Sunday, June 20, 2021

தொண்டப்ப நல்லூர்

 

கனவில் தோன்றி ஆழ் மனதில் பதிந்த காட்சிப் பதிவுகள் போன்று வாழ்வின் சில நிகழ்வுகள் எங்கோ மனதின் ஆழத்தில் பசுமையாக தங்கி விடுகின்றன. ஆண்டுகள் பல கடந்தாலும் அந்நிகழ்வுகளின் பதிவு மாத்திரம் மனதில் இருந்து அகலாமல் அப்படியே உறைந்து போய் விடுகிறது.  சுவற்றில் வரையப்பட்ட அஜந்தா எல்லோரா குகை ஓவியங்களைப் போன்று. வாழ்வின் முக்கியமான பெரும் சம்பவங்கள் கூட காலத்தால் மனதில் இருந்து அழிக்கப்பட்டு விடுகின்றன. சிறு சிறு நிகழ்வுகள் மாத்திரம் ஏன் அப்படியே மனதில் பல வண்ணங்களில் சித்திரமாக படிந்து போய் விடுகின்றன என்று தெரியவில்லை. பல வருடங்களின் இடைவெளிக்கு பின்னர் அவைகளின் இருப்பும் மதிப்பும் எந்த ஒரு பெரும் கலைஞனாலும் தூரிகைக் கொண்டு தீட்டிவிட முடியாத ஓவியத்தைக் காட்டிலும் விலை உயர்ந்ததாக அவைகள் மாறிவிடுகின்றன. என்றைக்கோ கண்ட அதே இடம் அதே மனிதர்கள் இப்போதும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கக் கூடும். இன்று இருக்கும் அவர்கள் அல்லது அந்த இடம் என்றோ மனதில் பசுமையாய் படிந்து போனவர்களைப் போன்று இன்று இல்லை. அன்று ஆழ் மனதில் புகுந்து நிலை கொண்ட அந்த இடமும் மனிதர்களும் இன்றைய வாழ்வில் நம்மிடம் இருப்பவர்கள்தான் என்றாலும் இவர்கள் அவர்கள் அல்ல. அவர்கள் ஆழ் மனதில் தங்கிய மிகவும் நேசத்திற்கு உரியவர்கள். இன்று இவர்கள் நம்மை வெறுக்கிறவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. மனதில் எங்கோ ஒரு மூலையில் அவர்களின் நேசம் இன்றும் நம்மை அரவணைத்துக் கொண்டிருக்கிறது.

Friday, June 4, 2021

மஞ்சு: வாழ்வின் மீது படியும் இமைப் பொழுதின் பெரும் பாரம்

 


இமயமலை பகுதியில் உறைந்திருக்கும் பனியைப் போன்று சிலரது வாழ்க்கையில் காலம் என்னும் பெரும் பொழுது வினாடி என்ற மணித்துளிக்குள் உறைந்து விடுகிறது. நிமிடங்கள், மணி நேரம், பொழுது என்ற பெரும் கால வெளியாக அது விரிந்து நதியாக பிரவாகிப்பதில்லை. நகர்வுகள் எதுவும் அற்ற நேரமோ அல்லது வாழ்க்கையோ அர்த்தமற்ற ஒன்று. அது சாபத்தின் உறைநிலை. அர்த்தமற்ற அந்த வாழ்க்கை ஒருவருக்கு சாபமாக அருளப்படுமானால் அதனினும் அபத்தம் வேறொன்று இருக்குமா என்பது கேள்விக்குறியது. நடைமுறை வாழ்க்கையில் அது ரசிக்கக் கூடியது அல்ல. அதுவே இலக்கியமாக கதையில் புனையப்படுமானால் அதைவிட வேறெந்த வாழ்க்கையும் பேரழகு கொண்ட வாழ்க்கையாக இருந்து விட முடியாது. நடைமுறையில் காணப்படும் இந்த அபத்தம் புனைவில் பேரிலக்கியமாக மாறிவிடுகிறது. இப்படிப்பட்ட பேரிலக்கியங்கள் எண்ணிக்கையில் மிகச் சில என்று சொல்லலாம். அவைகள் பக்கங்களின் அளவிலும்  அடர்த்தி குறைவுதான்.  மேலும் இது போன்ற வாழ்வின் அபத்தத்தைக் முதன்மைப் படுத்தும் பேரிலக்கிய படைப்புகள் ஒரு மொழியில் வாய்க்கப் பெறுவது அது அம்மொழிக்கான வரம். மலையாளத்தில் எம். டி. வாசுதேவன் நாயரின் மஞ்சு நாவலில் உறைந்து போன மூடு பனி என்னும் வாழ்க்கையின் அபத்தத்தை அவர் உரைநடையில் கவிதையாக புனைந்திருப்பது அம்மொழிக்கான விலைமதிப்பற்ற பரிசு.

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...