அவனுக்கு மெழுகுச் சிறகுகள் கொடுக்கப்பட்டன. பறப்பதற்கான சுதந்திரம் அது. அதைக் கொண்டு எவ்வளவு அகலத்திற்கு வேண்டுமானாலும் அவன் பறக்கலாம். அதிக உயரம் மாத்திரம் கூடாது. எச்சரிப்பு அவன் தந்தையிடம் இருந்து வந்தது. செய்யாதே என்று சொல்லும் போதுதானே அதை செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. அதுவே மனித இயல்பு. Icarus உயரத்தின் எல்லையை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் எச்சரிக்கையை தடையாகக் கருதாமல் தடையை விசாசலமான வாசலாகக் கருதி மெழுகு றெக்கைகளை படபடத்துக் கொண்டு மேல் நோக்கி இன்னும் அதிகம் இன்னும் அதிகமாக பறக்க ஆரம்பித்தான். கனவுகள் இன்னும் விரிய ஆரம்பித்தன. இன்னும் மேலும் மேலும் செல்ல உயர பறக்க ஆசை உந்தித் தள்ளியது. வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க மெழுகு வெப்பம் தாளாமல் உருக ஆரம்பித்துவிட்டது. சிறகுகள் உருகிக் கொண்டே அவன் பூமியின் மீது இறங்கிக் கொண்டிருந்தான். அவன் பூமியை நெருங்கும் போது பூமியின் குடிகள் அனைவரும் அந்த வீழ்ச்சியின் காட்சியை கண்டு கொண்டிருந்தனர். அன்று அந்த காட்சிக்கு பார்வையாகத கண்கள் எதுவும் கிடையாது. அவர்களுக்கு இருந்த ஒரே விசேஷித்தக் காட்சி அந்த வீழ்ச்சி மாத...