Monday, August 10, 2020

ஆசை முகம் மறந்து போச்சே, நினைவு மறக்க லாமோ

                                                                                                                                                                                                                         Tamil Nadu Professor, Theatre Director Pitambarlal Rajani Dies Of ...        

    முதல் சந்திப்பில் பார்த்த ஒருவருடைய முகத்தை வாழ்நாளில்  ஒருபோதும் மறக்கவே முடியாது.  அது நெஞ்சில் வரையப்பட்ட அழியாத கோலம். நீடித்து காலத்திற்கும் நிலைநிற்கும் முகம் அது. பின்பு எத்தனை வருடங்கள் அந்த முகத்தோடு வாழ்ந்து பழகினாலும் அந்த முதல் சந்திப்பில்  பெற்றுக் கொண்ட சித்திரத்துக்கு அது ஈடாகாது. முதல் சந்திப்பின் முகம் தனித்து நிற்கும் முகம்.  நம் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் முதல் சந்திப்பின் முகத்தை நம் மனத்திற்குள் வரைந்து வைத்திருப்போம்.  விதிவிலக்காக அம்மாவின் முகத்தை வேண்டுமானால் சொல்லலாம். அது பழகிப் போன முகம். அது வியப்பையோ, அச்சத்தையோ திடீர் என்று ஏற்படுத்துவதில்லை. கருனையின் முகம் அது. மற்றபடி அப்பா முதல் நண்பர்கள் வரை எல்லாருடைய முகங்களும் ஏதோ ஒரு தாக்கத்தை நமக்குள் செலுத்தி அம் முகத்தை மனதிற்குள் பதியவைக்கின்றன. புகைப்பட ருவி போன்று. ரு கிளிக் செய்தவுடன் பட்டென்று வெளிச்சம் பாய்ந்து காட்சி கருவிக்குள் பதிய வைக்கப்படுகிறது.

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...