Tuesday, August 3, 2021

பரிணாமத்தின் பெரும்பாதையில் உயிரின் தொடர்ச்சி

 



பரிணாமம் பற்றின கருத்து எந்த அளவிற்கு நம்பகமானது என்பது தெரியாது. இருப்பினும் அதனைக் கொண்டு பூமியின் மீதான உயிரின் தொடர்ச்சியை அதன் முழுமையில் புரிந்து கொள்ள முயற்சி செய்து இருக்கிறார்கள். கருத்து ஏற்புடையதா அல்லவா என்பதை விட அதன் மூலம் கோடி கணக்கான வருடங்களில் உயிர் எப்படி பயணித்தது என்பது பற்றின தேடல் மிகவும் சுவாரசியமானது. இந்த பரிணாமப் பாதையில் மனிதனை எங்கு பொருத்துவது அல்லது இந்த பாதையில் மனிதன் எங்கு வருகிறான் என்பது பரம்புதிரான ஒன்று. இந்த பெரும் பாதையில் திடீர் என்று மனிதன் இடைச்செருகலாக வந்தான் என்று நம்புவோமாக. எனினும் மனிதனைத் தவிர்த்து உயிர்களின் தோற்றம் மற்றும் அவைகளின் வளர்ச்சியை சற்று உற்று கவனித்தால் எப்பேர்ப்பட்ட கால வெளியில் அவைகள் பயணம் செய்து இன்று இருக்கிற காலத்திற்கு நம்மிடம் வந்து சேர்ந்து இருக்கின்றன என்பது வியப்பாக இருக்கிறது. இதில் எத்தனை ஊழிகள் வந்தனவோ எத்தனை வகையான உயிரினங்கள் அந்த ஊழியில் அழிந்து காணாமல் போயினவோ. அழிவுகள் அத்தனையும் தாண்டி சிலர் இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

Sunday, August 1, 2021

பூனாச்சி: அக வாழ்க்கையின் அதிசயம்

வலிமை அற்ற எந்த ஒரு உயிர் ஒன்று தன் வாழ்க்கையைச் சாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள போறாடுகிறதோ அந்த உயிரின் இனப்பெருக்கம் பலமடங்கானது. வேட்டையாடும் வலிமை மிக்க உயிரினமோ பரிணாமத்தில் அழிந்து காணாமல் போய் விடுகிறது. மற்றொரு உயிரை கொன்றழித்து அதனை உண்டு வாழ வேண்டிய அவசியம் உள்ள உயிர்கள் உண்மையில் பரிதாபமானவைகள். வேட்டையாடப்பட்டு உணவாக உட்கொள்ளப்படும் உயிரினங்கள் ஒரு வகையில் அச்சமூட்டக்கூடிய பலுகிப் பெருகும் உயிர்கள். வலிமை மிக்கவர்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறவர்கள், அதிகாரம் மிக்கவர்கள் என்று பெரும் நம்பிக்கைக் கொண்டிருக்கிறவர்கள் பரிணாமத்தின் பெரும் பாதையில் தங்களுக்கான சுவடே இல்லாமல் காணாமல் போய் விடுகிறார்கள். எளியவர்களும் வலிமைக் குறைந்தவர்களும் பரிணாமத்தின் முடிவு எல்லை வரை தொடர்ந்து பயணிக்கிறார்கள். உயிர் ஒன்று தாக்குதலுக்கு இலக்காகும் போது அது தன்னளவில் உயிர் தப்பி தொடர்ந்து வாழ்வதற்கு தன்னை தயார் செய்து கொள்கிறது. மேலும் அது இனப் பெருக்கத்தில் வளமிக்கதாகவும் ஆகிவிடுகிறது. பெருமாள் முருகனின் பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை மேற் சொன்ன பரிணாமம் பற்றின கருத்துக்கு முற்றிலும் பொருந்திப் போகிற கதை என்றாலும் அதற்கு ஆதாரமாக இருக்கிற பெருங்காமம் பற்றின கதை இந்த நாவல் என்று சொல்லலாம்.  

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...