Skip to main content

கிங் ஃபிஷ்ஷர்









கிங் ஃபிஷ்ஷர்
கடல் படையின் அதிகாரிகளின் நீல நிற சீருடை இந்த பறவையை பார்க்கும் போது நினைவிற்கு வருகிறது. பறவைகளில் தனித்துவமானது மீன்கொத்தி. ஒருவேளை தனித்து இருபதினாலேயோ என்னவோ? இருக்கட்டும். இருந்தாலும் தனித்துவமானதுதான் இந்த கிங் ஃபிஷ்ஷர். வண்ணங்களின் குழைவில் தனித்துவமாது இது. சாம்பல் நிறத்தில் சில குருவிகள். பச்சை நிறத்தில் கிளிகள். சாந்து நிறத்தில் சில பறவைகள். வண்ணங்களைக் கொண்டு பாரதி பூனைகளை வைத்து பாடியதைவிட இந்த பறவைகளை சுட்டிக்காட்டி பாடியிருக்கலாம். அதில் இந்த பறவையின் நீல நிறமும் சேர்க்கை. நீரின் மீதும் அதின் ஓட்டத்தில் செல்லும் மீன்கள் மீதும் இந்த அதிகாரிகளுக்கு கட்டற்ற அதிகாரம். அதனால் இரகுகளில் நீல நிற வண்ணம் தான் சரியான சீருடை இவர்களுக்கு. சுற்றிலும் சிறு குட்டைகள் எதுவும் இல்லாத இந்த பாலவாக்கத்தில் எப்படி இந்த பறவை இங்கு வந்து சேர்ந்தது! இறகுகளில் நீல நிறமும், மார்பில் கோட்டின் விரிப்பில் தெரியும் சட்டையின் வெள்ளை நிறம் போன்று சிறிதளவு வெண்மையும், உடலின் மற்ற பாகங்கள் கரும் பழுப்பு நிறமாகவும் மிக அருகில் ஜன்னல் வழியாக பார்க்கும் போது போனால் போகிறது என்று விட்டுவிட முடியுமா? அரிதான சந்திப்பு எக்களுடையது. நேரடியாக Naked Eyes மூலம் பார்த்தால் சந்திப்பு சிறிது நேரத்தில் முடிந்துவிடும். இருக்கவே இருக்கிறது Smart Phoneன் Camera. இந்த சந்திப்பை தற்காலிகமாக இல்லாமல் நிரந்திரமானதாக மாற்றிவிட வேண்டியதுதான். ஒரு சில Clicks. கடல் படை அதிகாரி இனி நம்முடைய நிரந்திர விருந்தினர்.      


Comments

Popular posts from this blog

காவியமான ஆனைச் சாத்தான்

கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே    கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான பாதிப்புகளை அவை என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. இரட்டைவால் குருவி என்பதும் இவர்களுடைய மற்றொரு பெயர். இரட்டைவால் குருவியைக் காகத்துடன் ஒப்பிடும் போது அவ்வளவு ஒன்றும் பெரிய உருவம் கிடையாது. மிகச்சிறிய உருவம்தான் இந்தக் கரிச்சான் குருவி. வெளிநாட்டவர்கள் இங்கு வந்தால் காகம் என்றுதான் அழைப்பார்கள் போலும். அதன் உடலுக்கு அழகே அந்த வால்தான். நீண்டு கடைசியில் இரண்டாக பிளவுபட்டு இருக்கும். அதனாலேயே இரட்டைவால் குருவி என்று பெயரோ என்னவோ. மற்றபடி வால் சிறுத்திருந்தால் இவரையும் சிறிய காகம் என்றுதான் அழைப்பார்கள். காகம் என்றால் கூட சற்று சாம்பல் நிறம் கழுத்தில் பூத்திருக்கும். அண்டங்காக்கையென்றால் கருப்பா பயங்கரமா இருக்கும். அதீதக் கருப்பும் கருப்பல்ல. சாம்பல் பூத்த கருப்பும் கருப்பல்ல. கரிச்சான் குருவிகளின் நிறம்தான் கருப்புக்கு சிறந்த உதாரணம். அதனாலேயே இவர்கள் கரிச்சான் குருவி என்று அழைக்கப்ப...

இரு துரதிருஷ்டசாலிகள்

இரு துரதிருஷ்டசாலிகள்      என்னுடைய மாருதி 800ல் பழுது பார்க்கும் வேலை கொஞ்சம் இருந்தது. ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றினால் கொதிகலன் அதனை இன்ஜினின் இருபது நிமிட இயக்கத்திற்குக் கூட சுழற்சி செய்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. வெளியில் சென்று வீடு திரும்பும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டி இருந்தது. கடைசியாக டெம்பரேச்சர் முள் அதன் வரைவுக் கோட்டீன் எல்லையைத் தாண்டி ℌ அருகே சென்று கொண்டிருந்தது. இதனை கல்பாக்கம் சென்று கொண்டிருக்கும் போது வண்டி மகாபலிபுரத்தைத் தாண்டி அம்மாவின் பாட்டி ஊரான பெருமாளேரியைக் கடக்கும் போதுதான் கவனித்தேன். ஐந்து மைல் தூரத்திற்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நிறுத்தி இன்ஜினின் வெப்பம் குறையட்டும் என்று ஒவ்வொரு முறையும் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஒருவழியாக இன்ஜினில் இருந்து புகை எதுவும் கிளம்பாத அளவுக்கு பத்திரமாக வண்டியை சென்னைக்குக் திரும்பக் கொண்டுவந்து சேர்த்து விட்டேன்.      பழுதை சரி செய்ய மெக்கானிக் குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்றார். ரேடியேட்டரில் பிரச்சனையாம். இல்லை இல்லை ரேடியேட்டரே பிரச்சனையாம். அதை முழுவதுமாக மாற்றி புதிய ஒ...

இமையத்தின் வீணடிக்கப்படாத போலச்(imitate) செய்யும் சொற்கள்

இமையத்தின் வீணடிக்கப்படாத போலச் (imitate) செய்யும் சொற்கள் இமையம் எப்போதும் வார்த்தைகளை எழுத்தாளர்கள் வீணடிக்கிறார்கள் என்று குறைவு பட்டுக் கொண்டிருப்பார். இதனால் மற்ற எழுத்தாளர்களை திட்டவும் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இதனைக் கேட்க்கும் போது உள்ளூர குற்ற உணர்வு ஏற்படும். எழுதுவதற்கு தயக்கமும் ஏற்படும். எழுத்தை வீணடிக்கக் கூடாது என்று இமையம் சொல்லும் போது அவர் எதை அர்த்தப்படுத்தி பேசினார் என்பது இன்றைக்கு அவருடைய பேட்டியை இந்துவில் படித்த பின்புதான் புரிந்து கொண்டேன். இமையம் தன் எழுத்திற்கென்று சமீப காலங்களாக ஒரு கோட்ப்பாட்டை முன் நிறுத்திக் கொண்டிருக்கிறார். இதனை கோட்பாடு என்று சொல்வதற்கு கூட பயமாய் இருக்கிறது. காரணம் கோட்பாடு என்ற வார்த்தை முழுவதும் இப்போது தவறாக அதுவும் கல்வி புலங்களில் பேராசிரியர்களால் அறைகுறையாக புரிந்து கொள்ளப்பட்டு போதிக்கப் பட்டு பதிப்பிக்கப்பட்டும் வருகின்றன. எனினும் இமையம் உருவாக்கும் தன்னுடைய விழுமியங்கள் (இந்த வார்த்தை கூட கொஞ்சம் சிக்கலான வார்த்தை தான்) முற்றிலும் தன்னுடைய படைப்பு சார்ந்ததாகவே இருக்க செய்கின்றன. படைப்பில் இருந்து உருவாக்கப்படும் ...