Skip to main content

Posts

Showing posts from 2018

சொற்கள் உண்ட செய்தி

சொற்கள் உண்ட செய்தி மூடி மறைப்பதற்கு அந்தரங்க ரகசியங்களும் இல்லை, ஊரே அறியும்படியான வெளிப்படையான உண்மைகளும் இல்லை. பொய்கள் உண்மையென நம்பப்படுகின்றன. உண்மை தர்க்கங்களால் நம்பும்படியான பொய்யாக உருமாற்றம் அடைகிறது. உண்மை/பொய் என்ற பெயரிடுதலே கூடிய சீக்கிரத்தில் அபத்தமாகிவிடும். எஞ்சியிருப்பது இரண்டு மாத்திரமே – இரகசியம், வதந்தி. பொருள் ஒன்றின் உண்மைத்தன்மையை அல்லது அதன் பொய்மையை அறிய/அடைய இந்த இரண்டு வழி பாதைகள் வழியே பயணிக்க வேண்டியிருக்கிறது. நிச்சயம் சென்று சேரும் இடம் இந்த இரட்டை நிலையங்களாகத்தான் இருக்கும். பொருள் ஒன்று தன்னை ஏதுமற்ற நிலையில் நிறுத்திக் கொள்ள முடியாது. தன் இருத்தலை மெய்ப்பிக்க பெயர் சுட்டிகளான உண்மை, பொய் என்பன அவசியப்படுகின்றன. ஒன்றினை சரி என்று முடிவு செய்து திரும்பிப் பார்க்கும் போதே அது பொய் என வேறொருவரால் மெய்ப்பிக்கப் பட்டுவிடுகிறது. ”சரி, நீ பொய் என்று ஒப்புக்கொள்கிறேன்” என்ற நிலைக்கு வரும் போது மெய்ப்பொருள் மூர்க்கம் கொண்டு சண்டைக்கு வந்துவிடுகிறது. இது புதிர் விளையாட்டு.

The Stately Ruler

The Stately Ruler Certain objects always seem to be the species of past. They remain not of the time which has been faded by the rhythmic ‘tick’ of the clock. They stay in the remote corner of one’s memory. When silence engulfs the memory, solitude gives life to the past and brings it to the present with an exquisite beauty. People may call it by the names ‘nostalgic’ and ‘memoire’. When an object of the past comes to the present in such a fashion it brings everything of the past and enchants the one who ponders it. If anyone thinks about the ‘ruler’ it must be the matter of reminisce.

இடைவெளி

சிறுபத்திரிகை விதை போன்றது அது எப்பேர்ப்பட்ட பாறையையும் உடைத்துக் முளைத்து  கொண்டு  வெளிவந்துவிடும் என்று கி ரா சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்போது இடைவெளி இதழின் ஆசிரியர் குழுவில் இருப்பது பெரும் மகிழ்ச்சி. நண்பர் சேது டார்வினுடன்  (#Sethu Darwin) உரையாடலில் விளைந்த ரணாடே கட்டுரையும் இதில் வெளிவந்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி. கட்டுரைகளை வெறும் கதை கவிதைகள் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறோமே இதைத் தவிர்த்து பிரதிக்கு வெளியே இருப்பதைப் பற்றி எழுத நம்மால் இயலாதோ என்ற ஆதங்கம் இருந்ததுண்டு. இக்கட்டுரை அதனை நிவர்த்தி செய்து வைத்தது. இலக்கியத்தின் வழியே ரணாடேவைப் பற்றி எழுதிய இலக்கியம் சாராத எனது முதல் கட்டுரை இது. எழுதி பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆசிரியர் குழுவில் கிடைத்த நண்பர்கள் நமக்கு மற்றுமொரு புதிய ஆரம்பம். நண்பர்கள் அடிக்கடி சந்தித்து உரையாடியதில் இதற்கு முன்பு வரை பயந்து கொண்டு தொடாமல் விட்டு வைத்திருந்த போர்கே கைவசமானார். ஆசிரியர் குழுவின் கூடுகையில் ஒவ்வொரு சந்திப்பும் புதிய புதிய திறப்புகளை உண்டாக்கிக் கொண்டே இருக்கின்றன. என் மீது நம்பிக்கைக் வைத்து ஆசிரியர் குழுவில் என்னை...

சந்தி கிழவனின் பாக்கு வெட்டி

சந்தி கிழவனின் பாக்கு வெட்டி பித்தன் பாக்கு வெட்டியைப் பற்றி கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். கட்டுரை காணாமல் போன பாக்கு வெட்டியைப் பற்றியது. பாக்கு வெட்டி கவிஞரின் உதவிக்காரனா அல்லது உண்மையிலேயே பாக்கு வெட்டி வெறும் இரும்பு கருவியா என தீர்க்கமாக சொல்லாமல் கட்டுரையை சிறிய அளவில் மாபெரும் சூட்சமமாக நீட்டுகிறார் பித்தன். வாசிக்கும் நமக்கு “பாக்கு வெட்டி” என்ற வார்த்தை விளையாட்டு படு ஜாலியாக இருக்கிறது. முதல் முறை வாசிக்கும் போது பாக்கு வெட்டி என்ற கருவியை மனதில் பதிய வைத்துக் கொண்டு வாசித்தால் கட்டுரை முழுவதும் பாக்கு வெட்டியின் பிரஸ்தாபம்   மேலிடுகிறது. வாசிப்பு மேலும் போக போக பாக்குவெட்டி   கருவியில் இருந்து ஒரு நபராக உருவெடுக்கிறது. கட்டுரை முடியும் போது “பாக்கு வெட்டி என்பது ’அது’ அல்ல ’அவன்’ என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இவர் என்ன கட்டுரையில் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டாரே என சிரிப்புத்தான் வருகிறது. கட்டுரைக்குள் கவிதை.

Elegy is an Old Women’s Business

Elegy is an Old Women’s Business Modern life is fleeting phantom. It vanishes from our sight in the blink of our eyes.   It can be further defined with the word “instant”. Instant in a sense that it demands everything at ready hand. It cannot go to raw material and processes it into the fine product for the consumer. What that left to the user is the processed material and with that processed material farther cooking needs to be done for the taste. Theuser of the product needs to over-process it once again. Hence, twice is the process.   

Hello Myshkin

Hello Myshkin How could one keep silent when an extraordinary event takes place in front of him?   Or an eminent person appears in an unexpected moment? He has to report it to at least five or ten of his associates. The thrill will be kept in its vigor for three days. After that the excitement will be extinguished like a dying flame. Only the thin beam of ascending smoke will be the living reminiscence. The story will be narrated like ‘once upon a time I met an eminent person on the seashore of ‘Nellankarai’.

To Be or Not To Be

To Be or Not To Be எழுத்தாளர் கட்டியங்காரன் தற்போதைய நவீன தமிழ் இலக்கியத்தில் தவிர்க்கமுடியாத ஆளுமை என உருவாகிவருகிறார். எங்கள் men Friday வாசிப்பு குழுமம் இவரை ஒரு மாபெரும் படைப்பாளியாக உருவாக்கும் பொருட்டு இலக்கிய தீனி போட்டு வளர்த்து வருகிறது. இவர் கதை எழுதுவதைப் பார்த்தால் பித்தனுக்கும், சு ரா வுக்கும் சற்றும் சளைத்தவர் அல்ல என்பது தெரிகிறது. கூட்டங்கள் என வெளியில் உலாவக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லியிறுக்கிறோம். எந்த இலக்கிய நிகழ்ச்சிக்கும் அவர் போக(வே)க் கூடாது என்பது குழுமத்தின் கட்டுப்பாடு. காலம் கெட்ட கெடப்பில் அரசியல் சார்பு மூளையில் ஒட்டிக்கொள்ளும். அதுவும் கோட்பாடற்ற அரசியல். மானுடதைப் பற்றி 'எழுதுய்யா' என்றால் தத்துவம், கருத்தியல், கோட்பாடு என எதையாவது உளறிக் கொண்டிருப்பார். 

மராட்டின் மரணம்: கலை பிரச்சாரத்திற்கே

மராட்டின் மரணம்: கலை பிரச்சாரத்திற்கே மராட்டின் மரணம் என்ற ஓவியம் Slovene சிந்தனையாளர் Slavoj Zizekன் மூலம் அறிமுகமானது. மராட் பிரென்ச்சு புரட்சியின் அங்கத்தினன். கோர்டே என்ற பெண் இவனை சாகும்படி நெஞ்சில் கத்தியால் குத்திவிடுகிறாள். கொலை செய்த பின்பு தப்பி ஓடாமல் அங்கேயே படபடப்பில் நின்று கொண்டிருந்திருக்கிறாள். புரட்சியாளர்கள் அவளை பிடித்துக் கொண்டுபோய் கொன்றுவிடுகின்றனர். இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு மராட்டின் நண்பனான ஓவியர் ழாக்-லூவிஸ் டேவிட் சம்பவத்தை ஓவியமாக தீட்டுகிறார். இந்த ஓவியம் பத்திரிக்கையாளன் மராட்டின் மரணம் என்றழைக்கப்படுகிறது. ஓவியர் டேவிட்   ’ரோபஸ்பியரின் தூரிகை’ என்று செல்லமாக அழைக்கப்பட்டிருக்கிறார். மராட்டின் மரணம் இவரை பெரிதும் பாதித்திருக்கிறது. வெறுமனே தன்னுடைய நண்பனுடைய மரணம் என்பதாக அவர் இம்மரணச்சம்பவத்தை அணுகவில்லை. அது ஒரு புரட்சி சிந்தனையின் மரணமாக அவர் அதனை பார்த்திருக்கிறார். நண்பனுடைய மரணத்தை ஓவியமாக்குவதில் பிரச்சனை ஒன்றும் பெரியதாக இல்லை. அப்படியே சம்பவத்தை பத்திரிக்கை செய்தியை போன்று தத்ரூபமாக வரைந்துவிட்டுப் போய் இருக்கலாம். ழா...

Madam Tussuads அருங்காட்சியகத்தின் மெழுகு உருவப்படிமங்கள்: நெப்போலியன் என்கிற புலிகேசி மன்னர்

53 best Madame Tussaud images on Pinterest | Madame tussauds, Wax ... Madam Tussuads அருங்காட்சியகத்தின் மெழுகு உருவப்படிமங்கள்: நெப்போலியன் என்கிற புலிகேசி மன்னர் எந்தவித முன் தகவலும் இன்றி ஓர் இடத்தையோ நபரையோ சென்று பார்க்கும் போது இடமும் நபரும் அடையாளமற்று ஆர்வத்தை தூண்டாமல் இருப்பார்கள். பிரமிப்பும் ஆர்வமும் முன் தகவலின் பேரில் ஏற்படுகின்ற ஒரு மனக் கிளர்ச்சியோ என தோன்றுகிறது. அது வைரமே என்றாலும் பாராட்ட வைரம் என்ற முன் தகவலும் அறிவும் அவசியப்படுகின்றன. அது இல்லாத பட்சத்தில் வைரம் வெறும் கண்ணாடி. பார்வையிடுபவர் முன்பு ஒரு பொருள் ஜடமாக நின்று கொண்டிருக்கும் போது (உயிர் கொண்ட - உயிர் அற்ற) அந்த இரண்டு பேர்கள் மத்தியிலும் எந்த உரையாடலும் நடைபெறுவதில்லை. உயிர் கொண்டவரை கிளர்ச்சியூட்ட ஜடப்பொருள் அசைய வேண்டும். இல்லையென்றால் தன்னை பார்க்க வருபவர் தன்னைப் பற்றின முழு அறிவையும் பெற்றிருக்க வேண்டும். முன்னறிவு ஜடப்பொருளை அசையச் செய்கிறது. இல்லை என்றால் சூன்யத்தை ஜடப்பொருள் தன்னைச் சுற்றி வளையமிட்டுக் கொள்ளும். பல மணி நேரங்கள் முறைத்துப் பார்த்தாலும் அமைதியில் இருவரும் நிலைத்திருப...

மலேசியா சிங்கப்பூர் பயணம்: வீடு திரும்புதல்

மலேசியா சிங்கப்பூர் பயணம்: வீடு திரும்புதல் பெட்ரிசியன் கல்லூரி பேராசிரியர்களின் மலேசிய சிங்கப்பூர் சுற்றுலா பயணம் இன்றோடு (7/5/2018) முடிவடைகிறது. வீடு திரும்புகின்றோம். எனக்கு சிங்கப்பூரை விட்டு போகிறோமே என்ற பிரிவின் வருத்தமும் இல்லை சென்னைக்கு போகிறோம் என்ற மகிழ்ச்சியும் இல்லை. ’யாதும் ஊரே யாவரும் கேளீர்’ எனும் மனநிலை இப்போது.

சிங்கப்பூர் பயணக் குறிப்பு (2) (Gardens by the Bay (Flower Dome + Cloud Forest): தேனீக்கு தெரியுமா மலரின் வாசனை

சிங்கப்பூர் பயணக் குறிப்பு (Gardens by the Bay (Flower Dome + Cloud Forest): தேனீக்கு தெரியுமா மலரின் வாசனை தூரத்தில் இருந்து பார்க்கும் போது கண்ணாடி மூடியால் மூடப்பட்ட இரண்டு மாபெரும் குமிழ்கள் தென்படுகின்றன. அதற்கு அந்தப்பக்கம் உயர்ந்த கட்டிடத்தின் மீது கப்பலை நிறுத்திவைக்கப்பட்ட வடிவத்தில்  7 நட்சத்திர ஓட்டல். இந்தப்பக்கம் இராட்சத சக்கரம். இவ்விரண்டையும் பார்த்துக் கொண்டே கண்ணாடி மூடிக்குள் செல்கிறோம். வாயிலில் நுழையும் போதே ஆயிரம் பூக்களின் வாசம் ஒன்று சேர்த்து கிரங்கடிக்கிறது. எது எந்த மலரின் வாசனை என்று ஊகித்தறியமுடியாத கலவை அது. நம் நுரையீரல்கள் அது போன்றதொரு வாசத்தை இதுவரை சுவாசித்திருக்காது என நினைக்கிறேன். ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கண்ணுக்கும் நுரையீரலுக்கும், மனதுக்கும் உகந்த காட்சி, வாசனை, இதம். எத்தனைவிதமான மலர்கள்! பார்த்து இனம் கண்டுபிடிப்பதற்கே மாதங்கள் செலவழியும்.    

மலேசியா பயணக்குறிப்பு (3): ஒரு பூவும் சிறு குருவியும்

மலேசியா பயணக்குறிப்பு (3): ஒரு பூவும் சிறு குருவியும் The Waste Land கவிதையில் எலியட் லண்டன் நகரத்தின் துரிதமான காலை நேரத்தைப் பற்றி பேசுவார். கூட்டமாக வேலைக்கு செல்லும் கும்பலில் தானும் ஒருவராக ஒருவருக்கு ஒருவர் பரிட்சயம் அற்ற நிலையில் கூட்டதில் தனிமையில் தலை கவிழ்ந்து நடந்து செல்கிறார். அக்கூட்டத்தில் ஒருவரை மாத்திரம் பார்த்து "There I saw one I knew, and stopped him, crying: “Stetson!" என்று கத்துகிறார். மாபெரும் கூட்டதில் தனிமையில் பிடித்த ஒருவரை பார்க்கும் போது ஒரு நிம்மதி பெருமூச்சு. கவிதையில் அவர் சந்தித்த நண்பர் எஸ்றா பௌன்ட் என எங்கள் பேராசிரியர் சொல்வார். அதே போன்றதொரு நிம்மதி பெருமூச்சு மலேசியாவில் எனக்கு எற்பட்டது. எலியட் கண்ட உற்ற நண்பனை பார்த்த நிம்மதி போன்றது அது. நான் பார்த்தது ஒரு பூவைம் ஒரு குருவியையும். எப்படி அந்த பாம் மரங்கள் மலேசியவைப் பற்றின ஒரு பிம்பத்தை எற்படுதுகிறதோ அதே போன்றதொரு மலேசியா பற்றின பதிப்பை இந்த இரு அழகுச் சித்திரங்கள் ஏற்படுத்தின. காலை உணவுக்காக விடுதிக்கு சென்ற போது இவர்கள் இருவரையும் கண்டேன். விடுதிக்கு ஒருவித செடியினால் வேலி அமைத்த...

சிங்கப்பூரில் சிட்டுக்குருவிகள் மத்தியில்: காக்கை குருவி எங்கள் ஜாதி (சிங்கப்பூர் பயணக் குறிப்பு 1)

சிங்கப்பூரில் சிட்டுக்குருவிகள் மத்தியில்: காக்கை குருவி எங்கள் ஜாதி (சிங்கப்பூர் பயணக் குறிப்பு 1) இன்று சிங்கப்பூர் சுற்றுளாவின் இரண்டாம் நாள். இராட்சத சக்கரத்தில் சாகச பயணம். அதற்கு முன்பு கடல் ஓரத்தில் கடல் கோள் பகுதியை நிலமக்கிய பிரம்மாண்ட இடத்தில் சிறிது நேர பார்வையிடல். மனித முயற்சியின் பிரம்மாண்டம் இப்பகுதி. இயற்கையின் பிரம்மாண்டம் எனக்குள் பிரமிப்பை உண்டாக்கும். ஆனால் மனிதனுடையதோ தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி என்னையே அறியாமல் தும்புறுத்திக் கொல்லும். எல்லாவற்றையும் பார்த்து முடித்து கரையோரமாக கட்டிட மேடையில் நீர் நிலையை பார்த்தவாறு அமர்ந்திருக்கிறேன். சீனர் ஒருவர் ரொட்டித் துண்டுகளை வீசிக் கொண்டிருக்கிறார். புறாக்கள்  ஒன்று கூடி அவைகளை கொத்தித் தின்கின்றன. ஓரமாக காகம் தனக்கான சமயத்தை எதிர்பார்த்து கத்துக்கிடக்கிறது. இவர்கள் அனைவரின் சாப்பாட்டையும் காகம் ஒருவரே ஏப்பம் விட்டுவிடுவார் போலிருக்கிறது. இமைக்கும் நேரத்தில் மற்றொருவர் போட்டிக்கு வருகிறார். மிக மிக சீன்னஞ் சிறு குருவி - சிட்டுக்குருவி. அவ்வளவு பெரிய பருத்த உருவங்களை பொருட்படுத்தாமல் எல்லாம் எனக்கே என்று ...

மலேசியா, நம் கண்முன் விரியும் தேசம் (பயணக் குறிப்பு 2)

நம் கண்முன் விரியும் தேசம் ஓவ்வொரு நிலமும் அதற்கான தனித்துவத்தைக் கொண்டிருக்கிறது. அது அந்நிலதின் குறிப்பிட்ட வாழ்வியல் முறையாக இருக்கலாம் அல்லது அந்நிலத்தின் இயற்கை வளமாக இருக்கலாம். இவைகள் அனைத்தும் அங்கேயே பிறந்து வளர்ந்த ஒருவருக்கு ஒரு பொருட்டாகவே தெரியாது. மற்றமை என்ற நிலையில் இருந்து பார்க்கும் போது அந்த நிலத்திற்கு உரிய சிறப்பு அம்சம் தனித்துவமாக காணப்படும். இதற்கு அந்த மற்றமையின் நிலையில் இருந்து நம்மையும் அல்லது மற்றவரையும் பார்க்க வேண்டியிருக்கிறது. நீண்ட நாட்களுக்கு முன்பு காலனிய காலத்து இந்தியாவை சித்தரிக்கும் நாவலை ஒன்றை வாசித்தேன். நாவலில் உள்ள ஓரே ஒரு படிமம் இந்தியா என்றால் என்ன என்ற உணர்வை கொடுத்தது இங்கிலாந்தில் இருந்து துரைச்சானி அம்மாள் இந்தியா வருகிறாள். துறைமுகத்தில் இருந்து சத்தம் ஒன்று கேட்கிறது. நிலப்பகுதியில் இருந்து வரும் சத்தத்தை இவ்வாறு பதிவு செய்கிறாள்: ஆயில் ஊற்றப்படாத மாட்டு வண்டி சத்தத்தை முதல் சத்தமாக இந்தியாவுக்குள் நுழையும் போது கேட்டேன் என்று. துரு பிடித்த நிலையில் உள்ள கட்டை வண்டியின் சத்தம் எவ்வளவு தூரத்திற்கு நம் பண்பாட்டின் சத்தமாக அவர்களை ...

மலேசியா பயணக் குறிப்பு(1)

மலேசியா பயணக் குறிப்பு தினமும் நாம் கடக்கும் சாலை முக்கியத்துவம் அற்ற ஒன்று. மிகவும் பழகிப் போன மும்மரமான சில மணி நேரங்களுக்கான உலகம் அது. அது அன்றாடதின் பகுதி. பழமையின் சாரம் ஊறிப் போனது அந்த அன்றாடத்தின் அங்கம். ஒரு பொருளை வாங்கிய புதியதில் அந்த பொருளின் மீது நமக்கு இருக்கும் புதுமையின் பார்வை எப்படி நீண்ட நாட்களுக்கு பின்பு முக்கியத்துவம் அற்ற புளித்து போன ஒன்றாகி விடுகிறதோ அதே போன்று இந்த சொற்ப நேர பயணத்தின் பாதை பழமையுமாகவும் இல்லாமல் புதுமையாகவும் அல்லாமல் ஏதோ ஒன்றாக இருக்கிறது. இதுதான் யதார்த்தமோ? இந்த ஏதோ ஒன்றுதான் நாவலில் யதார்த்தவாதம் போலும். ஊர் பயணம் என்றதும் அதே சாலை திருவிழா கோலம் பூண்டு விடுகிறது. ஏன் இப்படி ஒரு மற்றம் பார்த்து பழகிய பொருளின் மீது எற்படுகிறது. இதே உணர்வை வித்தியாசம் வித்தியாசமாக நாவலாசிரியர்கள் தங்கள் படைப்பில் கொண்டுவருவதும் படைப்பின் சூட்சமம்தான். இப்பொது கடல் (இல்லை) விண் கடந்து வேறு தேசம் செல்கிறேன். பழகிய அன்றாடத்தின் சாலை நேராக மலேசியாவுக்கே போவது போல் தோன்றுகிறது. 

எனக்கு ஐந்து[1] வயதிலேயே டால்ஸ்டாயைத் தெரியும்

எனக்கு ஐந்து [1] வயதிலேயே டால்ஸ்டாயைத் தெரியும் சாலையின் திருப்புமுனையில் நின்று கொண்டு ஒருவர் கைப்பிரதிகளை விநியோகித்துக் கொண்டிருப்பார். வேண்டாம் என்று உதாசினம் செய்பவர்கள் பலர். வாங்கி ’ஜோபியில்’ (சட்டைப் பை) போட்டுக் கொள்பவர்கள் சிலர். ஐந்து நிமிடங்கள் அதில் உள்ள உள்ளடக்கத்தை வாசிப்பவர்கள் மிகச் சொற்பம். எத்தனை கதைகள்! அவைகளை வாசித்த பின்பு ஒருவர் இலக்கியம் படிக்க நேரிட்டால் அது டாஸ்டாய் கதை அல்லவா? தாஸ்தாவஸ்கி கதை அல்லவா? என்று ஆச்சரியப்படக் கூடும். அப்படி அந்த கைப்பிரதியில் இருந்து என் ஒன்றாம் வகுப்பில் படிக்கக் கேட்ட கதை இன்றளவும் அது டால்ஸ்டாய் கதையல்லவா? என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. டாட்ஸ்டாயின் அந்த கதையைப் இப்போது படிக்கும் போதெல்லாம் எனக்கு அந்த ஐந்து வயதில் கதை கேட்ட அனுபவம் அந்த கதையின் மீது மெல்லியதொரு உணர்வாக படர்ந்து செல்லும். கைப்பிரதிகளை வாங்கும் போதெல்லாம் நிச்சயம் ஒரு அருமையான கதை அதில் இருக்கும் என்ற நிச்சயம். வாங்கிய உடன் இரயிலில் ஓரத்தில் அந்த கைப்பிரதியில் இருக்கும் கதைக்கு கொஞ்சம் மரியாதை செலுத்தி வாசிப்பேன். இறைமைந்தன் ஒரு உவமை...

The Parentage of Royal Enfield

The Parentage of Royal Enfield To own a Royal Enfield or a Thunder Bird is a matter of prestige. It is not just a matter of someone showcasing his wealth. It is something else in which we cannot relate it with money. A person who owns this motor cycle need not to a rich man. He stands beyond the measurement of currency value. On the road if we happened to hear that thundering noise of the gigantic machine installed in that cycle we may imagine the personality of whom the cycle bears him on its cushion comfortably. It is indeed a matter of prestige to ride this vehicle. Various impressions cross through our mind on this motor cycle and riders come across our memory. They are from various moments and different stages of my life. First time I saw this bike in my village. To spend time in our village in the afternoon is an eerie experience. The dead silence engulfs the whole village in the noon. Village folk drive their cattle at 9am in the morning for the pasture. From nine to th...

Old Women in MTC: Age cannot Wither their Reserved Strength

Old Women in MTC: Age cannot Wither their Reserved Strength It is the strength that keeps old age in respect. When strength fails life falls into miserable state. If a little amount of strength is reserved after seventies, life will go on peacefully. The truth is realized not by experience but by witnessing an incident in an MTC bus. The moment we get into the bus our only botheration is how to manage the conductor with hundred a rupee note. He will be like a land lord of hundred acres and we as the vassal under his regime. Whatever may be our social status, in that moment the so called Tamil plural respect will be diminished into singularity - நீ வா போ . Many times I had an urge to tell him “Don’t you know who Am I. I am …..”. I swallow the half at the moment it raises above my throat because he should not insult me with the reply, “so what?”. If people like us in the prime of life would be treated in this way then surly this is not the world for old people. For them bus ...

கவித்துவத்தின் உச்சங்கள்

கவித்துவத்தின் உச்சங்கள் தந்தை மகன் உறவைப் பற்றி கட்டுரை எழுதப்போக அது “Prodigal Son” உவமைக் கதையை நினைவுப்படுத்தியது. அதைப் பற்றின நல்ல படம் இருக்குமா என தேட Rembrandtன் இந்த ஓவியம் கிடைத்தது. இந்த ஓவியரைப் பற்றி எங்களுடைய பேராசிரியர் அதிகம் பேசியிருக்கிறார். பசுமாட்டிற்கு பிடில் வாசிப்பது போன்று அவர் பேசுவது அப்போதெல்லாம் இருக்கும். ஒன்றும் விளங்காது. இப்போது மிகவும் மானசீகமான ஒரு கதைக்கான Rembrandt ன் ஓவியம் எனக்கு ஓவியத்தைப் பற்றின பெரிய திறப்பை ஏற்படுத்திவிட்டது. ஊதாரி மகன் கதை இதுதான்; அப்பாவிடம் இருந்து சொத்தை பாகம் போட்டுக் கொண்டு தூர தேசம் செல்கிறான் இளைய மகன். காமக் களியாட்டு என தகாத வழிகளில் பணத்தை செலவழிக்கிறான். பணம் மொத்தம் காலியாகிவிடுகிறது. ஊரில் பஞ்சம் வேறு ஏற்பட்டுவிடுகிறது. ஊரில் உள்ள குடியானவன் ஒருவனிடம் தஞ்சம் புகுந்து பன்றி மேய்க்கும் தொழில் செய்கிறான். பன்றி மேய்க்கும் போது பசிக்கு பன்றியின் உணவை சாப்பிடப் போக பன்றியின் உணவை அவனிடம் இருந்து தட்டிப் பறித்துவிடுகிறார்கள். இப்போது அவனது அப்பாவின் நினைவு வருகிறது. அப்பாவின் வீட்டில் வேலைக்காரர்களுக்கே நல்ல உ...

அப்பாக்களும் பையன்களும்: புரியாத புதிர்கள்

அப்பாக்களும் பையன்களும்: புரியாத புதிர்கள் அப்பாக்கள் அனைவரும் ஒரே மாதிரி இல்லை. ஒருவரில் இருந்து மற்றொருவர் மாறுபடுகிறார். தங்கள் மகன்களைக் கண்டிக்கும் போதும் சரி, அன்பு செலுத்தும் போதும் சரி அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் கிடையாது. இதுவரை என்னுடைய வகுப்புகளில் மாணவர்கள் என்ற மட்டில் பல பையன்களைப் பார்த்து அன்பு செலுத்தியிருக்கிறேன், கோபப்பட்டிருக்கிறேன், கேலி செய்திருக்கிறேன், பயந்திருக்கிறேன். அனைத்து குணங்களைக் கொண்டவர்களின் கூட்டு மொத்தம் ஒரு வகுப்பறை. வேறுபட்ட குணாம்சங்களை எதிர்கொள்வது என்பது மிக சுவாரசியமான அனுபவமும் கூட. வருடா வருடம் புதிது புதிதாக இந்த தொடர் சுவாரசியம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே செல்லும். மானுடப் படைப்பு எவ்வளவு விசித்திரமானது. நம்மை நாமே நாம் பார்த்து அலுத்து போய்விட்டது. ஒரே சுற்றத்தாரைக் கண்டும் வேதனைக் கொண்டோம். வகுப்பறையோ ஒரு புதுமையின் உலகம். எனினும் வகுப்பறை ஒற்றை குணம் கொண்ட மாணவர்களின் கூட்டுத் தொகுதியாக இருக்க வேண்டும் என்பது நமது விருப்பம். உள்ளே நுழைந்தவுடன் அனைவரும் புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு நம் முகத்தையே உற்று நோக்கி...

ஸ்டீபன் ஹாக்கிங்கோடு ஒரு ஆழ்நிலை உறக்கம்

ஸ்டீபன் ஹாக்கிங்கோடு ஒரு ஆழ்நிலை உறக்கம் உலகத்திலேயே மிகவும் ஆபத்தான செயல்பாடு விவாதிப்பது என தோன்றுகிறது. கைக்களப்பு என்றால் கூட பரவாயில்லை எண்ணங்களின் உரசல்? அது புரோட்டானையும் நியூட்ரானையும் மோதவிடுவது போலிருக்கிறது. அணுச்சிதைவும் எண்ணங்களின் மோதலும் நம் உள்ளான மனோவியல் உலகத்தை சிதைவுறச்செய்து ஆட்டம்காணச் செய்கிறது. ஒருவர் ஆக்ரோஷமாக விவாதிக்க வரும்போது அணுச்சிதைவுக்கு ஒப்பான பேராபத்து ஏற்படுமோ என பயம் பீடித்துக் கொள்கிறது. விவாதத்தை தவிர்க்க வேண்டும் போல் இருக்கிறது. அதே நேரம் வீம்புக்கு விவாத களத்தில் குதித்து அதன் சூட்டில் உச்சத்திற்கு சென்று சண்டை போட்டு வெற்றிபெற வேண்டும் என்ற பேராவல். எதிராளியை சொற்களால் வீழ்த்தவேண்டும் என்பதுதான் விவாதத்தின் நோக்கமே. எதிராளி மண்ணைக் கவ்வ வேண்டும். ஒருமுறை வாய்ச் சண்டை போட்டபின்பு அதன் பின்விளைவுகள் மிக நீண்ட நாட்களுக்கு தொடரும் போல. எப்படி ஒரு முறை அணுச்சிதைவு நடந்து அதன் பாதிப்பு பல காலங்களுக்கு ஒரு உயிர் பரிணாமத்தையே அங்கங் குறைய பாதித்தது போன்று நம் மன அழகை அகோரமாக்கிவிடுகிறது இந்த எண்ணங்களின் அணுச்சிதைவு. இருப்பினும் ஒருவர் பேச ...

குஜராத்துல கூட இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்திச்சி

குஜராத்துல கூட இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்திச்சி என்ன தப்பு செய்தார் என் கட்சிக்காரர் என்று வட்டசெயலாலர் வண்டு முருகன் மேடையில் முழங்குவார். பேச்சு வீராவேசமாக இருக்கும். அடிவாங்கியது அவர்தான் வேறு யாரும் கிடையாது. கூட்டத்தில் இருந்து இருவர் அதைச் சுட்டிக்காட்டி”இவந்தான் எங்கியோ செமத்தியா வாங்கியிருக்கான்” என்று சிரித்துக் கொள்வார்கள். வண்டுமுருகனும் அதை பொருட்படுத்தாமல் கண்டனக் குரலை மேலும் அதிகமாக்குவார். செய்தி என்னவெனில், மாபெரும் தத்துவங்களுக்கு பின்னால், வீர வசனங்களுக்கு பின்னால் ஒரு மூத்திரச்சந்து அனுபவம் நிச்சயம் இருக்கும். இல்லாமல் போகாது. மூத்திரச்சந்து தத்துவவாதிகளையும், இலக்கியவாதிகளையும், பெரும் பிரபலங்களையும் உருவாக்கியிருக்கியிருக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

பைத்தியங்கள்

பைத்தியங்கள் கரமசோக்களின் உலகத்தில் இருந்து தூர இருக்க வேண்டும் என்பது என்னுடைய தற்போதைய விருப்பம் அல்லது கட்டாயம். தாஸ்தாவஸ்கியின் நாவலில் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை தூர தூக்கி எறிந்து நிம்மதி காணும் அனுபவம் நம்முடையது அல்ல. எவ்வளவுக்கு எவ்வளவு நடுக்கடலில் தூக்கி எறிகிறோமோ கடலலைகள் நம்முடைய அந்த எதிர்முகத்தை அதாவது கண்ணாடி போல் பிரதிபளிக்கும் முகத்தை துக்கிக் கொண்டு வந்து நம் கண் முன் வைத்து “பார் இதுதான் நீ” என்று மீண்டும் மீண்டும் நினைப்பூட்டிக் கொண்டே இருக்கின்றன. இந்த காரணத்தினாலேயே தாஸ்தாவஸ்கியின் உலகத்தைக் கைவிட்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டன. இப்போது கோமாளித்தனம் நிறைந்த வகுப்புகளை எதிர்கொள்வதால் ஆத்திரம் சில நேரங்களில் என்னுடைய உறுதியான மன வலிமை சோதித்து கண்ணாடி போன்று சுக்கு நூறாக உடைக்கிறது. முற்றிலும் கோமாளிகளின் உலகமாக இந்த உலகம் மாறிக்கொண்டே வருகிறது போன்ற உணர்வு. மாணவர்களின் பைத்திய நிலையை சில நேரங்களில் புரிந்து கொள்வதற்கு யாராவது ஒருவரோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டுமே என முயற்சி செய்ததுண்டு. நினைவுக்கு எட்டிய ஒரே ஒரு முகம் பேட் மேனில் வரும் ஜோக்கர். கன்னங்களில் சிரிப்ப...