Skip to main content

ஓலைச்சுவடியில் என்ன இருக்கிறது?

ஓலைச்சுவடியில் என்ன இருக்கிறது?

தமிழ்த்துரை மாணவர்கள் எப்போதும் எளிமையாக காட்சியளிப்பவர்கள். அட, இவர்களிடம் என்ன இருக்க போகிறது என்ற எண்ணம் எப்போதும் இருந்துகொண்டிருக்கும். சற்று அருகில் சென்று விவாதிக்கும் போதுதான் தெரியும் ஆங்கிலத்துரை மாணவர்கள் கற்க வேண்டியது அதிகம் அவர்களிடம் இருக்கிறது என்பது. ஆனால் இடைவெளி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இந்த இடைவெளி உடையும் போது கிடைக்கும் ஆதாயம் இருசாராருக்கும் அதிகம். தமிழ்துரை மாணவர்கள் கட்டுரைகளை படிக்கும் போது அதிகம் கோட்பாடுகளை அள்ளி வீச மாட்டார்கள். தரவுகளை சேகரித்து நேர்த்தியான விதத்தில் தருவதில் கைத்தேர்ந்தவர்கள். ஆனால் ஆங்கிலத்துரை மாணவர்கள் பீட்டர் இங்லீஷ்சை வைத்துக் கொண்டு ஒரு கருத்தை மாத்திமே வைத்து கொண்டு வீடு கட்டிவிடுவார்கள். இது மொழி சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம். ஆனாலும் அவர்களிடம் கற்க வேண்டியது அதிகம்.
        எங்கள் துரைக்கு தமிழ் துரையில் இருந்து Mphil மாணவர் ஒருவர் தனது உதவித் தொகை சார்ந்த ஆய்விர்க்கு ஓலைச் சுவடி பற்றிய தனது ஆய்வரிக்கை திட்டத்தை மொழி பெயர்த்து தரும்படி எங்களை அணுகினார். சற்று தயக்கத்துடன் ஆய்வரிக்கையை வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். ஓலைசுவடியில் என்ன இருக்கிறது அதை ஆய்வு செய்வதற்கு, என்று தான் மொழிபெயர்ப்பை ஆரம்பித்தேன். அறிக்கையின் மொழிபெயர்ப்பில் உள்ளே செல்ல செல்ல தான் தமிழின் பிரம்மாண்டம் என்ன என்பதை உணர ஆரம்பித்தேன். வெறும் அரை மணி நேரம் தான் செலவழித்தேன். நான் செய்த மொழி பெயர்ப்புகளில் மிகக் குறைந்த நேரத்தில் முடித்த மொழி பெயர்ப்பு இது மாத்திரமே.
நம்முடைய தமிழும் அதன் இலக்கியமும் பல ஆயிரம் ஆண்டுகள் தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காரணம் அவைகளை இந்த ஓலைச் சுவடிகள் இன்றைய பேப்பர் புத்தகத்தை விட அதிகம் பாதுகாத்து வைத்திருந்திருக்கிறது. இதைப் பற்றி அதிகம் இங்கே பேசுவது நல்லது அல்ல. காரணம் இது மற்றவருடைய ஆய்வு. எனினும் அப்போதுதான் நான் தமிழின் உண்ணத்தை உணர ஆரம்பித்தேன். மொழி பெயர்த்து அவரிடம் தந்த போது அந்த அப்பாவித்தனமான முகம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இவ்வளவு பெரிய தகவல்களை தந்துவிட்டு எவ்வளவு மிடுக்கு அவரிடம் இருக்க வேண்டும்.
தமிழை பற்றிய பெருமிதத்தை அந்த நண்பர் அதிகம் ஏற்படுத்திவிட்டார். ஆங்கிலத்துரையில் இருக்கிறவர்களுக்கான பொறுப்பு அதிகம் இருக்கிறது. கோட்பாடுகளையும். இசங்களையும் கற்று என்ன பயன். இப்போது நம்மிடம் இருக்கும் மிகப் பெரிய கோரிக்கை மொழிப்பெயர்ப்பிற்கான ஆங்கிலத்தை செழுமைப் படுத்த வேண்டும் என்பதுதான்.   

Comments

Popular posts from this blog

காவியமான ஆனைச் சாத்தான்

கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே    கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான பாதிப்புகளை அவை என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. இரட்டைவால் குருவி என்பதும் இவர்களுடைய மற்றொரு பெயர். இரட்டைவால் குருவியைக் காகத்துடன் ஒப்பிடும் போது அவ்வளவு ஒன்றும் பெரிய உருவம் கிடையாது. மிகச்சிறிய உருவம்தான் இந்தக் கரிச்சான் குருவி. வெளிநாட்டவர்கள் இங்கு வந்தால் காகம் என்றுதான் அழைப்பார்கள் போலும். அதன் உடலுக்கு அழகே அந்த வால்தான். நீண்டு கடைசியில் இரண்டாக பிளவுபட்டு இருக்கும். அதனாலேயே இரட்டைவால் குருவி என்று பெயரோ என்னவோ. மற்றபடி வால் சிறுத்திருந்தால் இவரையும் சிறிய காகம் என்றுதான் அழைப்பார்கள். காகம் என்றால் கூட சற்று சாம்பல் நிறம் கழுத்தில் பூத்திருக்கும். அண்டங்காக்கையென்றால் கருப்பா பயங்கரமா இருக்கும். அதீதக் கருப்பும் கருப்பல்ல. சாம்பல் பூத்த கருப்பும் கருப்பல்ல. கரிச்சான் குருவிகளின் நிறம்தான் கருப்புக்கு சிறந்த உதாரணம். அதனாலேயே இவர்கள் கரிச்சான் குருவி என்று அழைக்கப்ப...

இரு துரதிருஷ்டசாலிகள்

இரு துரதிருஷ்டசாலிகள்      என்னுடைய மாருதி 800ல் பழுது பார்க்கும் வேலை கொஞ்சம் இருந்தது. ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றினால் கொதிகலன் அதனை இன்ஜினின் இருபது நிமிட இயக்கத்திற்குக் கூட சுழற்சி செய்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. வெளியில் சென்று வீடு திரும்பும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டி இருந்தது. கடைசியாக டெம்பரேச்சர் முள் அதன் வரைவுக் கோட்டீன் எல்லையைத் தாண்டி ℌ அருகே சென்று கொண்டிருந்தது. இதனை கல்பாக்கம் சென்று கொண்டிருக்கும் போது வண்டி மகாபலிபுரத்தைத் தாண்டி அம்மாவின் பாட்டி ஊரான பெருமாளேரியைக் கடக்கும் போதுதான் கவனித்தேன். ஐந்து மைல் தூரத்திற்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நிறுத்தி இன்ஜினின் வெப்பம் குறையட்டும் என்று ஒவ்வொரு முறையும் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஒருவழியாக இன்ஜினில் இருந்து புகை எதுவும் கிளம்பாத அளவுக்கு பத்திரமாக வண்டியை சென்னைக்குக் திரும்பக் கொண்டுவந்து சேர்த்து விட்டேன்.      பழுதை சரி செய்ய மெக்கானிக் குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்றார். ரேடியேட்டரில் பிரச்சனையாம். இல்லை இல்லை ரேடியேட்டரே பிரச்சனையாம். அதை முழுவதுமாக மாற்றி புதிய ஒ...

கெய்ஷா: ஆண் அகங்காரத்தின் மீட்டெடுப்பு

கெய்ஷா :   ஆண்   அகங்காரத்தின்   மீட்டெடுப்பு ஜெயமோகனின்   கெய்ஷா   சிறுகதை தன்னில் தானே ஒரு வசிகரத்தை வைத்துக் கொண்டு வாசிப்பை வலியின்றி தன்னுள் இலகுவாக பயணிக்கச் செய்யும் கதையாகும் . அவருடைய வலைபக்கத்தில் கதையை பார்த்தவுடன் முழுவதையும் வாசித்து விட வேண்டும் என்ற தீர்மானம் ஏற்பட்டது . கதை ஆரம்பித்ததுதான் தெரியும் எப்படி முடிந்தது என்று எண்ணம் கொஞ்சம் கூட இல்லை . அதுதான் ஒரு சிறந்தக் கதைக்கான இயல்பு . உண்மையில் அன்று காலை , வாசிப்புக்கு ஏற்ற காலையாக இருக்கவில்லை . நோக்கம் எதுவும் இன்றி எதை எதையோ இயந்திரத்தனமாக செய்து கொண்டிருந்தேன் . அந்தத் தருணத்தில் கதை தன்னுடையை கரங்களை கெய்ஷாவைப் போல் தன்னுள் என் வாசிப்பை அரவணைத்துக் கொண்டது .