Skip to main content

Posts

Showing posts from April, 2019

ஓவியம்: ஒரிஜினலை காப்பியடிக்கும் Imitation

அ டிக்கடி நாம் பார்க்கின்றவைகள் ஒருவித சலிப்பை ஏற்படுத்தி விடுகின்றன . முக்கியமாக பழகிய மனிதர்கள் . மனது விரும்புவது புதுமையான ஒன்றை .   அதே இடம் அதே பழகிய மனிதர்கள் என்றால் இந்த பழகிய எல்லைக் கோட்டில் இருந்து தப்பித்து புதிய உலகத்தை கண்டடைய மனம் ஏ ங்கும் . நம் வரப்புக்கு மீறி அன்னியமான இடத்திற்கு நகரும் போது விட்டுப் பிரிந்த பழகிய இடத்தின் , மனிதர்களின் ,   பொருட்களின் மீதான பந்தம் பிரிவின் ஏக்கத்தை ஏற்படுத்தும் .   புதிய சூழல் பழகும் வரை எற்கனவே விட்டுப் பிரிந்த பழைய வாழ்க்கையின் நினைவுகள் மனதில் இருந்து நீங்காது வாதிக்கும் .   புதிய அனுபவம் பழக்கத்திற்கு உட்படும் வரை ’ பழைய’ என்ற ஒன்று பிரிவின் வேதனையாக மனதிற்குள் நின்று கொண்டே இருக்கும் .  

A Nest of Impermanence

                                                  https://www.google.com/search?q=crow+nest&source=lnms&tbm=isch&sa=X&ved=0ahUKEwj0g6WZ4NnhAhXS7XMBHT6lAlIQ_AUIDigB&biw=1600&bih=740#imgrc=Jc2SIWBkeO6uZM: A Nest of Impermanence Among birds, crows alone seem to be creatures of both curse and blessing. Much ambiguity is there in this kind. For its own fortune, a crow takes curse on its own being. It never fails others of their fortune by visiting them. When it is sitting on a rooftop, it is a sign that a long-awaited well-wisher is coming. If its wings brush against one’s shoulder, it is a sign of misfortune for the day.  Signs are many in his visitation. When it is associated with myth and modern short stories, it is surely a bird of ill omen. We Indians somehow maintain the sanctity of the bird. For us, it is neither the bird of...

காலத்தின் பரிசு

தென்ஆப்பிரிக்காவில்   தனக்கு   கிடைத்த   பெறும்   வெற்றி   நிச்சயம்   தாய்நாட்டுக்கும்   கிடைக்கும்   என்ற   நம்பிக்கையில்   சுதந்திர   தேசம்  பற்றின   கனவுகளை   சுயராஜ்ஜியம்   என்ற   தலைப்பில்   எழுத்துக்களாக   காகிதங்களில்   கன வென  சுமந்து   கொண்டு   துறைமுகத்தில்   நுழைகிறது   அந்த   கப்பல் .   வரலாறு   கண்ட   மாமனிதர்கள்   உருவங்கள்   சித்திரமாக   தீட்டபடாமல்   இருந்திருக்குமானால்   அவர்கள்   உயரம்   நம்   கற்பனைக்கு   அடங்கா மல்  இருந்திருக்கும் .   நெப்போலியன்   ஆறடி  நெட்டையானவராக   நமக்கு   தெரிந்திருப்பார் .  நம்   பார்வைக்கு   குள்ளமானாவர்கள்   அவலட்சணாமானவர்கள் .  நாட்டை   ஆள்பவனின்   உயரம்   அக்குடிகளின்   உயரத்திற்கு   சற்று  உயர    இருக்க   வேண்டும்   என்பது   எல்லோர...

ஆகச் சிறந்த ஆளுமைகள் மூவர்

இலக்கிய கூட்டம் ஒன்றிற்க்கு குஞ்சிதபாதமோ , கட்டியங்காரனோ பங்கேற்காவிட்டால் அந்த கூட்டம் இலக்கிய கூட்டமாகவே கருதமுடியாது . அதுவும் கல்லூரிகளில் நடக்கும் கருத்தரங்குகள் என்றால் மூவர் நிச்சயமாக இருக்க வேண்டும் .   பொதுவாக இம்மூவரில் குஞ்சிதபாதாம் மாத்திரம் விதிவிலக்கு .   நண்பர் எப்போதும் கட்டுரை வாசிப்பவராகதான் இருப்பார் .   கட்டியங்காரன் எப்போதும் புனைவெழுத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் .   ஆய்வுக்கட்டுரைகள் அவருக்கு விளக்கெண்ணை குடிப்பது போன்றது .   குஞ்சிதபாதத்திற்கு புனைவெழுத்தின் மீது   அலாதி விருப்பம் கொண்டவர் என்றாலும் எழுதுவது என்று வரும்பொது ஆய்வெழுத்துதான் அவருக்கு உகந்தது . இருவரும் இரு துருவங்கள் .

மனிதன், தலை சிறந்த சல்லிப்பயல்

ஒருவனது அறிவுத் திறன் எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் இருக்கட்டும் . மற்றொருவனின் பாராட்டுதலின் பேரில் அதன் சிறப்பு   அறியவ ரு கிறது . ஒருவர் பாராட்டி நான் சிறப்படைய வேண்டும் என்று யாரும் யாரிடத்திலும் கூசாமல் கேட்பதில்லை . எனினும் பாராட்டப்படும் தருணம் ஒருவருக்கு மிக மிக அறிய தருணம் . இந்த கொடுக்கல்  வாங்களில் உள்ள சூட்சமம் மிக நுட்பமானது .