Skip to main content

காலமே பயணமாக

                                    காலமே பயணமாக
காலம் என்ற பிரக்ஞைக்குள் நுழையும் போது பயணம் என்ற நகர்வுக்குள் நுழைந்து விடுக்கிறோம். காலம் ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு நகர்ந்து செல்கிறது. இதில் பயணம் செய்யும் நமக்கு அதன் ஓட்டத்தின் தொடர் நிகழ்வைப் பற்றின எந்த உணர்வும் ஏற்படுவதில்லை. இந்த பூமி நகர்கிறது. வெளிச்சம் கட்டுக்கடங்காத வேகத்தில் பயணிக்கிறது. ஒளியின் வேகத்திறுக்கு சற்று குறைவாக ஒலி தன் வேகத்தை சற்று குறைத்து நகர்கிறது.  ஒலி, ஒளி:  இவ்விரண்டின் இயங்கியலை உணருவது காலப் பயணத்தை உணருவதாகும். பூமியின் நகர்வையும் இதைக் கொண்டு உணர் ந்து கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் ஒரு மாபெரும் பயணம் ஒரு இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வேகம் நமக்கு புலப்படுவதாக தெரியவில்லை. அதாவது கண் பார்க்க வேண்டும். புலன்கள் துய்க்க வேண்டும். இவைகளின் எந்த ஒரு உணர்வும் இல்லாமல் பயணிக்கும் பூமிப் பந்தின் மீது அமர்ந்து கொண்டு நோக்கமற்று இலக்கற்று நாமும் பயணித்து கொண்டிருக்கிறோம். இந்த நகர்வின் பயணத்தை பயணி ஒருபோதும் உணருவதில்லை.

அப்படியே அது உணரப்படுமானால் மேற்கொண்ட பயணத்தின் சாதனம் அவ்வளவு வசதியானது அல்ல. சொகுசு இல்லாத வாகனம் ஒன்றில் பயணிப்பதை விட நடந்தே அந்த பயணத்தை முடித்து விடலாம். வாகனம் சொகுசானதாகவும் வேண்டும் பயணிக்கும் சாலை செம்மையானதாகவும் இருக்க வேண்டும். வாகனத்தை விட சாலையின் வசதி மிக அவசியமானது. வாகனத்தில் அமர்ந்திருப்பவருக்கு தான் அதில் அமர்ந்திருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் பயணம் தொடர வேண்டும்.
நம்ம ஊர் பஸ்ஸில் அது சாத்தியம் அல்ல. படிகட்டின் ஒரத்தில் ஒரு கலை வைத்து தொங்கிக் கொள்ள இடம் கிடைத்தாலே பெரிய விசயம். இதில் இருக்கை வறை சென்று உட்கார்ந்திருப்பவரிடம் எப்போது எழுந்திருப்பார் என அவரையே ஏக்கத்தோடு பார்ப்பதை விட தொங்கிக் கொண்டு பயணிக்கலாம். மாநகர பள்ளிகளில் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் செய்யும் சாகசங்களை பார்க்கும் போது இது நமக்கு தேவையா என தோன்றி இன்னொரு பஸ்சுக்கு காத்திருந்தே போகலாம் என்றிருக்கும்.
கிராமபுறங்களில் 90களுக்கு முன் இருந்து இரண்டாயிரம் வரை படிகட்டு பயணம் தவிர்க்க முடியாத்தாக இருந்தது. இரண்டு மணி நேரங்கள் காத்திருந்து பாஸ் வந்தவுடன் கடைசியில் படியில் ஒற்றைக் காலை வைத்து பயணிக்க கொஞ்சம் இடம் கிடைப்பதே பெரிய விசயம்.  நடுநிலை பள்ளிக்கு 2மைல்கள். உயர்நிலை பள்ளிக்கு 10 மைல்கள். கல்லூரிக்கு.... கற்பனைக்கே எட்டாத தூரம். ஒரே ஒரு பேருந்தை வைத்துக் கொண்டு திரைகடல் ஒடியும் கல்வியை தேடு என்பது யாரும் அடையமுடியாத ஒன்றிற்கான சவால் அன்றி வேறல்ல.
அடுத்த ஏரியாவில் பள்ளிக்கூடம் இருக்கும் போது அதே பஸ்ஸில்தான் போவேன் என்று அடம்பிடிப்பது அடாவடித்தனம். இதில் கத்தியை வைத்துக் கொண்டு சண்டை போடுவது ரவுடித்தனம். அரிதாக ஒன்று கிடைக்க பெற்றால் அது பொக்கிஷம். தேடுதல் இல்லாமல் தேவை அற்ற ஒருவனுக்கு பொக்கிஷத்தை கொடுத்தால்  அதன் மதிப்பு வீதியில் வீசி எரியும் கூழாங்கல்லுக்கான மதிப்பு மட்டுமே.
சொகுசு பயணம் அதன் இலக்கை பயணிக்கு ஒருபோதும் உணர்த்துவதே இல்லை. தாம்பரம் ஸ்டேஷனில் தொடர் வண்டியில் ஏறி அமர்ந்தால் போதும் கண்ணை மூடி திறப்பதற்கள்  கோட்டை ஸ்டேஷன் வந்துவிடும். பயணம் நடந்து முடிந்ததை புதுமைபித்தனின் சுப்பையா பிள்ளை தான் சொல்ல வேண்டும் எவ்வளவு சொகுசாக இருந்தது என்று. அப்போது இருந்த மீட்டர் கெஜ் இப்பொது விரிவடைந்து இன்னும் சொகுசாகி விட்டது. பயணத்தின் சொகுசு, வண்டியில் இல்லை. அது தண்டவாளத்தின் மீது இருக்கிறது. சிக்னல் விழும் போது மாத்திரமே தண்டவாளத்தின் மீதான நம்  பயணத்தின் உணர்வு ஏற்படும்.
மிகச்சிறந்த பயணம் என்று ஒன்று இருப்பின் அது வண்டியில் அமர்ந்தவுடன் புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு வாசிப்பை நூலகத்தில் இருந்து வாசிப்பதை விட இன்னும் சொகுசாக வாசிக்க வேண்டும். கோட்டை வரையிலான ஒரு மணி நேர பயணத்தில் ஒரு கட்டுரை, சிறுகதை, அல்லது நாவலின் ஒரு ச்சாப்ட்டர் என வாசிக்கலாம். புத்தகத்தின் முழுமைக்கான நேரம் சென்ட்ரல் ஷெடனில் இருந்து தில்லி வரை போதுமானது. அதுவும் குளிர்சாதன கோச்சாக இருத்தல் வேண்டும். இல்லை என்றால் மத்திய இந்தியா பயணத்தை மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி விடும். வாகனம் தராத தொந்தரவுகளைத் தவிர்த்து மற்ற சிரமங்கள் நாமே சரி செய்து கொல்ல வென்டியவைகள்.
நீண்ட பயணம் காலத்தால் விதியாசப்பட்டது, பயணம் செய்யும் வாகனத்தால் வித்தியாசப்பட்டது, மேலும் வாகனம் பயணிக்கும் வழி தடம் வித்தியாசப்பட்டது. ஒரு  மைல் தூரத்திற்கு கால் நடை பயணம் போதும், பத்து மைல்களுக்கு பேருந்து போதும், ஆயிரம் மைல்களுக்கு கம்பிகள் மீதான இரயில் போதும், கண்டம் கட்டக்க நீரின், காற்றின் மிது பயணிக்கும் கப்பலோ, விமானமோ போதும். காலத்தை கடக்க எதில் பயணிப்பது? நம்மை அறியாமல் காலம் என்னும் பெருவெளியில் அனைவரும் இலக்கின்றி பயணம் செய்து கொண்டிருக்கிறோம். கோட்டை ஸ்டேஷன் போன்று, டில்லி போன்று  டெஸ்டினேஷனை சென்றடையும் போதுதான் உணர்வு திரும்பும், இதுவரை நாம் காலம் கழிந்தது பயணத்தில் என்று. அல்லது காலமே பயணமாக அமைந்து விட்டது என்று. 

Comments

Popular posts from this blog

காவியமான ஆனைச் சாத்தான்

கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே    கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான பாதிப்புகளை அவை என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. இரட்டைவால் குருவி என்பதும் இவர்களுடைய மற்றொரு பெயர். இரட்டைவால் குருவியைக் காகத்துடன் ஒப்பிடும் போது அவ்வளவு ஒன்றும் பெரிய உருவம் கிடையாது. மிகச்சிறிய உருவம்தான் இந்தக் கரிச்சான் குருவி. வெளிநாட்டவர்கள் இங்கு வந்தால் காகம் என்றுதான் அழைப்பார்கள் போலும். அதன் உடலுக்கு அழகே அந்த வால்தான். நீண்டு கடைசியில் இரண்டாக பிளவுபட்டு இருக்கும். அதனாலேயே இரட்டைவால் குருவி என்று பெயரோ என்னவோ. மற்றபடி வால் சிறுத்திருந்தால் இவரையும் சிறிய காகம் என்றுதான் அழைப்பார்கள். காகம் என்றால் கூட சற்று சாம்பல் நிறம் கழுத்தில் பூத்திருக்கும். அண்டங்காக்கையென்றால் கருப்பா பயங்கரமா இருக்கும். அதீதக் கருப்பும் கருப்பல்ல. சாம்பல் பூத்த கருப்பும் கருப்பல்ல. கரிச்சான் குருவிகளின் நிறம்தான் கருப்புக்கு சிறந்த உதாரணம். அதனாலேயே இவர்கள் கரிச்சான் குருவி என்று அழைக்கப்ப...

இரு துரதிருஷ்டசாலிகள்

இரு துரதிருஷ்டசாலிகள்      என்னுடைய மாருதி 800ல் பழுது பார்க்கும் வேலை கொஞ்சம் இருந்தது. ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றினால் கொதிகலன் அதனை இன்ஜினின் இருபது நிமிட இயக்கத்திற்குக் கூட சுழற்சி செய்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. வெளியில் சென்று வீடு திரும்பும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டி இருந்தது. கடைசியாக டெம்பரேச்சர் முள் அதன் வரைவுக் கோட்டீன் எல்லையைத் தாண்டி ℌ அருகே சென்று கொண்டிருந்தது. இதனை கல்பாக்கம் சென்று கொண்டிருக்கும் போது வண்டி மகாபலிபுரத்தைத் தாண்டி அம்மாவின் பாட்டி ஊரான பெருமாளேரியைக் கடக்கும் போதுதான் கவனித்தேன். ஐந்து மைல் தூரத்திற்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நிறுத்தி இன்ஜினின் வெப்பம் குறையட்டும் என்று ஒவ்வொரு முறையும் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஒருவழியாக இன்ஜினில் இருந்து புகை எதுவும் கிளம்பாத அளவுக்கு பத்திரமாக வண்டியை சென்னைக்குக் திரும்பக் கொண்டுவந்து சேர்த்து விட்டேன்.      பழுதை சரி செய்ய மெக்கானிக் குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்றார். ரேடியேட்டரில் பிரச்சனையாம். இல்லை இல்லை ரேடியேட்டரே பிரச்சனையாம். அதை முழுவதுமாக மாற்றி புதிய ஒ...

Piercing through the Wind

Nostalgic feelings of the nursery rhyme gush to one’s memory whilst the eye gazes at the night sky.  The floating pristine disc invites a dark man from Tamil Nadu, to sing the ever tiding "Nila Nila Odi Va". Rational faculties constantly fall short in studying this moment. Tales and songs usher one to cherish this unforgettable experience. Yet, trained culture merely reasons out ignoring nature. Culture of the learned demands only scientific observation of the starry night.