Ken Follettன் The Pillars of the Earth ஆயிரம் பக்கங்களுக்கும் அதிகம் எண்ணிக்கைகளைக் கொண்ட வரலாற்று நாவல். நாவலின் கதை நடக்கும் இடம் இங்கிலாந்தில் உள்ள கற்பனை நகரமான கிங்ஸ் பிரிட்ஜ். கற்பனை நகரத்தில் பிரம்மாண்டமான தேவாலயம் ஒன்றும் கட்டப்படுகிறது. அது கட்டி முடிக்கப்பட சுமார் நாற்பது ஆண்டுகள் ஆகின்றன. கட்டிடம் முடிவடையும் போது மூன்றாவது தலைமுறை அதன் முழுமையை காண்கிறது. நாவலின் பக்கங்களும் சரி, அதன் நீண்ட நெடிய காலமும் சரி, பாத்திரங்களின் எண்ணிக்கைகளும் சரி, கட்டி முடிக்கப்பட்ட தேவாலயத்தின் பிரம்மாண்டமும் சரி அனைத்தும் ஒன்று சேர்ந்து வாசகனை சற்று பயமுறுத்தக் கூடியவைகள் தான். வாசகனை தூரத்தில் நிற்க வைத்து அருகில் அண்ட விடாமல் விலக்கி வைக்கும் தன்மை கொண்ட பிரம்மாண்ட புனைவு இது.