Friday, February 16, 2018

குஜராத்துல கூட இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்திச்சி


குஜராத்துல கூட இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்திச்சி
என்ன தப்பு செய்தார் என் கட்சிக்காரர் என்று வட்டசெயலாலர் வண்டு முருகன் மேடையில் முழங்குவார். பேச்சு வீராவேசமாக இருக்கும். அடிவாங்கியது அவர்தான் வேறு யாரும் கிடையாது. கூட்டத்தில் இருந்து இருவர் அதைச் சுட்டிக்காட்டி”இவந்தான் எங்கியோ செமத்தியா வாங்கியிருக்கான்” என்று சிரித்துக் கொள்வார்கள். வண்டுமுருகனும் அதை பொருட்படுத்தாமல் கண்டனக் குரலை மேலும் அதிகமாக்குவார். செய்தி என்னவெனில், மாபெரும் தத்துவங்களுக்கு பின்னால், வீர வசனங்களுக்கு பின்னால் ஒரு மூத்திரச்சந்து அனுபவம் நிச்சயம் இருக்கும். இல்லாமல் போகாது. மூத்திரச்சந்து தத்துவவாதிகளையும், இலக்கியவாதிகளையும், பெரும் பிரபலங்களையும் உருவாக்கியிருக்கியிருக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...