Saturday, March 28, 2020

நாலுகெட்டு: புதிய தாயத்தின் பாரதக்கதை



இந்த அகண்ட பாரதத்தின் ஒரு சிறிய பகுதியாக கேரளம் தன்னைத்தானே கதையாக எழுதிக் கொண்டது “நாலுகெட்டு” என்று M T Vயின் நாவலை சொல்லலாம். நாலு கெட்டு வீட்டின் பாகப்பிரிவினை மண்ணின் பெருங்கதை. இந்த நாவலை எம். டி. வாசுதேவன் நாயர் ஒரு வட்டாரத்தின் நாவலாக எழுதியிருக்கலாம். ஆனால் நாவல் விரிந்த மண்ணின் கதையாக மாறுகிறது. வட்டாரத்தோடு பாரதத்தின் கதையும் நாவலோடு சேர்த்து நெசவு செய்யப்படுகிறது. இங்கு பாரதம் என்பது தேசம் என்று பொருள் கொள்ள முடியாது. தேசம் என்பது மிக சமீபத்தில் உருவான கருத்தியல். அதற்கு நூறு வருடங்கள் கூட ஆகவில்லை. ஆனால் அகண்ட பாரதம் அதற்கு முன்பிருந்தே விரிந்த நிலமாக ஒரு மாபெரும் கதையால் தன் இருப்பை மக்கள் மனதில் எழுதிக் கொண்டே இருக்கிறது. பாரதக் கதை மக்கள் மனதில் புவியியல் எல்லைக் கோட்டைக் கொண்டு வரையப்பட்ட பெருங்கதை என்று சொல்லலாம்.
இம்மண்ணின்  எந்த வட்டாரமும் இந்த பாரதக் கதையோடு தன் கதையையும் இணைத்து நெசவு செய்து கொள்ளும் போது அவ்வட்டாரம் பரந்துவிரிந்த நிலப்பரப்பின் பகுதியாக மாறிவிடுகிறது. எம் டி வாசுதேவன் நாயரின் நாலுகெட்டு நவீனத்தின் உள்ளடக்கமான Indian Literature என்பதை விட மகாபாரத்தத்தின் மீண்டுமான கதைசொல்லல் வடிவம் என்று சொல்ல வேண்டும்.

Monday, March 23, 2020

பேரிடர் காலங்களும், நீடிக்கும் பெருங்காதல் கதைகளும்


Giovanni Boccaccioவின் The Decameron  நூறு கதைகளின் தொகுப்பைக் கொண்ட மறுமலர்ச்சி காலகட்டத்தின் பேரிலக்கியம். அதில் இருந்து ஒரு கதையை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. வாசித்த அந்த கதை லத்தின் அமெரிக்க இலக்கியத்தில் உள்ள மற்றொரு கதையை நினைவுக்கு கொண்டு வந்தது. இந்த இரண்டு கதைகளும் கொள்ளை நோயை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதைகள். மையக்கதை என்னவோ என்றும் அழியாத மானுடத்தின் ஒப்பற்ற கதையான பெருங்காதலைப் பற்றியது. டெக்கமரனின் அந்த கதை நீண்ட நட்களுக்கு மனதில் இருந்து அகலாமல் அப்படியே நிலைகொண்டுவிட்டது. அக்கதையின் தலைப்பு "Federigo's Falcon".

Saturday, March 21, 2020

பொந்தன் மாடன்



பொந்தன் மாடன் ஒரு வீட்டுக்கு சொந்தமானவன் அல்ல. எந்த வீடும் அவனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. குடும்பம் அவனுக்கு கிடையாது. வீடு, குடும்பம் என எதை அவன் தேடிக்கொண்டாலும், அல்லது அவனுக்கு கொடுக்கப்பட்டாலும் அவைகள் நீடிக்கப்போவதில்லை. எதுவுமற்று தன் மண்ணில் சுற்றித் திரிவதே அவனுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை. மிகவும் வித்தியாசமான மனிதன் இந்த பொந்தன் மாடன். வீடு கட்டிக் கொள்வதும், குடும்பத்தை தேடிக் கொள்வதும் மனிதன் காலம் காலமாக தனக்கென நிறைவேற்றிக் கொள்ளும் அத்தியாவசியக் கடன்கள். இவைகள் எதுவுமே இல்லாமல் ஒருவன் வாழ்வின் முடிவுவரை வாழ்ந்துவிட்டால் அவன் பெரும்பான்மையில் இருந்து தனித்து நிற்பவனாக மாறிவிடுகிறான். இந்திய சமூகம் அப்படிப்பட்ட மனிதனை கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை. பொந்தன் மாடன் முக்கியப்படுத்திப் பார்க்க வேண்டிய ஒருவன். அவனை தனித்தவனாக பார்க்கும் போது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவனாக தெரியமாட்டான். பொந்தன் மாடனை தனித்து காட்டி முக்கியத்துவம் பெற்ற மனிதனாக பார்க்க வேண்டும் எனில் அவனை போன்று அவனல்லாத வேறு ஒருவனோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது மாத்திரமே அவன் தனித்து தெரிவான்.     

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...