Monday, February 27, 2017

மோட்சப் பயணம்



கிரேக்க புராணத்தில் செத்தவர்களின் ஆன்மாக்கள் ஒரு படகின் மூலமாக அடுத்த உலகத்திற்கு செல்வார்கள். படுகுக்காரனிடம் காசு கொடுக்க வேண்டும். பொருள் இலார்க்கு எவ்வுலகமும் கிடையாது என்பது உண்மைபோலும். இந்த மானிடப்பிறவிகளுக்கு மாத்திரம் ஏன்தான் இந்த சாபமோ. அனைத்தையும் காசு கொடுத்துதான் அனுபவிக்க வேண்டும். காசே அனைத்தையும் தீர்மாணிக்கும் காரணி. இறந்த பின்பு கூட காசு அவசிப்படுகிறது. நதிக்கு அப்புறம் இருக்கும் உலகம் எப்படிப்பட்டது என்பது நமக்கும் தெரியவில்லை. அங்கும் காசின் அதிகாரம் தானோ என்னவோ? யார் கண்டது. யாராவது அங்கிருந்து வந்து நமக்கு அந்த உலகத்தைப் பற்றி அறிவித்தால் நன்றாக இருக்கும். முன் கூட்டியே அந்த உலகத்துக்கு உண்டான கரன்சியை சம்பாதித்து வைத்துக் கொள்ளலாம். இந்த மானிடப் பிறவிகளுக்கு எதுவும் இலவசம் கிடையாது. கடைசிக் காசுவரைக்கும் குறைவின்றி செலுத்தித் தீர வேண்டும். காசு கிடக்கிறது காசு. அதற்கு எந்தப் பஞ்சமும் கிடையாது. அதனை அடைவதற்கு பலவழிகள், பல தந்திரங்கள் உள்ளன. என்னுடைய கவலையெல்லாம் நன்னெறி போதனைகள் கூட பணம் எப்படி சம்பாதிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறதே தவிற பணம் என்ற மையத்தை உடைக்கவில்லையே என்பதுதான்.

Sunday, February 19, 2017

வாசகசாலை

தனியாக நூலகம் செல்லும் போதெல்லாம் கண்ணைக் கட்டி யாருமற்ற தீவில் விடப்பட்டதைப் போன்ற மனநிலை இருக்கும். சுற்றிலும் வாசகர்கள் இருப்பார்கள் இருப்பினும் நாம் மாத்திரம் யாருமற்று இருப்பது போன்ற தனிமை நிலவும். அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு செல்லும் போது அப்படிப்பட்ட பயம் இருந்தாலும் கண்ணாடிச் சுவர்கள் ஓரளவிற்கு அந்த பயத்தை போக்கி விடும். வெளி உலகம் நம் கண் முன் ஒரு விஸ்தார நிலையில் காட்சியளிக்கும். நேற்றைய அனுபவம் முற்றிலும் வித்தியாசமானது. #வாசகசாலை ”தமிழ்ச் சிறுகதைகளின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்” வாராந்திர தொடர் நிகழ்வுகள் – நிகழ்வு 2 நேற்று அண்ணா நுலகத்தில் நடைபெற்றது. நிறைய நண்பர்கள் அறிமுகமானார்கள். தனிமையில் புத்தகமும் அதில் கிடைக்கப் பெறும் அறிவைக் காட்டிலும் அதனை நண்பர்கள் மத்தியில் அறிமுகப்படுத்திக் கொள்வது என்பது ஒரு இனிமையான அனுபவம். இதற்காக பெரும்பாலும் நண்பர்களுடனேயே நூலகம் செல்ல விரும்புவேன். நிறைய நேரங்களில் அப்படிப்பட்ட தருணங்கள் வாய்க்கப்பெறாது. அவை மிக அரிதானவை. நேற்று மாத்திரம் ஒரு முழு நூலகமே நட்பு சூழலில் எனக்கு மிக நெருக்கமாக இருந்ததை உணர்ந்தேன். யாரையும் எனக்கு முன்பின் தெரியாது. அனைவரும் கதைகளைப் பகிர்ந்துக் கொள்வதற்காக இணைக்கப்பட்டோம். ஒருவருடன் நட்பை சம்பாதிப்பதற்கு எனக்கு ஏறக்குறைய ஆறுமாதங்களாவது ஆகும். நேற்று மாத்திரம் அந்த இரண்டு மணி நேரத்தில் ஏதோ காலம் காலமாக நாண்பர்களாக பழகிய உணர்வு மற்றவர்களுடன் ஏற்பட்டது. இச்சமுகத்தில் மொழி, இனம், சாதி இவைகளை மீறி எதாகிலும் நம்மை ஒன்றிணைக்குமா என்பது சந்தேகம்தான். நம் அனைவரையும் இந்த வேறுபாடுகள் அனைத்தையும் நீக்கி ஒ்ன்றிணைக்கும் ஒரே மையப் புள்ளி இலக்கியம் மாத்திரமே என்பதை நண்பர் கார்த்திகேயன் கடைசியில் பேசியபோது மகிழ்ச்சியாக இருந்தது. கூட்டம் முடிந்தவுடன் அனைவருடைய முகத்திலும் ஒரு மனநிறைவின் சாயல் தென்பட்டது. beauty will save the world என்று சொல்லவது போன்று literature will unite the world என்று நான் இனி சொல்லிக் கொள்ளலாம்.

Sunday, February 12, 2017

அவரா நீங்க!



சிலருடைய ஆளுமையை அடையாளம் காண்பதற்கு நீண்ட நாட்கள் ஆகும். ஒருவேளை அது சாத்தியப் படாமல் கூடப் போய் விடும். ஒரு நபர் என்னதான் தன்னுடைய சிறந்ததை வெளிக்கொணர்ந்தாலும் நாம் ரசித்து விட்டு அப்படியே அவரை மறந்து விடுவோம். நீண்ட நாட்கள் நம் நினைவில் அவர் தங்குவதில்லை. அந்த நபர் நமக்கு மிகவும் இணக்காமானவராக மாற வேண்டும். அதுமுதற்கொண்டே நாம் அந்த நபரின் ஆளுமையை சரியாக அடையாளம் காண்கிறோம் என்று அர்த்தப்படும். அந்த வகையில் Sir. Anthony Hopkins என்னை மிக நீண்ட நாட்களுக்குப் பின்னரே அதிகம் யோசிக்க வைத்த ஒருவராக மாறினார். இவர் எனக்கு மிகவும் முக்கியமானவராகப் படுவது ஒரே ஒரு காரணத்தால் மாத்திரமே. இவரை நான் முதன் முதலில் பார்த்தது Silence Of The Lambs. அவர் வெளிப்படுத்திய ஒரு கதையின் பாத்திரம் மிகவும் பயப்பட வைக்கக் கூடியது. மிக நீண்ட தூரத்தில் வைத்துப் பார்த்து இரசிக்க வேண்டிய ஒருவர் போன்று திரைக் கதையில் காணப்படுவார். எதையும் தீர்மாணமாக சொல்ல முடியாத ஒரு முகம். அதில் இருந்து வரும் மொழிக்கு ஒரு வசிகரம் இருக்கும். எனினும் அது நம்மை எளிதில் அருகில் அனுமதிக்காது.

Thursday, February 9, 2017

”இது மிஷின் யுகம்”

”இது மிஷின் யுகம்”


இரண்டு மேற்கோள்களுக்கு மத்தியில் இருக்கும் சுதந்திரமே சுதந்திரம். கற்பனை வரட்சி ஏற்படும் காலத்தில் நல்ல தலைப்பிற்கு திண்டாடும் நேரங்களில் மேற்கோள்களின் உதவியைப் போன்று வேறெதுவும் இருக்க முடியாது. அப்படியே நமக்கு பிடித்த மேதை ஒருவரின் கதைக்/கட்டுரையின் தலைப்பை இரண்டு மேற்கோள்களின் மத்தியில் சிறைபிடித்துவிட்டால் கேள்வி கேட்க யாரும் கிடையாது. ஒருவேளை தலைப்புக்கு சொந்தக்காரரே வந்தாலும் வேலையப்பாருமையா என்று அதிகாரத்தோடு விரட்டியடித்துவிடலாம். தற்போது நமக்கு அந்தப் பிரச்சனையே கிடையாது. அந்த மனுஷன் கல்லைறையில் இருந்து எழுந்து வந்தாலும் ரெடியா இருக்கு MLA Hand Book. இடத்தை சுட்டிக்காட்டி விட்டு ”எல்லாம் சட்டப்படிதான் செய்யுறோம் என்று வாதிட வந்தவரை வாயடைத்து போகச் செய்துவிடலாம். இந்த மேற்கோள் என்பது ஒரு சொகுசு பேருந்து மாதிரி. தலைப்புக்கு சொந்தக்காரரே வந்து அதனிடமே புலம்பினாலும் வாயையே திறக்காது. அவ்வளவும் சொகுசு வாழ்க்கை. பிடித்து வைத்த பிள்ளையார் போன்று வாயைத் திறக்கவே திறக்காது. சரி, அந்த மேற்கோளாவது என்னுடையதா என்றால் அதுவும் கிடையாது. யார் வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும் பாருங்கள் அதனைத் தொட ஒரு அசட்டுத் தைரியம் வேண்டும். அது இல்லாதவர்கள் என்னதான் தாங்கள் நல்லவர்கள் என்று பெயர் எடுத்தாலும் அதைக் கையாளும் வரையில்தான் அதிகாரம்.

Wednesday, February 1, 2017

பாப்லோ பிக்காசோ: விளங்கிக் கொள்ள முடியாத கலைஞன்


ஒவியங்களைப் புரிந்து கொள்வதற்கு அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அவசியப்படுகிறார்கள். நாம் சில ஓவியங்களை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டே இருப்போம். ஒன்றும் விளங்காது. ஒருவர் அதன் அழகியல் தன்மையை விவரிக்கும் போது இதை ஏன் நாம் இது வரை பார்க்கத்தவறிவிட்டோம் என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிடுவோம். ஓவியத்துக்கும் நமக்கும் இடையில் இருக்கும் அந்த நபர் நம் பார்வையை முற்றிலும் நம்முடையது அல்லாத ஒரு பார்வையாக மாற்றியமைக்கிறார். முன்பு இருந்த பார்வை அவர் காட்டும் அந்தத் தருணத்தில் இருப்பதில்லை. முன்பு பார்த்த பார்வையில் வெறுமனே காட்சி மாத்திரம் தான் இருக்கிறது அதில் அந்த ஓவியம் காட்டும் தரிசனம் முற்றிலுமாகக் காணாமல் போகிறது.

டான் குயிக்ஸாட்டும் வாசிப்பனுபவமும்: பகுத்தறிவின் கண்கள் திறக்கப்படும் தருணம்


சில புத்தகங்களை நாம் மாத்திரமே வாசிக்க வேண்டும் போல் இருக்கும். அவைகளை மற்றவர்கள் யாரேனும் வாசிக்க நேர்ந்தால் பொறாமைத் தீ அவர்கள் மீது பற்றி எரியும். சில புத்தகங்களை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் வாசித்து விட முடியாது. அப்படிப்பட்ட புத்தகக்களை வேறொருவர் வாசிக்க நேர்ந்தால் அவர்மீது தோழமை உணர்வு அதிகமாகிவிடும். இவைகளுக்கும் மீறி சில புத்தகங்கள் உள்ளன. அவைகள் தனிப்பட்ட வாசிப்பனுபவத்திற்கோ பெருமிதத்தின் வாசிப்பனுபத்திற்கோ ஆன புத்தகங்கள் அல்ல. வாசித்து முடித்தவுடன் அதனை இந்த உலகமே வாசிக்க வேண்டும் என்ற ஒரு புனிதமான எண்ணம் நமக்குள் உருவாகி விடும். அதனை வாசிக்கும் படி இந்த முழு உலகத்திற்கும் பரிந்துரை செய்வோம்.

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...