என்னுடைய மாருதி 800ல் பழுது பார்க்கும் வேலை கொஞ்சம் இருந்தது. ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றினால் கொதிகலன் அதனை இன்ஜினின் இருபது நிமிட இயக்கத்திற்குக் கூட சுழற்சி செய்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. வெளியில் சென்று வீடு திரும்பும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டி இருந்தது. கடைசியாக டெம்பரேச்சர் முள் அதன் வரைவுக் கோட்டீன் எல்லையைத் தாண்டி H அருகே சென்று கொண்டிருந்தது. இதனை கல்பாக்கம் சென்று கொண்டிருக்கும் போது வண்டி மகாபலிபுரத்தைத் தாண்டி அம்மாவின் பாட்டி ஊரான பெருமாளேரியைக் கடக்கும் போதுதான் கவனித்தேன். ஐந்து மைல் தூரத்திற்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நிறுத்தி இன்ஜினின் வெப்பம் குறையட்டும் என்று ஒவ்வொரு முறையும் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஒருவழியாக இன்ஜினில் இருந்து புகை எதுவும் கிளம்பாத அளவுக்கு பத்திரமாக வண்டியை சென்னைக்குக் திரும்பக் கொண்டுவந்து சேர்த்து விட்டேன்.
NOTES FROM PANDEMONIUM
Wednesday, December 31, 2025
இரு துரதிருஷ்டசாலிகள்
Monday, December 16, 2024
வாசிக்கும் போதே இந்த தன் வரலாற்று நூலின் சில பகுதிகளைப் பகிராமல் இருக்க முடியவில்லை. பௌத்த வேட்கையின் பயணத்தில் கொஸாம்பி எடுத்து வைத்த முதல் அடி அர்னால்ட் எழுதிய, ”Light of Asia” ஆகும். அது அவரைத் தேடி அவரிடம் தானாக வந்தடைந்த புத்தகம். கொஸாம்பி இதனை மராத்தி மொழிபெயர்ப்பில் வாசித்திருக்கிறார். இதனை மொழிபெயர்ப்பில் முழுமையாக வெளிப்படாத நூல் என்கிறார்கள். மூல நூலில் இருந்து ஆறில் ஒரு பங்கு மட்டுமே வெளிப்பட்ட அந்த மராத்தி மொழிபெயர்ப்பு நூல் கொஸாம்பியை பெருமளவில் கவர்ந்திருக்கிறது. மூல நூல் ஆங்கிலத்தில் இருப்பதால் ஆங்கிலத்தையும் கற்க தயாராக இருந்திருக்கிறார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நூல் கௌதம புத்தரின் வாழ்க்கையை விவரிக்கும் கவிதை நடையில் எழுதப்பட்ட கதைசொலல் ஆகும். மேலும் மேலும் பௌத்தத்தை பற்றி கற்க விரும்புகிறார். அதற்கு மொழி அவருக்கு ஒரு தடையாக இருந்திருக்கவில்லை. ஏற்கனவே அவர். இங்கே பூனேவுக்கு வந்த நோக்கமே எப்படியாவது சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்பதுதான். அதுகூட பௌத்ததை முழுமையாக் கற்பதற்குத்தானோ! பௌத்ததைப் பற்றி மேற்கொண்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இலங்கை அல்லது நேபாளத்திற்கு போக வேண்டும் என்கிறார்கள். எந்த வித தயக்கமும் இன்றி அந்த பெரும் பயணத்திற்கு அவர் தயாராகிறார்.
Sunday, August 25, 2024
”இது கதையல்ல மெய்”
”இது கதையல்ல மெய்”
ஆசையே துன்பங்கள் அனைத்துக்கும் காரணம். ஆசையை விடும் போது மனிதன் துன்பத்தின் பிடியில் இருந்து விடுபடுகிறான். இது என்றோ சொன்ன வாக்கானாலும் இன்றும் அதில் எவ்வளவு உண்மை பொதிந்து இருக்கிறது. இதனை மேலோட்டமாக ஒருவர் சொல்லக் கேட்கும் போது, ”ஆசை இல்லாத மனிதர் யாராவது உண்டா?” என்று நம்மிடம் சொல்லப்பட்ட அந்த வாக்கியத்தின் மீதே எதிர் வாதம் செய்ய ஆரம்பித்து விடுகிறோம். தங்கத்தை மையமாக வைத்து நிகழும் திரைக்கதை ஒன்றின் வழியே இந்த வாக்கியத்தை வாசிக்கும் போது அது ஏதோ துறவி ஒருவர் என்றோ சந்நதமாக உதிர்த்த வாக்கியமாக தோன்றவில்லை. அது சமூக யதார்த்தத்தில் நிலவும் அவலத்தை கண்டு வேதனையில் உதிர்த்த பரிவு மிக்க வார்த்தைகள் என்று திரைக்கதையை பார்கும் போது தோன்றுகிறது. தங்கத்தின் மீதான ஆசை மனிதனை எவ்வளவு பேராசை கொண்டவனாக ஆக்குகிறது! மேலும் அவனை அது வன்முறையாளனாகவும் மாற்றுகிறது. வரலாறு கூறவருவது; தங்கத்தின் மீதான பேராசையும், நிலத்தின் மீதான பேராசையும் மனிதர்களை காலங்கள் தோறும் வன்முறையாளர்களாக மாற்றிக் கொண்டே இருக்கின்றன என்பதுதான்.
இரு துரதிருஷ்டசாலிகள்
இரு துரதிருஷ்டசாலிகள் என்னுடைய மாருதி 800ல் பழுது பார்க்கும் வேலை கொஞ்சம் இருந்தது. ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றினால் கொதிகலன் அதனை இன்ஜி...
-
கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் ப...
-
Nostalgic feelings of the nursery rhyme gush to one’s memory whilst the eye gazes at the night sky. The floating pristine disc invite...
-
Four Legs Good Two Legs Bad I was reaching Velachary station. The speaker in the train announces that the station is the last one an...