Skip to main content

Posts

Showing posts from August, 2024

”இது கதையல்ல மெய்”

                                                               ”இது கதையல்ல மெய்”       ஆசையே துன்பங்கள் அனைத்துக்கும் காரணம். ஆசையை விடும் போது மனிதன் துன்பத்தின் பிடியில் இருந்து விடுபடுகிறான். இது என்றோ சொன்ன வாக்கானாலும் இன்றும் அதில் எவ்வளவு உண்மை பொதிந்து இருக்கிறது. இதனை மேலோட்டமாக ஒருவர் சொல்லக் கேட்கும் போது, ”ஆசை இல்லாத மனிதர் யாராவது உண்டா?” என்று நம்மிடம் சொல்லப்பட்ட அந்த வாக்கியத்தின் மீதே எதிர் வாதம் செய்ய ஆரம்பித்து விடுகிறோம். தங்கத்தை மையமாக வைத்து நிகழும் திரைக்கதை ஒன்றின் வழியே இந்த வாக்கியத்தை வாசிக்கும் போது அது ஏதோ துறவி ஒருவர் என்றோ சந்நதமாக உதிர்த்த வாக்கியமாக தோன்றவில்லை. அது சமூக யதார்த்தத்தில் நிலவும் அவலத்தை கண்டு வேதனையில் உதிர்த்த பரிவு மிக்க வார்த்தைகள் என்று திரைக்கதையை பார்கும் போது தோன்றுகிறது. தங்கத்தின் மீதான ஆசை மனிதனை எவ்வளவு பேராசை கொண்டவனாக ஆக்குகிறது! மேலும் அவனை...

மனதில் குடிகொள்ளும் உயிர்கொண்ட சொற்கள்

வரும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளை இந்த வாரத்திலேயே நடத்தி முடித்தாக வேண்டியிருந்தது .  நேற்று தமிழ்த்துறை நண்பர்கள் போட்டிகளுக்கான தலைப்புகளைப் பற்றி விவாத்தித்துக் கொண்டிருந்தனர் . போட்டிகளின் தலைப்பு சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றியதாக இருந்தாக வேண்டும் என்பது நிபந்தனை . அதிலும் முக்கியமாக அது காலத்தில் நாம் மறந்து போன வீரர்களைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்பது அழுத்தம் கூடிய நிபந்தனை . ” ஐயா , பாருங்கள்   தலைப்புக்கு இந்த catchy வார்த்தை எடுபடுமா ” என்றார் ஒருவர் . அவர் சொன்ன அந்த வார்த்தை ,' அறியப்படாத ' என்பதாகும். "' அறியப்படாத ' இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் " அறியப்படாத என்ற வார்த்தை தலைப்புக்கு   Catchy யாக இருந்தாலும் இந்திய என்ற வார்த்தை கட்டுரையின் தலைப்புக்கான அழகை கொஞ்சம் மங்கச் செய்வது போன்று இருந்தது . தலைப்பு சொற்றொடர் போன்று நீண்டுவிடுகிறது . என்னுடைய இந்த எண்ணத்தை உடனடியாக தெரிவித்தேன் . ” சார் ,   நீட்டி அளக்காமல் வெறுமனே சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று வைத்துக் கொள்வோமே ஏன் ' இந்திய ...