜேம்ஸ் ஜாய்ஸின் Ulysses: Hades

நம்மை சுற்றின உலகத்தை கதைகளால் கட்டமைத்து வைத்திருக்கிறோம் என்ற எண்ணம் ஜேம்ஸ் ஜாய்ஸின் யுல்லிஸஸ் வாசிக்கும் போது ஏற்படுகிறது. கதைகள் மாத்திரம் அல்ல நம்பிக்கைகளாலும் அதனை கட்டமைத்து வைத்திருக்கிறோம். நம் முன்னோர்கள் உருவாக்கிய கதைகளைக் கொண்டும் நம்பிக்கைகளைக் கொண்டும் வாழ்வின் யதார்த்தத்தை அணுகுகிறோம். அல்லது இப்படியும் சொல்லலாம், வாழ்வின் யதார்த்தம் என்பதே நம்பிக்கைகள், கதைகளின் கூட்டுமொத்தம். இந்த மாயைக் கொண்டே வாழ்க்கையை அதன் பிறப்பு முதல் இறப்புவரை வாழ்ந்து முடித்துவிடுகிறோம். நம்மை சுற்றிலும் பிராண வாயு மூடியிருப்பது போன்று இந்த மாயை நம்மை ஆட்கொண்டிருக்கிறது. இந்த நம்பிக்கையின், கதைகளின் கட்டமைப்பிற்கு எதாவது ஒரு ஒற்றை சொல் கொண்டு அழைப்பதற்கு வேறெதுவும் சொற்கள் அகப்படவில்லை. மாயை என்ற வார்த்தையும் அதிக மத நம்பிக்கையின் சாரம் ஏற்றப்பட்ட வார்த்தை. ஆங்கிலத்தில் உத்தேசித்த வார்த்தை என்னவோ illusion. இந்த ஜட உலகத்தை இந்த illusionனைக் கொண்டே புரிந்து கொள்கிறோம், வாழ்கிறோம். இறுதியாக இந்த illusionனைக் கொண்டே கடந்து செல்கிறோம்.

Friday, December 13, 2019

எல்லையற்ற பிரபஞ்சம், முடிவற்ற காலம், கணக்கில் அடங்கா முகங்கள்


நம்மை சுற்றி எத்தனைவிமான முகங்கள். ஒன்று போல் மற்றொன்று இல்லை. அனைத்தும் வேறுபட்ட முகங்கள். ஏதோ இரண்டு மூன்று முகங்கள் கொஞ்சம் குறைய ஒற்றுமை கொண்டிருக்கும். அவைகளேக் கூட வித்தியாசப் பட்டவைகள். ஒரே மாதிரியாக சேர்ந்தாற்போன்று ஐந்து முகங்களை காண்பது அரிது. ஏன் இத்தனை வேறு பட்ட முகங்கள் என்று கேள்வி கேட்டுக் கொண்டதே இல்லை. இதைப் பற்றி யோசிக்கக் கூட இல்லை. ஒரே ஜாடையில் இரண்டு முகங்களை கண்டால் அது ஆச்சரியம். ஏதோ உலக அதிசயத்தை கண்டு விட்டது போன்றதொரு வியப்பு. ஜாடை ஒன்றாக இருப்பது என்னவோ இயல்புக்கு ஒவ்வாத ஒன்றுதான்.
ஒருவரை அழைத்து இந்த உககம் முழுவதும் சுற்றித் திரிந்து அனைத்து விதமான முகங்களையும் எண்ணிக் கொண்டு வா என்று பணித்தால் அந்த வேலை முடிவின்மைக்குள் சென்று முடியும். அத்தனை முகங்களையும் நினைவில் வைத்து கொள்ள மனதின் ஞாபகத் திறன் அவ்வளவு சக்தி வாய்ந்தது அல்ல. ஒருவேளை உலகில் உள்ள அனைத்து முகங்களும் நினைவில் வைத்துக் கொள்ள சாத்தியப்படுமானால் அது போன்ற அபாரமான சிந்தனா சக்தியை பாராட்டியே ஆக வேண்டும். சாத்தியப்படாத காரியம் இது.
வேறுபட்ட அத்தனை முகங்களையும் பார்க்க வேண்டுமானால் உலகம் முழுவதையும் சுற்றி அலைய வேண்டியதில்லை. எளிமையான வழி ஒன்று உள்ளது. தாம்பரத்தில் இருந்து சென்னை கோட்டை வரை ரயிலில் பயணித்தாலே போதும். அது முழு உலகத்தையே பயணித்தற்கு சமம். இப்போது இதுதான் சாவால். ஒரு வாரத்திற்கு நாள் தவறாமல் பயணிக்க வேண்டும். முதல் நாளில் எத்தனைபேரின் முகங்கள் ஞாபகத்தில் வைத்திருக்கிறோம் என்று ஒரு கணக்கு நமக்கு நாமே போட்டுக் கொள்ள வேண்டும். ஆண் என்றால் ஆண்களின் முகங்களை மாத்திரமே கணக்கில் கொள்ள வேண்டும். பெண் என்றால் பெண்கள் மாத்திரமே.
மிகக் கடுமையாக விதிமுறையை பின்பற்ற வேண்டும் என்று அவசியமில்லை. அவசியம் கருதியோ அழகியல் கருதியோ சில விதிவிலக்குகளை நமக்கு நாமே எடுத்துக் கொள்ளலாம். மேற்கொண்ட பணி அது மிகவும் முக்கியமானது. ஆக இந்த ரிலாக்ஸ்ஷேசன் அரை நிமிடங்களுக்கு மாத்திரமே. முறைத்து பார்த்தால் தர்ம அடி கிடைக்கும்.
ஐந்து நாட்களும் தவறாமல் இந்த முகங்களின் பதிவை தொடர வேண்டும். இதில் ஒருவரையே இன்னொரு நாள் பார்க்க நேர்ந்தாலோ அல்லது ஒரே ஜாடை கொண்ட இருவரை வாரத்தில் இரண்டு முறையாவது பார்த்துவிட்டாலோ மேற்கொண்ட பணியை உடனடியாக முடித்துக் கொள்ளலாம். இல்லையெனில் ஐந்து நாட்களும் நீங்கள் கண்ட முகங்கள் அனைத்தையும் மனப்பதிவில் வைத்துக் கொண்டு கடைசி நாளில் அவைகள் அனைத்தையும் ஓய்வில் மீண்டும் நினைவிற்கு கொண்டு வர வேண்டும். ஒன்று விடாமல் அனைத்தையும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். சவால் விடுகிறேன் ஒன்று கூட உங்கள்நினைவின் திரையில் காட்சியாகாது. குறைந்தது ஐந்து முகங்களையாவது நினைவில் வைத்து கொள்ள முடியுமா என பார்த்தால் அதுவும் கூட இயலாத காரியம்.
ஒரே மாதிரியான முகங்களைக் கண்டவுடன் வியப்பில் ஆழ்ந்து போவதும் அனேக எண்ணிக்கைகளை கொண்ட கணக்கில் அடங்காத முகங்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் போவதும் மனித இயல்பு போன்று தோன்றுகிறது. ஏன் இது நமக்கு இயல்பாகிப் போய்விட்டது. உண்மையில் எண்ணிக்கைக்கு உட்படாத இலட்சக்கணக்காக முகங்களை கண்டு வியப்புதான் மேலிட வேண்டும். அந்த வியப்பு நமக்கு ஏற்படுவதில்லை. ஒரே ஜாடையில் இருவரை பார்த்தவுடன் அதிசயிக்கிறோம், பரவசமடைகிறோம். சினிமாவில் எம் ஜி ஆர் இரட்டை வேடத்தில் வந்தவுடன் திரைப்படத்தில் ஏதோ மேஜிக் காட்டுவது போன்று வியப்பு பார்வையாளர்களுக்கு. அந்த வியப்பு ஏன் எண்ணிக்கையில் அடங்காத முகங்களை பார்க்கும் போது ஏற்படுவதில்லை?
இப்படி வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்: ஒற்றுமையைக் காண்டு அதிசயிப்பவன் அமைப்பியல்வாதி, வேற்றுமைகளைக் கண்டு அதிசயிப்பவன் பின் அமைப்பியல்வாதி. முந்தினவர் ஆரம்பகால ரோலண்ட் பார்த்ஸ் பிந்தினவர் கட்டவிழ்த்தல் கோட்பாட்டாளர் தெரிதா. ’தெரிகிறதா’ இல்லை தெரிதா. சொல்லுங்கள் ’தெரிதா’ தெ  ரி   தா. சரி விடுங்கள், ’டெரிடா’. நல்லது இப்போது விசயத்திற்கு வருவோம். இணைகளை தேடிக் கொண்டு சென்றால் இலட்சத்தில் இரண்டு முக ஜாடைகள் தான் கிடைக்கும். இணைகளைக் கண்டுபிடித்தவுடன் ஏற்படும் ஆனந்தம் நியாயமானதுதான். ஆனால் அந்த பரவசத்திற்காக கொடுக்கப்படும் விலை அல்லது தியாகம் மிகவும் பெரியது. நூறு என்ற கணக்கில் ஒரு இணைக்காக தொண்ணூற்று எட்டு சதவீதத்தை பலிகொடுப்பதா. நூறில் அதிசயிக்க வைக்கும் ஒற்றுமை கொண்ட இரண்டு எண்கள் முக்கியமா அல்லது வித்தியாசப்பட்ட தொண்ணூற்று எட்டு எண்கள் முக்கியமா?
முதலில் வித்தியாசங்களை பார்க்கும் போது ஏற்படும் இரண்டு விதமான மன பாதிப்புகள் ஏற்படும். இவைகள் இரண்டையுமே தவிற்க வேண்டியிருக்கிறது. ஒன்று அலட்சியமாக இருப்பது. மற்றொன்று பீதியடைவது. இரண்டுமே கூடாது. வித்தியாசங்களை வரவேற்க வேண்டும் அவைகளின் வேற்றுமையைக் கண்டு ரசிக்க வேண்டும். ஒன்று போன்று மற்றொன்று இல்லை என்பது அழகான ஒன்று. அனைத்தும் புதிதானவைகள். மதம் ஒன்று, தேசம் ஒன்று, இனக்குழு ஒன்று என்று அனைத்தையும் இரண்டு எண்களுக்காக தொண்ணூற்று எட்டை தியாகம் செய்வது அறிவுடைமை அல்ல. ஒரே ஜாடை முகம் என்பது கிடையவே கிடையாது. ஒன்றை போன்று மற்றொன்று இருக்கலாம். ஒன்றை மற்றோன்று பிரதிபலிக்கலாம். இரண்டும் ஒன்றாகிவிட முடியாது. ஒருவர் ஒரு கோடி முகங்களை தேடி சென்றால் வேற்றுமை எவ்வளவு அழகானது என்று இறுதியில் ஒரு முடிவுக்கு வருவார். அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்வேன் என்று ஒருவர் சவால் விட்டால் மூளை கலங்கிவிடும். எல்லாவற்றையும் ஒரு இணைக்குள் கொண்டுவந்து விடுவேன் என்று எளிமைபடுத்த முயன்றால் அது சர்வாதிகாரத்தனம். 98 அழிக்கப்பட்டுவிடும். பிரபஞ்சம் மிகபெரியது, அது தன்னுள் கொண்டுள்ள காலம் அளவற்றது. இந்த எல்லையின்மையும், முடிவின்மையும் எப்போதும் கணக்கில் அடங்காத வித்தியாசங்களை தன்னுள் வைத்துக் கொண்டு மனிதனை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
திரையில் மக்கள் பார்த்து ரசிக்கும் நட்சத்திரங்களின் முகங்கள் ஏதோ ஒரு நிலையில் அவைகளின் தனித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்ள தன் ஜாடையில் மற்றொரு முகத்தை தேடுகின்றன. இரட்டை என்பது பைனரி அல்ல. அது ஒன்றின் முக்கியத்துவத்தை நிலைநாட்டிக் கொள்ள தேடிக் கொள்ளும் பலவீனமான எதிர்நிலை. இரட்டை வேடங்களில் ஒருவர் பலசாலியாக இருப்பார் மற்றொருவர் கோழையாக இருப்பார். வலது கை அதிக பலத்துடனும் இடது கை அதிக பலமற்றும் இருப்பது போன்றது இது. கடைசியில் பார்க்க போனால் இரண்டும் ஒன்றுதான். பைனரி என்பது சாத்தியமற்ற நிலை. பனரி என்பது முடிவின்மையை எளிமையாக்க நடக்கும் முயற்சி.

Monday, August 26, 2019

கசாக்குகளின் இருட்டு: இருட்டு பகலைப் போன்றே இயல்பானது



கசாக்குகளின் இருட்டு: இருட்டு பகலைப் போன்றே இயல்பானது
             நாவலின் சில வரிகள் மின்னல் போன்று நம் வாசிப்பில் சொற்ப நேரத்தில் மின்னிவிட்டு போகின்றன. அப்படிப்பட்ட மின்னல் போன்ற வரிகளை உடைய நாவல்கள் மிகவும் அரிதானவை. நல்ல மழை காலத்தில் மின்னல் வீச்சுகளுக்கு கணக்கே கிடையாது. தொடர்ந்து மின்னல்களும் இடிகளும் வந்து கொண்டே இருக்கும். தொடர் மின்னல்களை உடைய நாவல் என ஆரம்ப கால பிரெஞ்சு நாவலான கார்கென்டுவா மற்றும் பென்ட்டகுரல் நாவலை சொல்வேன். மறுமலர்ச்சி கால கட்டத்தில் உருவான அந்த நாவலை மனம் உட்கிறகித்துக் கொள்ள கொஞ்சம் ஆற்றல் தேவைப்பட்டது.

Monday, August 19, 2019

ஜீவன் என்னும் சிறப்பு அந்தஸ்து: ஏகாந்த நிலை


ஜீவன் என்னும் சிறப்பு அந்தஸ்து: ஏகாந்த நிலை
இந்த பூமி ஜீவராசிகளின் வாழ்வாதாரத்திற்காக சுழன்று கொண்டிருக்கிறது. மற்றெந்த கிரகமும் ஜீவராசிகளின் இருத்தலுக்கு உகந்ததாக இல்லை. பூமியின் மீதான மனித ஜீவன்களுக்கு அத்தனை கிரகங்களும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பில் உள்ளன என்று நம்பப்படுகிறது. எது ஒன்று ஜீவனுக்கு உரியது இல்லையோ அது வணக்கத்துக்கு உரியதாக பூமியில் இருந்து போற்றப்படுகிறது. ஆனால் எது ஒன்று ஜீவராசிகளின் வாழ்வியலுக்கு ஆதாரமாக இயங்கிக் கொண்டிருக்கிறதோ அது முற்றிலும் கணக்கில் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்படுகிறது. பூமியின் மீதான உயிரினங்களின் வாழ்வியல் தொடர்ச்சி சுற்று வட்டத்தில் சங்கிலித் தொடராக ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இந்த சுழற்சியின் ஒரு சரடு அறுபட்டாலும் பூமியும் மற்ற கிரகங்கள் போன்று உயிரற்ற பாலைவனமாக மாறிவிடுமோ என்னும் சந்தேகம் ஏற்படுகிறது. நீரற்ற, பச்சையமற்ற ஒரு நிலபரப்பை பாலைவனம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லுவது.

Monday, August 12, 2019

காலமே பயணமாக

                                    காலமே பயணமாக
காலம் என்ற பிரக்ஞைக்குள் நுழையும் போது பயணம் என்ற நகர்வுக்குள் நுழைந்து விடுக்கிறோம். காலம் ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு நகர்ந்து செல்கிறது. இதில் பயணம் செய்யும் நமக்கு அதன் ஓட்டத்தின் தொடர் நிகழ்வைப் பற்றின எந்த உணர்வும் ஏற்படுவதில்லை. இந்த பூமி நகர்கிறது. வெளிச்சம் கட்டுக்கடங்காத வேகத்தில் பயணிக்கிறது. ஒளியின் வேகத்திறுக்கு சற்று குறைவாக ஒலி தன் வேகத்தை சற்று குறைத்து நகர்கிறது.  ஒலி, ஒளி:  இவ்விரண்டின் இயங்கியலை உணருவது காலப் பயணத்தை உணருவதாகும். பூமியின் நகர்வையும் இதைக் கொண்டு உணர் ந்து கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் ஒரு மாபெரும் பயணம் ஒரு இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வேகம் நமக்கு புலப்படுவதாக தெரியவில்லை. அதாவது கண் பார்க்க வேண்டும். புலன்கள் துய்க்க வேண்டும். இவைகளின் எந்த ஒரு உணர்வும் இல்லாமல் பயணிக்கும் பூமிப் பந்தின் மீது அமர்ந்து கொண்டு நோக்கமற்று இலக்கற்று நாமும் பயணித்து கொண்டிருக்கிறோம். இந்த நகர்வின் பயணத்தை பயணி ஒருபோதும் உணருவதில்லை.

Saturday, July 20, 2019

தீபெட்டி: நெருப்பின் உறைவிடம்


தீபெட்டி: நெருப்பின் உறைவிடம்

நெருப்பின் உறைவிடம் எது என கேட்டால் தீப்பெட்டி என்று சொல்ல தோன்றும். உரசப்படாத வரை ஆழ்ந்த தூக்கத்தில் சிறு பெட்டியினுள் நெருப்பு உறங்கிக் கொண்டிருக்கிறது. உரசிய உடன் ஜாலம் நிகழ்கிறது. வீட்டின் அத்தியாவசியத் தேவைகளில் இன்றியமையாதது தீபெட்டி. அதுவே உணவுக்கான ஆதாரம். ஆனால் அதுவே உணவு அல்ல. சமைத்தல் என்ற வழிமுறைக்கு மிகவும் அத்தியாவசியமானது நெருப்பு. வெறும் பாத்திரங்களையும், காய்கறிகளையும் வைத்துக் கொண்டு ஆண்டுகள் பல தவம் கிடந்தாலும் உள்ளது உள்ளபடியே இருக்கும். நெருப்பு பிறக்கும் போது சமைத்தல் நடைபெறுகிறது. தீக்குச்சியை பெட்டியின் ஓரத்தில் உரசும் போது நெருப்பு பிறக்கிறது. விழித்துக் கொள்கிறது என்று சொன்னால் அறிவியல் சிந்தனைக்கு சற்று ஏற்புடையதாக இருக்கும். ஏனெனில் எந்த ஆற்றலையும் நம்மால் உருவாக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக கடத்தி நம் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

Wednesday, May 15, 2019

All the Words Lead to Dabar


All the Words Lead to Dabar
For a long time, Marius was neither dead nor alive. For many weeks he lay in a fever accompanied by delirium, and by tolerably grave cerebral symptoms, caused more by the shocks of the wounds on the head than by the wounds themselves.

Tuesday, May 14, 2019

செவ்வியல் கண்டடையும் வாசகன்


செவ்வியல் கண்டடையும் வாசகன்
            புத்தக வாசிப்பில் வாசகன் புத்தகத்தை தெரிந்தெடுக்கிறானா அல்லது புத்தகம் வாசகனை தெரிந்தெடுக்கிறதா என்றால் புத்தகமே வாசகனை தெரிந்தெடுக்கிறது என சொல்லலாம். இது பட்டிமன்ற தலைப்பு போன்று தோன்றலாம். வாசிப்பனுபவம் இதனை உறுதி செய்கிறது. வாசிப்பின் தொடர்ச்சியில் ஒரு புத்தகம் முடியும் போது அடுத்த புத்தகம் வாசிப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இது செவ்வியல் பிரதிகளின் விசயத்தில் அப்பட்ட உண்மை. ஒரு புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது அடுத்த புத்தகத்தை வாசகன் தெரிவு செய்வதில்லை. அவனது வாசிப்புக்காக புத்தகம் நீண்ட நாட்கள் காத்துக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வகையில் புத்தகம் வாசகனை கண்டடைகிறது.

Wednesday, May 8, 2019

புலப்படாத பூனையும் (imperceptible) உணரப்படாத நிசப்தமும்


புலப்படாத பூனையும் (imperceptible) உணரப்படாத நிசப்தமும்
     நேரக்கணக்கு எப்போதும் கடிகார முள்ளின் நகர்வின் படி கணக்கிடப்படுவதில்லை. நிமிட முள், வினாடி முள், நேர முள் என்று காலம் அதன் வேகத்தில் அல்லது  தாமதத்தில் நகர்ந்து கொண்டே செல்கிறது. இப்பிரபஞ்சத்தின் அசைவு வினாடி முள்ளின் வேகத்தைக் காட்டிலும் மிகக் குறைவானது. நத்தை ஊர்ந்து போவது போன்று பிரபஞ்ச இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வளவு பெரிய பூமி பத்து நேர கணக்கு படி தன்னை தானே ஒரு சுற்று சுற்றிக் கொள்ள 24 மணி நேரங்கள் எடுத்துக் கொள்கிறது. இது பருப்பொருள் அசைவு. அதை விட சத்தத்தின் அதிர்வு இயக்க நகர்வு  மிக வேகமானது. ஒரு கல்லை தூக்கி எரிவதற்கும், அதிர்வலைகள் மூலம் சத்தத்தை ஒரு எல்லையில் இருந்து மற்ற எல்லைக்கு அனுப்புவதற்கும் கால வித்தியாசம் உண்டு. வெளிச்சத்தின் வேகத்தை அளப்பது மிகவும் கடினம். கணக்கிட முடியவில்லை என்பதை விட மனித மூளைக்கு அந்த திறன் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதி வேக இயக்கமான ஒளியின் பாய்தலும் சரி மிக மிக மிக குறைந்த வேகத்தில் இயங்கும் இந்த பிரபஞ்சமானாலும் சரி மனித பார்வைக்கு முன்பு அதன் இயக்கம் செயலற்ற சிசப்த நிலையாகும். கணிக்க முடியாததால் ஒரு இயக்க விதியை நிசப்த நிலை என்கிறோம். பிரபஞ்சத்தின் அகண்ட வெட்ட வெளியில் கிரகங்கள், விண்மீன்களின் இயக்கத்தை  நிசப்தம் என்று சொன்னால் அது பார்வை மயக்கம். புலன்களின் உணர்வுகளுக்கு அப்பால் பிரபஞ்சம் பேரியக்கத்தில் இயங்கி கொண்டிருக்கிறது.

Monday, May 6, 2019

IMPERCEPTIBLE


     புத்தக வாசிப்பில் ஒரு வார்த்தை ஒரே முறை தரிசனமாகி தன் அர்த்தத்தை காட்டிக் கொள்ளாமல் கடந்து சென்றால் போனால் போகிறது என்று விட்டு விடலாம். இனி அந்த வார்த்தை நம்மை சந்திக்கப் போவதில்லை. பொருள் தெரியாத அந்த வார்த்தையை மெனக்கெட்டு அர்த்தம் கண்டு பிடித்து மூலையில் சேமித்து வைப்பதில் பயனில்லை. அகராதியை பார்த்து அர்த்தப்படுத்திக் கொண்டு மனதில் பதிய வைத்துக் கொண்டாலும் சீக்கிரத்தில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடும். தேவையற்ற  உழைப்பு. அதுவும் நாவல் வாசிப்பில் இது போன்ற நேர விரையம் வாசிப்பின் சுவாரசியத்தை கெடுத்து விடும். அரிதாக புழக்கத்தில் உள்ள வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. மொழியில் தன் மேதமையை காட்டிக் கொள்ள வேண்டுமானால் இந்த அரிதான சொற்களை பேச்சு வாக்கில் அள்ளி தூவி விட்டு போகலாம். கேட்கிறவர்கள் எப்படி அந்த வார்த்தையை கண்டும் காணாமல் செல்கிறார்களோ அதே போன்று இந்த மேதாவியையும் கண்டும் காணாமல் கடந்து செல்வார்கள்.

Friday, May 3, 2019

வீதி உலா



     சாதாரண நாட்களில் நாம் பார்க்கிற தெரு அவ்வளவு அழகானதாக இல்லை.  மக்கள் நாடமாடும் இடம் என்றாலும் ஒருவகையில் கைவிடப்பட்ட இடம் சாலை. அது தெருவாக இருக்கலாம், பரபரப்பு மிக்க சாலையாக இருக்கலாம் கைவிடப்பட்ட இடங்கள் அவை. வீட்டுவாசலின் எல்லைக்கு வெளியே உள்ள பகுதி கைவிடப்படலின் ஆரம்பம்.  ஒருவர் வீட்டு வாசலின் எல்லைக்கு வெளியே நகரும் போது கைவிடப்படலின் எல்லைக்குள் நுழைகிறார்.

Thursday, May 2, 2019

மாறிலிகள்



     ரே ஒரு நல்லவனுக்காக அவன் சார்ந்த ஒட்டு மொத்த தீயவர்களின் கூட்டத்தை நல்லவர்களாகவும்ஒட்டு மொத்த நல்லவர்கள் கூட்டத்தை அவர்கள் மத்தியில் உள்ள ஒரே ஒரு தீயவனுக்காக கெட்டவர்கள் என அனைவரையும் முத்திரைக் குத்துவதும் அநீதி. ஒருவனது நன்னடத்தை அவனுக்கே உரிய சொத்து. அதே போன்று ஒருவனது தீமை குணம் அவனுக்கே உரிய அவமான சின்னம்ஒருவன் உண்டாக்கிய நற்பெயரில் ஊரே பங்கு பெறுகிறதுஒருவனது தீய செயலுக்காக அவன் சார்ந்த ஒட்டு மொத்த இனமும் தண்டிக்கப்படுகிறதுஇந்த அநேகருக்காக ஒருவர் பதிலீடு என்பது  நாகரிகத்தின் கண்டு பிடிப்பு என சொல்ல முடியாது. இது அறிவின்மையில் கண்டடையப்படும் திடீர் ஞானோதயம்.

Wednesday, April 24, 2019

ஓவியம்: ஒரிஜினலை காப்பியடிக்கும் Imitation



டிக்கடி நாம் பார்க்கின்றவைகள் ஒருவித சலிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. முக்கியமாக பழகிய மனிதர்கள். மனது விரும்புவது புதுமையான ஒன்றை.  அதே இடம் அதே பழகிய மனிதர்கள் என்றால் இந்த பழகிய எல்லைக் கோட்டில் இருந்து தப்பித்து புதிய உலகத்தை கண்டடைய மனம் ங்கும். நம் வரப்புக்கு மீறி அன்னியமான இடத்திற்கு நகரும் போது விட்டுப் பிரிந்த பழகிய இடத்தின், மனிதர்களின்,  பொருட்களின் மீதான பந்தம் பிரிவின் ஏக்கத்தை ஏற்படுத்தும்.  புதிய சூழல் பழகும் வரை எற்கனவே விட்டுப் பிரிந்த பழைய வாழ்க்கையின் நினைவுகள் மனதில் இருந்து நீங்காது வாதிக்கும்.  புதிய அனுபவம் பழக்கத்திற்கு உட்படும் வரை பழைய’ என்ற ஒன்று பிரிவின் வேதனையாக மனதிற்குள் நின்று கொண்டே இருக்கும்.  

Thursday, April 18, 2019

A Nest of Impermanence

                                                 
A Nest of Impermanence
Among birds, crows alone seem to be creatures of both curse and blessing. Much ambiguity is there in this kind. For its own fortune, a crow takes curse on its own being. It never fails others of their fortune by visiting them. When it is sitting on a rooftop, it is a sign that a long-awaited well-wisher is coming. If its wings brush against one’s shoulder, it is a sign of misfortune for the day.  Signs are many in his visitation. When it is associated with myth and modern short stories, it is surely a bird of ill omen. We Indians somehow maintain the sanctity of the bird. For us, it is neither the bird of curse nor the bird of fortune.

Tuesday, April 16, 2019

காலத்தின் பரிசு


தென்ஆப்பிரிக்காவில் தனக்கு கிடைத்த பெறும் வெற்றி நிச்சயம் தாய்நாட்டுக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சுதந்திர தேசம் பற்றின கனவுகளை சுயராஜ்ஜியம் என்ற தலைப்பில் எழுத்துக்களாக காகிதங்களில் கனவென சுமந்து கொண்டு துறைமுகத்தில் நுழைகிறது அந்த கப்பல்.  வரலாறு கண்ட மாமனிதர்கள் உருவங்கள் சித்திரமாக தீட்டபடாமல் இருந்திருக்குமானால் அவர்கள் உயரம் நம் கற்பனைக்கு அடங்காமல் இருந்திருக்கும்.  நெப்போலியன் ஆறடி நெட்டையானவராக நமக்கு தெரிந்திருப்பார்நம் பார்வைக்கு குள்ளமானாவர்கள் அவலட்சணாமானவர்கள்நாட்டை ஆள்பவனின் உயரம் அக்குடிகளின் உயரத்திற்கு சற்று உயர  இருக்க வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம்.

Sunday, April 7, 2019

ஆகச் சிறந்த ஆளுமைகள் மூவர்


இலக்கிய கூட்டம் ஒன்றிற்க்கு குஞ்சிதபாதமோ, கட்டியங்காரனோ பங்கேற்காவிட்டால் அந்த கூட்டம் இலக்கிய கூட்டமாகவே கருதமுடியாது. அதுவும் கல்லூரிகளில் நடக்கும் கருத்தரங்குகள் என்றால் மூவர் நிச்சயமாக இருக்க வேண்டும்.  பொதுவாக இம்மூவரில் குஞ்சிதபாதாம் மாத்திரம் விதிவிலக்கு.  நண்பர் எப்போதும் கட்டுரை வாசிப்பவராகதான் இருப்பார்.  கட்டியங்காரன் எப்போதும் புனைவெழுத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்.  ஆய்வுக்கட்டுரைகள் அவருக்கு விளக்கெண்ணை குடிப்பது போன்றது.  குஞ்சிதபாதத்திற்கு புனைவெழுத்தின் மீது  அலாதி விருப்பம் கொண்டவர் என்றாலும் எழுதுவது என்று வரும்பொது ஆய்வெழுத்துதான் அவருக்கு உகந்தது. இருவரும் இரு துருவங்கள்.

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...