Skip to main content
                                                  www.amazon.com304 × 500Search by image



இடியட் நாவலின் இந்த அட்டைப் படம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. கதையின் நாயகன் மிஷ்கினுக்குள் இருக்கும் ஆன்மாவை வெளிக்காட்டுகிற சித்திரம் இது. நாவலை வாசிக்கும் முன்பு இச்சித்திரத்தை பார்க்கும் போதெல்லாம் புதிய ஏற்பாட்டில் வருகின்ற சம்பவம் ஞாபகம் வரும். இயேசு கிறிஸ்து கடலின் மறுகரைக்கு தன் சீடர்களுடன் படகில் செல்லுவார். புயல் காற்றும் கடல் கொந்தளிப்பும் மூர்க்கமாக இருக்கும். இயேசுவோ நிம்மதியாக படகில் உறங்கிக் கொண்டிருப்பார். மீதி என்ன நடந்தது என்பது நமக்கே தெரியும். அக்கரைக்கு சென்றவுடன் பேய்பிடித்த ஒருவனை இயேசு குணமாக்குவார். குணமாக்கப் பட்ட நிலையில் இருக்கும் மனிதான் இந்த அட்டைப் படத்தில் இருக்கும் மிஷ்கின். குழப்பத்திலும் கொந்தளிப்பிலும் இருந்து விடுபட்ட ஆன்மாவின் நிலை தான் மகிஷ்கினின் இந்த நிலை. இது பைத்தியத்தின் நிலையும் அல்ல தெளிந்த மனதின் நிலையும் அல்ல. அனைத்திலும் இருந்து விடுபட்ட நிலை இது. ஆனால் இவனை ஏன் தாஸ்தாவஸ்கி இடியட் என்று அழைக்கிறார் என்பது தான் ஆச்சரியமான காரியம். நாவலை வாசித்து முடித்த பின்பு மிஷ்கினை தவிர அனைவரும் இடியட்களாக எனக்கு தெறிந்தார்கள்.

உண்மை என்னவென்றால் நாம் அனைவரும் தெளிந்த மனதை உடையவர்களை என்றும் மனம் பிரழ்ந்தவர்களை பைத்தியங்கள் என்றும் நாம் மதிப்பிடுகிறோம். உண்மையில் ஒரு இலட்சிய மனிதன் இந்த இரண்டு நிலைகளுக்கு அப்பார்பட்டவன். அப்படிப்பட்ட ஒரு மனிதன் தான் இந்த மிஷ்கின். எனினும் இந்த இலட்சிய மனிதன் கரமசோவ் சகோதரர்கள் நாவலின் நாயகன் அல்யோஷாவில் நிறைவடைகிறான்.          



Comments

Popular posts from this blog

காவியமான ஆனைச் சாத்தான்

கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே    கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான பாதிப்புகளை அவை என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. இரட்டைவால் குருவி என்பதும் இவர்களுடைய மற்றொரு பெயர். இரட்டைவால் குருவியைக் காகத்துடன் ஒப்பிடும் போது அவ்வளவு ஒன்றும் பெரிய உருவம் கிடையாது. மிகச்சிறிய உருவம்தான் இந்தக் கரிச்சான் குருவி. வெளிநாட்டவர்கள் இங்கு வந்தால் காகம் என்றுதான் அழைப்பார்கள் போலும். அதன் உடலுக்கு அழகே அந்த வால்தான். நீண்டு கடைசியில் இரண்டாக பிளவுபட்டு இருக்கும். அதனாலேயே இரட்டைவால் குருவி என்று பெயரோ என்னவோ. மற்றபடி வால் சிறுத்திருந்தால் இவரையும் சிறிய காகம் என்றுதான் அழைப்பார்கள். காகம் என்றால் கூட சற்று சாம்பல் நிறம் கழுத்தில் பூத்திருக்கும். அண்டங்காக்கையென்றால் கருப்பா பயங்கரமா இருக்கும். அதீதக் கருப்பும் கருப்பல்ல. சாம்பல் பூத்த கருப்பும் கருப்பல்ல. கரிச்சான் குருவிகளின் நிறம்தான் கருப்புக்கு சிறந்த உதாரணம். அதனாலேயே இவர்கள் கரிச்சான் குருவி என்று அழைக்கப்ப...

இரு துரதிருஷ்டசாலிகள்

இரு துரதிருஷ்டசாலிகள்      என்னுடைய மாருதி 800ல் பழுது பார்க்கும் வேலை கொஞ்சம் இருந்தது. ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றினால் கொதிகலன் அதனை இன்ஜினின் இருபது நிமிட இயக்கத்திற்குக் கூட சுழற்சி செய்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. வெளியில் சென்று வீடு திரும்பும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டி இருந்தது. கடைசியாக டெம்பரேச்சர் முள் அதன் வரைவுக் கோட்டீன் எல்லையைத் தாண்டி ℌ அருகே சென்று கொண்டிருந்தது. இதனை கல்பாக்கம் சென்று கொண்டிருக்கும் போது வண்டி மகாபலிபுரத்தைத் தாண்டி அம்மாவின் பாட்டி ஊரான பெருமாளேரியைக் கடக்கும் போதுதான் கவனித்தேன். ஐந்து மைல் தூரத்திற்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நிறுத்தி இன்ஜினின் வெப்பம் குறையட்டும் என்று ஒவ்வொரு முறையும் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஒருவழியாக இன்ஜினில் இருந்து புகை எதுவும் கிளம்பாத அளவுக்கு பத்திரமாக வண்டியை சென்னைக்குக் திரும்பக் கொண்டுவந்து சேர்த்து விட்டேன்.      பழுதை சரி செய்ய மெக்கானிக் குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்றார். ரேடியேட்டரில் பிரச்சனையாம். இல்லை இல்லை ரேடியேட்டரே பிரச்சனையாம். அதை முழுவதுமாக மாற்றி புதிய ஒ...

Piercing through the Wind

Nostalgic feelings of the nursery rhyme gush to one’s memory whilst the eye gazes at the night sky.  The floating pristine disc invites a dark man from Tamil Nadu, to sing the ever tiding "Nila Nila Odi Va". Rational faculties constantly fall short in studying this moment. Tales and songs usher one to cherish this unforgettable experience. Yet, trained culture merely reasons out ignoring nature. Culture of the learned demands only scientific observation of the starry night.