சாராயம் அருந்தாத ஐந்து பேரை கிராமங்களில் பார்ப்பது அரிது. மதுவுக்கு அடிமையானவர்கள்/ஆகாதவர்கள் என்று வேறு பிரித்து வைத்து பார்க்கிறோம். இதனை அதிகம் ஒழுக்கத்தோடு தொடர்புப்படுத்தி பார்த்துவிட்டோம். ஐந்து பேர் மாத்திரம் சாராயம் குடித்துவிட்டு மற்ற ஆண்கள் அனைவருமே யோக்கியர்களாக இருந்தால் அந்த ஐந்து பேரை ஒழுக்கத்தின் சாட்டையால் தண்டித்துவிடலாம். இப்போது பிரச்சனை ஐந்து பேர் யோக்கியர்களாகவும் மற்ற அனைத்து கிராமத்தார்கள் குடிகாரர்களாகவும் இருப்பது நம்மை யோசிக்க வைக்கிறது. அந்த ஐந்து பேரைக் கொண்ட குழு இயல்பானதா? அல்லது ஊர் முழுக்க குடிகாரர்களாக இருப்பது இயல்பானதா? என்பதும் கேள்வியே. இந்தக் கேள்வி என் சிறுவயதுமுதல் கேள்வியாக இல்லாமல் ஒருவித குழப்பமாகவே இருந்து வந்திருக்கிறது. அந்த ஐந்து பேர் மாத்திரம் ஏன் விதிவிலக்காக இருக்கிறார்கள் என்பதுவும் ஆச்சரியமூட்டுகிறது. அவ்வளவு சுய கட்டுப்பாடு கொண்டவர்களா அந்த ஐந்து பேர்கள்? இமயம் தன்னுடைய சிறுகதை ஒன்றில் “ஏன் எங்கள் தெரு பெண்களுக்கு மாத்திரம் பேய் பிடிக்கிறது?” என்ற கேள்வியைக் கேட்பார். அதே கேள்வியை நானும் “ஏன் அந்த ஐந்து பேரைத் தவிர்த்து மற்றவ...