Sunday, July 4, 2021

எம்.வி.வெங்கட்ராமின் ”காதுகள்”: உலகின் மிகப்பெரிய வாய் பற்றின மாய புனைவு

 



மனிதனைத் தவிற வேறேந்த உயிரினமும் தம் ஐம்புலன்களைக் கொண்டு இந்த பிரபஞ்சத்தை உள்வாங்கி அதி உன்னத நிலையில் அதனை நுகர முடியுமா என்பது கேள்வியே. மனிதனின் ஐம்புலன்களும் பருப்பொருள் நிலையில் இருக்கிற இப்பிரபஞ்சத்தை கேட்டு, பார்த்து, நுகர்ந்து, மெய்யுணர்ந்து அதனை அனுபவமாக்குகின்றன. பிரபஞ்சத்தில் மனித உடல் என்பது அதிசயமான ஒன்று. அது முழு பிரபஞ்சத்தையே தனக்குள் உள்வாங்கி செறித்து மீண்டும் அதனை அதனிடத்திற்கே கழிவாக வெளியேற்றுகிறது. மனித உடல் மூலம் பிரபஞ்சம் தன்னை காலத்தின் பெரும் பயணத்தில் மறுசுழற்சி செய்து கொண்டே இருக்கிறது. மனிதனைக் காட்டிலும் மற்ற உயிர்களுக்கு இதில் பெரும் பங்கு இருக்கிறது என்றாலும் மனித உடல் மூலம் நடக்கும் இந்த மறு சுழற்சி போன்று அவைகள் அவ்வளவு வளம்மிக்கதாக (fertile) இருக்க முடியாது. வளம் மிக்கதான மறுசுழற்சியின் மனிதக் கழிவு உண்மையில் அருவறுக்கத்தக்கதும் கூட. ஆக அருவருக்கத்தக்க அழுக்கின் துர்நாற்றம் மனிதன். மனித உடல் அருவருப்பின் முழு மொத்தம். ஆதலால் அதுவே வளமானதாக இருக்கிறது. மனித மொழியும் கூட.

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...