Skip to main content

Posts

Showing posts from January, 2019

கீழ் வானம் சிவக்கும்

கீழ் வானம் சிவக்கும் பெட்ரிசியன் கல்லூரியில் Phantasia என்னும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களே முன் நின்று  நடத்தும் நிகழ்வு இது. பேராசிரியர்களின் உதவியும் தேவைப்பட்டதால் எங்கள் பங்கிற்கு Face Painting நிகழ்வை ஒருங்கிணைக்கும் வாய்ப்பு எனக்கும் மற்றொரு பேராசிரியருக்கும் கிடைத்தது. போட்டியின் Judge ஆக வந்தவர் ஓவியர் சுஜித் குமார் கந்தன். இளங்கலை மற்றும் முதுகலை ஓவியம் பயின்றவர். இவ்வளவுதான் அவரைப் பற்றி எனக்கு கிடைத்த முன்தகவல். அவர் வரும் வரை அவரைப் பற்றியும் அவரது ஓவியங்கள் பற்றியும் அறிய கூகுளில் சொஞ்சம் நேரம் செலவழித்தேன். அவர் வந்தவுடன் கல்லூரி முதல்வரிடம் அறிமுகம் செய்துவிட்டு, சிறிது நேரம் அவருடன் உரையாடினேன். ஓவியர்களுடனான என் உரையாடல்களில் அதிகம் பேசு பொருட்களாக இருப்பவை இரண்டு: ஒன்று நீல நிறம், மற்றொன்று கியூபிசம். இவ்விரண்டைப் பற்றியும் எவ்வளவு பேசினாலும் அல்லது கேட்டாலும் சோர்வடைய செய்யாதவைகள். புலப்படும் நிறமும்  உருகொண்ட Geometry வடிவங்களும் ஓவியத்தை எப்போதும் புத்தம் புதிதாக காட்டி கொண்டே இருக்கும். புரிதல்கள் புதிது புதிதாக ஓவியத்தைப் பற்றி ஏற்பட்டுக் ...

பிரதிபிம்பம்: கண்ணாடியில் கண்கிறது போலக் கண்டு

பிரதிபிம்பம்: கண்ணாடியில் கண்கிறது போலக் கண்டு அழகு என்பதை வரையறை செய்ய தான் அல்லாத மற்றொன்று அவசியப்படுகிறது. தன்னிலையில் எது ஒன்றும் தன்னுடைய மதிப்பை அறிந்திருக்க முடியாது. பொருள் ஒன்றின் மதிப்பை அறிய மற்றமையின் நிலை அவசியப்படுகிறது. அல்லது தான் என்ற ஒன்றே மற்றமையின் நிலையில் நின்று தன்னையே பார்க்க வேண்டி இருக்கிறது. எது ஒன்றுக்கும் பிரிதொன்றின் இருப்பு அவசியமாகிறது. பிரதிபிம்பத்தையே உதாரணமாக சொல்லலாம். ஒருவர் தன்னை தானே பார்த்துக் கொள்ளும் வரை தான் இன்னார் என்ற பிரக்ஞை அவருக்கு ஏற்படுவதில்லை. தன்னைக் காணும் போது மாத்திரமே அவர் தன்னிலையை அறிகிறார். அதுவரை மற்றவர் பற்றின பிரக்ஞையே அதிகம் மேலிடும். எது ஒன்றின் அழகும் அப்படிப்பட்டதுதான். இதைப் பற்றி பொருள் பட புறிந்து கொள்ள வேண்டுமெனில் Fairy Tale ஒன்று உதவியாக செய்யும். கதையின் தலைப்பு ”மூன்று கண் சகோதரி, ஒற்றைக் கண் சகோதரி, இரண்டு கண் சகோ