Skip to main content

Posts

Showing posts from August, 2016

வெற்றிடம் விழுங்கும் இராட்சத வார்த்தை

dostoyevsky.tumblr.com 583 × 727 Search by image வெற்றிடம் விழுங்கும் இராட்சத வார்த்தை எழுத்தாளனக்கு தேவையானதெல்லாம் தான் சுதந்திரமாக எழுதுவதற்கான ஒரு பத்தி அவ்வளவுதான். அதில் அவன் நினைப்பது அனைத்தும் எழுதப்படுகிறது. அந்தப் பத்தி எந்த ஒரு கட்டுப்பாட்டையும் எழுத்தாளன் மீது விதிக்காது. தன் சுதந்திரம் முழுவதும் அந்த குறிப்பிட்ட பத்திக்குள் கட்டற்று செயல்பட ஆரம்பிக்கிறது. பொதுவாக வார மற்றும் மாத பத்திரிக்கைகளில் ஒதுக்கப்படும் பத்திகள் சிறுகதைகளுக்காகவும், கட்டுரைகளுக்காகவும், கவிதைகளுக்காகவும், மற்றும் மதிப்புரைகளுக்காகவும் இருக்கின்றன. அந்த பத்திகள் சுதந்திர சிந்தனைக்கான அடக்குமுறையாகும். இவைகள் எழுத்தாளனை இப்படித்தான் எழுத வேண்டும் என்று ஒரு வடிவத்திற்குள் கட்டுப்படுத்துகின்றன. அவனை ஒரு வகையான எழுத்தின் கட்டுப்பாட்டுக்குள் அடைத்து விடுகின்றன. அதற்காக இவைகள் கூடாது என்றல்ல. இவைகள் கட்டாயமானவைகள். சுதந்திரமானவைகள் அல்ல. எனினும் படைப்பு என்பதை இந்த குறிப்பிட்ட வகைமையின் வடிவத்தில் தான் எழுத வேண்டும் என்று வற்புறுத்த முடியாது. ஒரு பக்கத்தில் வடிவங்களுக்காக படைப்புகள் உ...

ஓலைச்சுவடியில் என்ன இருக்கிறது?

ஓலைச்சுவடியில் என்ன இருக்கிறது ? தமிழ்த்துரை மாணவர்கள் எப்போதும் எளிமையாக காட்சியளிப்பவர்கள் . அட , இவர்களிடம் என்ன இருக்க போகிறது என்ற எண்ணம் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் . சற்று அருகில் சென்று விவாதிக்கும் போதுதான் தெரியும் ஆங்கிலத்துரை மாணவர்கள் கற்க வேண்டியது அதிகம் அவர்களிடம் இருக்கிறது என்பது . ஆனால் இடைவெளி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் . இந்த இடைவெளி உடையும் போது கிடைக்கும் ஆதாயம் இருசாராருக்கும் அதிகம் . தமிழ் துரை மாணவர்கள் கட்டுரைகளை படிக்கும் போது அதிகம் கோட்பாடுகளை அள்ளி வீச மாட்டார்கள் . தரவுகளை சேகரித்து நேர்த்தியான விதத்தில் தருவதில் கைத்தேர்ந்தவர்கள் . ஆனால் ஆங்கிலத்துரை மாணவர்கள் பீட்டர் இங்லீஷ்சை வைத்துக் கொண்டு ஒரு கருத்தை மாத்திமே வைத்து கொண்டு வீடு கட்டிவிடுவார்கள் . இது மொழி சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம் . ஆனாலும் அவர்களிடம் கற்க வேண்டியது அதிகம் .