Skip to main content

Posts

புனித வில்லியின் மன்றாட்டு: கோமாளிகளின் கலகக் குரல் ஸ்காட்லாந்து கவிஞர் ராப்ர்ட் பர்ன்ஸ் ஆங்கில கவிஞர்களிலேயே மிக முக்கியமான கவிஞர். முதலில் ஆங்கிலக் கவி/எழுத்தாளர் இன்னார் என்பதை வரையறுப்பதே சற்று குழப்படியான வேலை. அவர் ஆங்கிலத்தில் எழுதியதாலேயே அவரை ஆங்கிலக் கவி என்று வைத்துக்கொள்வோம். மற்றபடி அவர் ஸ்காட்லாந்து கவி. இவர் மிகச் சிறந்த கவி என்பதை நிரூபிக்க மற்றொரு ஆங்கி லேயக் கவி மேத்திவ் அர்னால்ட் ”Study of Poetry”ல் Touch Stone முறையை பயன்படுத்துவார். எல்லாருடைய கவிதைகளையும் இந்த முறைமையில் பரிசீலித்து கடைசியில் ராபர்ட் பர்ன்ஸே சிறந்த கவி என்று நிரூபிப்பார். இந்த விமர்சன கட்டுரையைப் பேராசிரியர் ரெஜானி 2008ம் ஆண்டு எங்களுக்குப் பாடமாக நடத்தினார். அவர் நடத்திய ஒவ்வொரு வரியும் அப்படியே மனதில் பதிந்துவிட்டது. மறுபரிசீலனை செய்யும் வண்ணமாக ரமணன் சார் பர்ன்ஸின் புனித வில்லியின் மன்றாட்டு என்ற கவிதையைத் தற்போதைய மாணவர்களுக்குப் பாடம் எடுக்க ஆரம்பித்தார். ரெஜானி எப்போதும் மிகப் பெரிய அறிவுத்தொகுதியில் இருந்து நம்பிக்கையே இல்லாமல் ஒரு  கட்டுரையை அல்லது கவிதையை நடத்த பெரும...

வெற்றிடம் விழுங்கும் இராட்சத வார்த்தை

dostoyevsky.tumblr.com 583 × 727 Search by image வெற்றிடம் விழுங்கும் இராட்சத வார்த்தை எழுத்தாளனக்கு தேவையானதெல்லாம் தான் சுதந்திரமாக எழுதுவதற்கான ஒரு பத்தி அவ்வளவுதான். அதில் அவன் நினைப்பது அனைத்தும் எழுதப்படுகிறது. அந்தப் பத்தி எந்த ஒரு கட்டுப்பாட்டையும் எழுத்தாளன் மீது விதிக்காது. தன் சுதந்திரம் முழுவதும் அந்த குறிப்பிட்ட பத்திக்குள் கட்டற்று செயல்பட ஆரம்பிக்கிறது. பொதுவாக வார மற்றும் மாத பத்திரிக்கைகளில் ஒதுக்கப்படும் பத்திகள் சிறுகதைகளுக்காகவும், கட்டுரைகளுக்காகவும், கவிதைகளுக்காகவும், மற்றும் மதிப்புரைகளுக்காகவும் இருக்கின்றன. அந்த பத்திகள் சுதந்திர சிந்தனைக்கான அடக்குமுறையாகும். இவைகள் எழுத்தாளனை இப்படித்தான் எழுத வேண்டும் என்று ஒரு வடிவத்திற்குள் கட்டுப்படுத்துகின்றன. அவனை ஒரு வகையான எழுத்தின் கட்டுப்பாட்டுக்குள் அடைத்து விடுகின்றன. அதற்காக இவைகள் கூடாது என்றல்ல. இவைகள் கட்டாயமானவைகள். சுதந்திரமானவைகள் அல்ல. எனினும் படைப்பு என்பதை இந்த குறிப்பிட்ட வகைமையின் வடிவத்தில் தான் எழுத வேண்டும் என்று வற்புறுத்த முடியாது. ஒரு பக்கத்தில் வடிவங்களுக்காக படைப்புகள் உ...

ஓலைச்சுவடியில் என்ன இருக்கிறது?

ஓலைச்சுவடியில் என்ன இருக்கிறது ? தமிழ்த்துரை மாணவர்கள் எப்போதும் எளிமையாக காட்சியளிப்பவர்கள் . அட , இவர்களிடம் என்ன இருக்க போகிறது என்ற எண்ணம் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் . சற்று அருகில் சென்று விவாதிக்கும் போதுதான் தெரியும் ஆங்கிலத்துரை மாணவர்கள் கற்க வேண்டியது அதிகம் அவர்களிடம் இருக்கிறது என்பது . ஆனால் இடைவெளி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் . இந்த இடைவெளி உடையும் போது கிடைக்கும் ஆதாயம் இருசாராருக்கும் அதிகம் . தமிழ் துரை மாணவர்கள் கட்டுரைகளை படிக்கும் போது அதிகம் கோட்பாடுகளை அள்ளி வீச மாட்டார்கள் . தரவுகளை சேகரித்து நேர்த்தியான விதத்தில் தருவதில் கைத்தேர்ந்தவர்கள் . ஆனால் ஆங்கிலத்துரை மாணவர்கள் பீட்டர் இங்லீஷ்சை வைத்துக் கொண்டு ஒரு கருத்தை மாத்திமே வைத்து கொண்டு வீடு கட்டிவிடுவார்கள் . இது மொழி சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம் . ஆனாலும் அவர்களிடம் கற்க வேண்டியது அதிகம் .

THE "EVERYDAYNESS"

                                                                               www.thehindu.com 465 × 636 Search by image                                                                                                THE "EVERYDAYNESS"  Shiv Viswanathan is one of my favorite column writers in The Hindu. Each and every day I read the editorial page with a self-imposed compulsion. When Shiv comes, the day is made. Today, the editorial editorial page carried a brilliant article by the columnist. He says that “everydayness” is rev...

செவ்வியல் காட்டும் உலகம்: தொடுவானம் தொடும் விரிந்தகன்ற பார்வை

        meaningness.com 437 × 560 Search by image / The Mountain: a view from hell yes செவ்வியல் காட்டும் உலகம்: தொடுவானம் தொடும்  விரிந்தகன்ற  பார்வை டால்ஸ்டாய் மற்றும் தாஸ்தாவஸ்கியை படிக்கும் போதெல்லாம் குறிப்பிட்ட உணர்வு இப்படைப்பாளிகளை பற்றிய புறிதலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். ஆனால் அது இதுதான் என்று வார்தையில் கூறமுடியாத உணர்வாக இருக்கும். எனினும் இவர்களின் படைப்புகள் வாழ்க்கையின் ஆழத்தையும் மேல்நோக்கிய பிரபஞ்சத்தின் உயரத்தையும் காட்டுபவைகளாக இருந்தன. குறிப்பாக கரமசோவ் சகோதர்கள் மற்றும் போரும் வாழ்வும் இது போன்ற உணர்வை எப்போதும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். எனினும் ஆழத்தை அதன் ஆழத்தில் இருந்து பார்க்க முடியாது. அதே போன்று உயரத்தின் எல்லையை அதன் முடிவில் சென்று காண முடியாது.

மேற்கத்திய ஆளுமையில் சாதியைப் பற்றிய அறிவுசார் விசாரணை

மேற்கத்திய ஆளுமையில் சாதியைப் பற்றிய அறிவுசார் விசாரணை கடர்கரையில் நண்பர்கள் அனைவரும் அம்பேத்கரின் முன்னுரைகளை மையமாக வைத்து அதில் எவ்வாறு இலக்கியம் தத்துவம் ஆகியவற்றின் தாக்கம் அவரில் மேலோங்கி நிற்கிறது என்பதைப் பற்றிய ஒரு விசாரணையில் வாசிக்க ஆரம்பித்தோம். இதுபோன்று மொட்டைத்தலைக்கும்  முழங்காலுக்கும் முடிச்சு போடுவது அபத்தமான காரியம் தான். எனினும் மறைக்கப் பட்ட உண்மையை பற்றி பேசும் போது இது போன்ற அபத்தம் என்னும் முற்று புள்ளி உண்மையை வெளிச்சப்படுத்துவதற்கு மிகம் பெரிய அபத்தம் ஆகும். அம்பெத்கருடைய கட்டுரைகளை வாசிக்க நேர்கையில் ஒரு பொருள் கொண்ட விசாரணைமாத்திரமே அவைகளில் இருக்கும். சாதியை பற்றிய எதிர்ப்பு குரள் மாத்திரமே அம்பேத்கரின் ஆய்வு பணி. இது அவருடைய ஆளுமை ஒரு சிறிய சட்டகத்திற்குள் சுருக்கி விடுகிறது. இதற்கு வெளியில் அவருடைய சக மனிதத் தன்மை அறிவு ஜீவி தன்மை என்பவைகள் முற்றிலும் அறியப்படாத ஒன்றாகும். சாலையின் முடிவில் இருக்கும் சிலையும் பாடபுத்தகங்களில் ஒரு கண்ணாடி அணிந்த உருண்ட முகமும் தான் அவருடைய அடையாளங்களாக இருகின்றன. இதற்கு மீறின அவருடைய வாழ்க்கை சார்ந்த குறிப்புகளில் ...
                                                   www.amazon.com 304 × 500 Search by image இடியட் நாவலின் இந்த அட்டைப் படம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. கதையின் நாயகன் மிஷ்கினுக்குள் இருக்கும் ஆன்மாவை வெளிக்காட்டுகிற சித்திரம் இது. நாவலை வாசிக்கும் முன்பு இச்சித்திரத்தை பார்க்கும் போதெல்லாம் புதிய ஏற்பாட்டில் வருகின்ற சம்பவம் ஞாபகம் வரும். இயேசு கிறிஸ்து கடலின் மறுகரைக்கு தன் சீடர்களுடன் படகில் செல்லுவார். புயல் காற்றும் கடல் கொந்தளிப்பும் மூர்க்கமாக இருக்கும். இயேசுவோ நிம்மதியாக படகில் உறங்கிக் கொண்டிருப்பார். மீதி என்ன நடந்தது என்பது நமக்கே தெரியும். அக்கரைக்கு சென்றவுடன் பேய்பிடித்த ஒருவனை இயேசு குணமாக்குவார். குணமாக்கப் பட்ட நிலையில் இருக்கும் மனிதான் இந்த அட்டைப் படத்தில் இருக்கும் மிஷ்கின். குழப்பத்திலும் கொந்தளிப்பிலும் இருந்து விடுபட்ட ஆன்மாவின் நிலை தான் மகிஷ்கினின் இந்த நிலை. இது பைத்தியத்தின் நிலையும் அல்ல தெளிந்த மனதின் நிலையு...

கிழவனும் கடலும்: பரிசோ இலக்கோ இல்லாத நம்பிக்கையின் பயணம்

starashbraswell.wordpress.com 640 × 513 Search by image   starashbraswell  கிழவனும்  கடலும்: பரிசோ இலக்கோ இல்லாத நம்பிக்கையின் பயணம் இலக்கியத்தில் இசங்கள் பல வந்த பிறகும் ஹெம்மிங்வே மாத்திரம் தன்னை ஒரு குறிப்பிட்ட வகைமைக்குள் தினித்துக் கொள்ளாமல் தனித்து நிற்கும் படைப்புகளை தந்தவர். ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்றவர்கள் தங்களுடைய புனைவுகளில் ஒரு குறிப்பிட்ட மனோவியல் உத்தியை கையாளாமல் இருந்திருந்தால் அவர்கள் படைப்புகள் ஆரம்ப நிலையில் இருந்த யதார்த்த புனைவுகளாக தான் இருந்திருக்கும். யதார்த்ததிற்கும் மீறிய பரிசோதனை முயற்சி மாத்திரமே அவர்களை தனித்து நிற்பவர்களாக காட்டியது. எட்மன்ட் வில்சன் என்ற விமசர்சகர் ஜாய்சின் யுல்லிசஸ் பற்றி விவாதிக்கும் போது, நனவோடை உத்தியை மீறி ஜாய்சிடம் இருப்பது வெறுமனே மேடம் பொவாரி கதை மாத்திரம் தான் என்று கூறுவார். இந்த மேடம் பொவாரி என்ற யதார்த்ததிற்கு மீறி யுல்லிசஸில் இருப்பது நனவோடை உத்தியால் மாத்திரமே. இதைப் பற்றி பேசுவதானால் நவீனத்துவம் என்ற ஒரு இயக்கத்தின் தீவிரத்தினால் ஏற்பட்ட இலக்கிய படைப்புகளை தாழ்த்தி பேசுவது என்பது அல்ல. மாறாக இவ...

போரும் அமைதியும்: ஈடேறிய கனவு

ஞாயிறு இரவு ஒரு மணிக்கு போரும் அமைதியும் நிறைவுற்றது. இதை வாசித்து முடிப்பதே வாழ்கையின் இலட்சியமாகக் கொண்டிருந்தேன். இப்போது பெரும் நிம்மதி. இனி அமைதியாக மற்ற பிரதிகளில் பயணம் செய்யலாம். இக்காவியத்தை வாசித்து முடிக்க எனது முதுகலை இரண்டாம் ஆண்டில் முயற்சி செய்தேன். நல்ல வேலை அது ஈடேராமல் போய்விட்டது. அப்போதைக்கு ஆறுதலாக   Dumasன் Count of Monte Cristo வை மாத்திரம் முழுவதுமாக வாசித்து முடிக்க முடிந்தது. அது ஒரு இளம் வாலிபனின் சாகசக் கதை. எனது வாசிப்பில் அது ஒரு மைல் கல். பல நீண்ட வருடங்களாக போரும் அமைதியும் ஒரு ஈடேராதக் கணவாகவே இருந்து வந்தது. பயணத்தின் அடுத்த சந்திப்பாக தாஸ்தாவஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் என்னை அதிகம் பாதித்தது. அது ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் என்னை தாஸ்தாவஸ்கி பைத்தியமாக்கி விட்டது. காரணம் அது மனிதனின் ஆழத்தையும் அதின் நிஜத்தையும் பற்றிய ஒரு மாபெரும் தத்துவ அலசல்/தேடல். தாஸ்தாவஸ்கியின் உலகத்தை எட்டிப்பார்ப்பது என்பது பாதாளத்தின் ஆழத்தை எட்டிப் பார்ப்பது போன்றதாகும். அதில் பயணிக்க மரணம் என்ற நுழைவு வாயிலை நாம் கடந்தாக வேண்டும். உண்மையில் அது ஒரு எல்லையற்ற பாதாள...

டால்ஸ்டாய் என்கிற காந்தியப் புனிதம்

www.catchnews.com 730 × 419 Search by image டால்ஸ்டாய் என்கிற காந்தியப் புனிதம் நேற்று நண்பர் ராஜனுடன் டால்ஸ்டாய் பற்றி உரையாடிக்கொண்டிருந்தேன். ஒரு ரஷ்ய எழுத்தாளன் எவ்வாறு தன் படைப்புகளின் மூலம் இந்திய தேசத்தின் மகாத்மாவை உருப்பெறச் செய்தார் என்பதைப் பற்றியதாய் இருந்தது அந்த உரையாடல். மெல்ல பேச்சு அம்பேத்கரிடம் திரும்பியது. இதுவரை தலித்திய பார்வையில் அம்பேத்காரைக் கொண்டு காந்தியைக் கண்டவர்கள் அவரை ஒரு தீமையின் வடிவமாகத்தான் கண்டனர். இடது சாரிய பார்வைக்கு (பெண்ணியம் உட்பட) அவர் ஒரு தீமையின் உருவம் தான். எனக்கும் இதில் அதிக உடன்பாடு இருந்தது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை இம்மாமனிதனை என்னால் ஒரு சாதாரண மனிதனாக அடையாளம் காண முடியவில்லை. நம்முடைய பிழையெல்லாம் நாம் அவரை மகாத்மாவாக ஆக்கி விட்டதுதான். மகாத்மா தவறு இழைக்கும் போது நம் மனது இயல்பில் அம்மாமனிதனை தீமையின் உருவமாக கண்டு விடுகிறது.

கதையின் முடிவுக்கு வந்து விட்டீர்கள்: வாசகனில் ஒளிந்திருக்கும் குற்றவாளியை நோக்கிய தேடல்

கதையின் முடிவுக்கு வந்து விட்டீர்கள் : வாசகனில் ஒளிந்திருக்கும் குற்றவாளியை நோக்கிய தேடல் அபிலாஷின் சமீபத்திய நாவலான கதையின் முடிவுக்கு வந்து விட்டீர்கள் நாவலை வாசிக்கும் போது அதை ஒரு குறிப்பிட்ட நாவல் வகைமைக்குள் புகுத்துவது என்பது சிரமமான காரியமாக இருக்கிறது . இது துப்பறியும் நாவலா , திரில்லர் வகைமையா அல்லது வெறுமனே நாவல் மட்டுமா என்ற கேள்வி எழுந்துகொண்டிருக்கிறது . எழுத்தாளன் இந்த வகைமையில் தான் தன் கதையை பரிசோதிக்க போகிறேன் என்று முயற்சி செய்து ஒரு கதையை உருவாக்கி விடுகிறான் ஆனால் கதை தான் எதிர்பார்த்த வகைமைக்கு மீறி எதுவும் அல்லாத ஒரு வகைமையில் நிற்கிறது . இதற்கு காரணம் கதையை பரிசோதனை என்ற முயற்சியில் செய்ததினால் உண்டானதாகும் . விளைவு வகைமைப்பாட்டிற்கு வெளியில் பிரதி தன்னை நிறுத்திக் கொள்கிறது . இங்கு கேள்வி பரிசோதனையில் படைப்பிற்க்கான உயிர் அதில் தக்கவைக்கப்படுகிறதா அல்லது பரிசோதனையில் எதுவும் அற்ற நிலையில் நிறுத்தப்படுகிறதா என்பதுதான் .

”ஈசனருள்”: தமிழ் நவீனத்தில் கதைசொல்லியின் பிறப்பிடம்

 ” ஈசனருள் ”: தமிழ் நவீனத்தில் கதைசொல்லியின் பிறப்பிடம் உயிர்மை நவம்பர் இதழில் வெளியான “ ஈசனருள் ” கதையை வாசித்தேன் . பொதுவாக கதை படித்த உடன் என் போன்ற நபர்கள் கத ’ சூப்பர் ’ சார் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவோம் . காரணம் கதைகள் அவ்வளவாக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை . அதனால் கதையைப் பற்றி பேசுவதற்கு எதுவும் வார்த்தைகள் இருக்காது . ஆனால் சிறந்த கதைகளோ மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி குறைந்தது சில நாட்களுக்காவது சிந்திக்க வைக்கும் , அதைப் பற்றி பேசவும் வைக்கும் . உங்களுடைய எங்கதெ அப்படிப்பட்ட பாதிப்பை உண்டாக்கி நீண்ட நாள் விவாதங்களை துறையில் நண்பர்கள் மத்தியில் ஏற்படுத்தியது .   நான் இந்த கதையை பாராட்ட ’ சூப்பர் ’ என்று சொல்லி கதையை கொச்சைப் படுத்த விரும்பவில்லை .