Skip to main content

Posts

Showing posts from July, 2016

THE "EVERYDAYNESS"

                                                                               www.thehindu.com 465 × 636 Search by image                                                                                                THE "EVERYDAYNESS"  Shiv Viswanathan is one of my favorite column writers in The Hindu. Each and every day I read the editorial page with a self-imposed compulsion. When Shiv comes, the day is made. Today, the editorial editorial page carried a brilliant article by the columnist. He says that “everydayness” is rev...

செவ்வியல் காட்டும் உலகம்: தொடுவானம் தொடும் விரிந்தகன்ற பார்வை

        meaningness.com 437 × 560 Search by image / The Mountain: a view from hell yes செவ்வியல் காட்டும் உலகம்: தொடுவானம் தொடும்  விரிந்தகன்ற  பார்வை டால்ஸ்டாய் மற்றும் தாஸ்தாவஸ்கியை படிக்கும் போதெல்லாம் குறிப்பிட்ட உணர்வு இப்படைப்பாளிகளை பற்றிய புறிதலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். ஆனால் அது இதுதான் என்று வார்தையில் கூறமுடியாத உணர்வாக இருக்கும். எனினும் இவர்களின் படைப்புகள் வாழ்க்கையின் ஆழத்தையும் மேல்நோக்கிய பிரபஞ்சத்தின் உயரத்தையும் காட்டுபவைகளாக இருந்தன. குறிப்பாக கரமசோவ் சகோதர்கள் மற்றும் போரும் வாழ்வும் இது போன்ற உணர்வை எப்போதும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். எனினும் ஆழத்தை அதன் ஆழத்தில் இருந்து பார்க்க முடியாது. அதே போன்று உயரத்தின் எல்லையை அதன் முடிவில் சென்று காண முடியாது.

மேற்கத்திய ஆளுமையில் சாதியைப் பற்றிய அறிவுசார் விசாரணை

மேற்கத்திய ஆளுமையில் சாதியைப் பற்றிய அறிவுசார் விசாரணை கடர்கரையில் நண்பர்கள் அனைவரும் அம்பேத்கரின் முன்னுரைகளை மையமாக வைத்து அதில் எவ்வாறு இலக்கியம் தத்துவம் ஆகியவற்றின் தாக்கம் அவரில் மேலோங்கி நிற்கிறது என்பதைப் பற்றிய ஒரு விசாரணையில் வாசிக்க ஆரம்பித்தோம். இதுபோன்று மொட்டைத்தலைக்கும்  முழங்காலுக்கும் முடிச்சு போடுவது அபத்தமான காரியம் தான். எனினும் மறைக்கப் பட்ட உண்மையை பற்றி பேசும் போது இது போன்ற அபத்தம் என்னும் முற்று புள்ளி உண்மையை வெளிச்சப்படுத்துவதற்கு மிகம் பெரிய அபத்தம் ஆகும். அம்பெத்கருடைய கட்டுரைகளை வாசிக்க நேர்கையில் ஒரு பொருள் கொண்ட விசாரணைமாத்திரமே அவைகளில் இருக்கும். சாதியை பற்றிய எதிர்ப்பு குரள் மாத்திரமே அம்பேத்கரின் ஆய்வு பணி. இது அவருடைய ஆளுமை ஒரு சிறிய சட்டகத்திற்குள் சுருக்கி விடுகிறது. இதற்கு வெளியில் அவருடைய சக மனிதத் தன்மை அறிவு ஜீவி தன்மை என்பவைகள் முற்றிலும் அறியப்படாத ஒன்றாகும். சாலையின் முடிவில் இருக்கும் சிலையும் பாடபுத்தகங்களில் ஒரு கண்ணாடி அணிந்த உருண்ட முகமும் தான் அவருடைய அடையாளங்களாக இருகின்றன. இதற்கு மீறின அவருடைய வாழ்க்கை சார்ந்த குறிப்புகளில் ...
                                                   www.amazon.com 304 × 500 Search by image இடியட் நாவலின் இந்த அட்டைப் படம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. கதையின் நாயகன் மிஷ்கினுக்குள் இருக்கும் ஆன்மாவை வெளிக்காட்டுகிற சித்திரம் இது. நாவலை வாசிக்கும் முன்பு இச்சித்திரத்தை பார்க்கும் போதெல்லாம் புதிய ஏற்பாட்டில் வருகின்ற சம்பவம் ஞாபகம் வரும். இயேசு கிறிஸ்து கடலின் மறுகரைக்கு தன் சீடர்களுடன் படகில் செல்லுவார். புயல் காற்றும் கடல் கொந்தளிப்பும் மூர்க்கமாக இருக்கும். இயேசுவோ நிம்மதியாக படகில் உறங்கிக் கொண்டிருப்பார். மீதி என்ன நடந்தது என்பது நமக்கே தெரியும். அக்கரைக்கு சென்றவுடன் பேய்பிடித்த ஒருவனை இயேசு குணமாக்குவார். குணமாக்கப் பட்ட நிலையில் இருக்கும் மனிதான் இந்த அட்டைப் படத்தில் இருக்கும் மிஷ்கின். குழப்பத்திலும் கொந்தளிப்பிலும் இருந்து விடுபட்ட ஆன்மாவின் நிலை தான் மகிஷ்கினின் இந்த நிலை. இது பைத்தியத்தின் நிலையும் அல்ல தெளிந்த மனதின் நிலையு...

கிழவனும் கடலும்: பரிசோ இலக்கோ இல்லாத நம்பிக்கையின் பயணம்

starashbraswell.wordpress.com 640 × 513 Search by image   starashbraswell  கிழவனும்  கடலும்: பரிசோ இலக்கோ இல்லாத நம்பிக்கையின் பயணம் இலக்கியத்தில் இசங்கள் பல வந்த பிறகும் ஹெம்மிங்வே மாத்திரம் தன்னை ஒரு குறிப்பிட்ட வகைமைக்குள் தினித்துக் கொள்ளாமல் தனித்து நிற்கும் படைப்புகளை தந்தவர். ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்றவர்கள் தங்களுடைய புனைவுகளில் ஒரு குறிப்பிட்ட மனோவியல் உத்தியை கையாளாமல் இருந்திருந்தால் அவர்கள் படைப்புகள் ஆரம்ப நிலையில் இருந்த யதார்த்த புனைவுகளாக தான் இருந்திருக்கும். யதார்த்ததிற்கும் மீறிய பரிசோதனை முயற்சி மாத்திரமே அவர்களை தனித்து நிற்பவர்களாக காட்டியது. எட்மன்ட் வில்சன் என்ற விமசர்சகர் ஜாய்சின் யுல்லிசஸ் பற்றி விவாதிக்கும் போது, நனவோடை உத்தியை மீறி ஜாய்சிடம் இருப்பது வெறுமனே மேடம் பொவாரி கதை மாத்திரம் தான் என்று கூறுவார். இந்த மேடம் பொவாரி என்ற யதார்த்ததிற்கு மீறி யுல்லிசஸில் இருப்பது நனவோடை உத்தியால் மாத்திரமே. இதைப் பற்றி பேசுவதானால் நவீனத்துவம் என்ற ஒரு இயக்கத்தின் தீவிரத்தினால் ஏற்பட்ட இலக்கிய படைப்புகளை தாழ்த்தி பேசுவது என்பது அல்ல. மாறாக இவ...

போரும் அமைதியும்: ஈடேறிய கனவு

ஞாயிறு இரவு ஒரு மணிக்கு போரும் அமைதியும் நிறைவுற்றது. இதை வாசித்து முடிப்பதே வாழ்கையின் இலட்சியமாகக் கொண்டிருந்தேன். இப்போது பெரும் நிம்மதி. இனி அமைதியாக மற்ற பிரதிகளில் பயணம் செய்யலாம். இக்காவியத்தை வாசித்து முடிக்க எனது முதுகலை இரண்டாம் ஆண்டில் முயற்சி செய்தேன். நல்ல வேலை அது ஈடேராமல் போய்விட்டது. அப்போதைக்கு ஆறுதலாக   Dumasன் Count of Monte Cristo வை மாத்திரம் முழுவதுமாக வாசித்து முடிக்க முடிந்தது. அது ஒரு இளம் வாலிபனின் சாகசக் கதை. எனது வாசிப்பில் அது ஒரு மைல் கல். பல நீண்ட வருடங்களாக போரும் அமைதியும் ஒரு ஈடேராதக் கணவாகவே இருந்து வந்தது. பயணத்தின் அடுத்த சந்திப்பாக தாஸ்தாவஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் என்னை அதிகம் பாதித்தது. அது ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் என்னை தாஸ்தாவஸ்கி பைத்தியமாக்கி விட்டது. காரணம் அது மனிதனின் ஆழத்தையும் அதின் நிஜத்தையும் பற்றிய ஒரு மாபெரும் தத்துவ அலசல்/தேடல். தாஸ்தாவஸ்கியின் உலகத்தை எட்டிப்பார்ப்பது என்பது பாதாளத்தின் ஆழத்தை எட்டிப் பார்ப்பது போன்றதாகும். அதில் பயணிக்க மரணம் என்ற நுழைவு வாயிலை நாம் கடந்தாக வேண்டும். உண்மையில் அது ஒரு எல்லையற்ற பாதாள...