Skip to main content

மலேசியா, நம் கண்முன் விரியும் தேசம் (பயணக் குறிப்பு 2)

நம் கண்முன் விரியும் தேசம்

ஓவ்வொரு நிலமும் அதற்கான தனித்துவத்தைக் கொண்டிருக்கிறது. அது அந்நிலதின் குறிப்பிட்ட வாழ்வியல் முறையாக இருக்கலாம் அல்லது அந்நிலத்தின் இயற்கை வளமாக இருக்கலாம். இவைகள் அனைத்தும் அங்கேயே பிறந்து வளர்ந்த ஒருவருக்கு ஒரு பொருட்டாகவே தெரியாது. மற்றமை என்ற நிலையில் இருந்து பார்க்கும் போது அந்த நிலத்திற்கு உரிய சிறப்பு அம்சம் தனித்துவமாக காணப்படும். இதற்கு அந்த மற்றமையின் நிலையில் இருந்து நம்மையும் அல்லது மற்றவரையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
நீண்ட நாட்களுக்கு முன்பு காலனிய காலத்து இந்தியாவை சித்தரிக்கும் நாவலை ஒன்றை வாசித்தேன். நாவலில் உள்ள ஓரே ஒரு படிமம் இந்தியா என்றால் என்ன என்ற உணர்வை கொடுத்தது இங்கிலாந்தில் இருந்து துரைச்சானி அம்மாள் இந்தியா வருகிறாள். துறைமுகத்தில் இருந்து சத்தம் ஒன்று கேட்கிறது. நிலப்பகுதியில் இருந்து வரும் சத்தத்தை இவ்வாறு பதிவு செய்கிறாள்: ஆயில் ஊற்றப்படாத மாட்டு வண்டி சத்தத்தை முதல் சத்தமாக இந்தியாவுக்குள் நுழையும் போது கேட்டேன் என்று.
துரு பிடித்த நிலையில் உள்ள கட்டை வண்டியின் சத்தம் எவ்வளவு தூரத்திற்கு நம் பண்பாட்டின் சத்தமாக அவர்களை  வியந்து கேட்கச் செய்யும் சத்தமாக இருந்திருக்கும். அந்த சத்ததின் வழியே நம் தேசத்தை நாம் பார்க்கிறோம். "க்ரீச்சிடும்" வண்டி சக்கரம் நம் பரந்து விரிந்த தேசத்தைப் பார்க்கும் படிமம். (படிமதைப் பற்றி எனக்கு என்ன தெரியும். எல்லாம் ஒரு உட்டான்ஸ்தான்).

மலேசிய வந்து இறங்கியதும் கண் முன் விரிந்த காட்சி ஒரு வித தென்னை போன்ற மரங்கள் முழு தேசத்தையும் நிரப்பி கிடக்கின்றன. பேருந்தில் முன்னால் நின்றுகொண்டு வரைபடத்துடன் guide நாட்டைப் பற்றி விளக்க ஆரம்பித்தார். முதலாவது இந்த தென்னை போன்ற மரம். பாம் எண்ணைக்கான மரமாம். அடுத்தது பெட்ரோல் பற்றி பேசினார். இங்கு உள்ளது போன்று பெட்ரோல் நாம் நாட்டில் மலிவாக இருந்தால் ஸ்கூட்டரிலேயே வட்ட முனை இமயமலையில் இருந்து தென்கோடி குமரி வரை ஊர் சுற்றலாம். மெய்ஞானமும் அதிகமாகும்.

கோலாலம்பூர் பட்டணமே பெரிய  கல்லூரிகளின் வளாகத்தை பொன்றதொரு  பராமரிப்பு.

Comments

Popular posts from this blog

காவியமான ஆனைச் சாத்தான்

கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே    கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான பாதிப்புகளை அவை என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. இரட்டைவால் குருவி என்பதும் இவர்களுடைய மற்றொரு பெயர். இரட்டைவால் குருவியைக் காகத்துடன் ஒப்பிடும் போது அவ்வளவு ஒன்றும் பெரிய உருவம் கிடையாது. மிகச்சிறிய உருவம்தான் இந்தக் கரிச்சான் குருவி. வெளிநாட்டவர்கள் இங்கு வந்தால் காகம் என்றுதான் அழைப்பார்கள் போலும். அதன் உடலுக்கு அழகே அந்த வால்தான். நீண்டு கடைசியில் இரண்டாக பிளவுபட்டு இருக்கும். அதனாலேயே இரட்டைவால் குருவி என்று பெயரோ என்னவோ. மற்றபடி வால் சிறுத்திருந்தால் இவரையும் சிறிய காகம் என்றுதான் அழைப்பார்கள். காகம் என்றால் கூட சற்று சாம்பல் நிறம் கழுத்தில் பூத்திருக்கும். அண்டங்காக்கையென்றால் கருப்பா பயங்கரமா இருக்கும். அதீதக் கருப்பும் கருப்பல்ல. சாம்பல் பூத்த கருப்பும் கருப்பல்ல. கரிச்சான் குருவிகளின் நிறம்தான் கருப்புக்கு சிறந்த உதாரணம். அதனாலேயே இவர்கள் கரிச்சான் குருவி என்று அழைக்கப்ப...

இரு துரதிருஷ்டசாலிகள்

இரு துரதிருஷ்டசாலிகள்      என்னுடைய மாருதி 800ல் பழுது பார்க்கும் வேலை கொஞ்சம் இருந்தது. ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றினால் கொதிகலன் அதனை இன்ஜினின் இருபது நிமிட இயக்கத்திற்குக் கூட சுழற்சி செய்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. வெளியில் சென்று வீடு திரும்பும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டி இருந்தது. கடைசியாக டெம்பரேச்சர் முள் அதன் வரைவுக் கோட்டீன் எல்லையைத் தாண்டி ℌ அருகே சென்று கொண்டிருந்தது. இதனை கல்பாக்கம் சென்று கொண்டிருக்கும் போது வண்டி மகாபலிபுரத்தைத் தாண்டி அம்மாவின் பாட்டி ஊரான பெருமாளேரியைக் கடக்கும் போதுதான் கவனித்தேன். ஐந்து மைல் தூரத்திற்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நிறுத்தி இன்ஜினின் வெப்பம் குறையட்டும் என்று ஒவ்வொரு முறையும் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஒருவழியாக இன்ஜினில் இருந்து புகை எதுவும் கிளம்பாத அளவுக்கு பத்திரமாக வண்டியை சென்னைக்குக் திரும்பக் கொண்டுவந்து சேர்த்து விட்டேன்.      பழுதை சரி செய்ய மெக்கானிக் குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்றார். ரேடியேட்டரில் பிரச்சனையாம். இல்லை இல்லை ரேடியேட்டரே பிரச்சனையாம். அதை முழுவதுமாக மாற்றி புதிய ஒ...

கெய்ஷா: ஆண் அகங்காரத்தின் மீட்டெடுப்பு

கெய்ஷா :   ஆண்   அகங்காரத்தின்   மீட்டெடுப்பு ஜெயமோகனின்   கெய்ஷா   சிறுகதை தன்னில் தானே ஒரு வசிகரத்தை வைத்துக் கொண்டு வாசிப்பை வலியின்றி தன்னுள் இலகுவாக பயணிக்கச் செய்யும் கதையாகும் . அவருடைய வலைபக்கத்தில் கதையை பார்த்தவுடன் முழுவதையும் வாசித்து விட வேண்டும் என்ற தீர்மானம் ஏற்பட்டது . கதை ஆரம்பித்ததுதான் தெரியும் எப்படி முடிந்தது என்று எண்ணம் கொஞ்சம் கூட இல்லை . அதுதான் ஒரு சிறந்தக் கதைக்கான இயல்பு . உண்மையில் அன்று காலை , வாசிப்புக்கு ஏற்ற காலையாக இருக்கவில்லை . நோக்கம் எதுவும் இன்றி எதை எதையோ இயந்திரத்தனமாக செய்து கொண்டிருந்தேன் . அந்தத் தருணத்தில் கதை தன்னுடையை கரங்களை கெய்ஷாவைப் போல் தன்னுள் என் வாசிப்பை அரவணைத்துக் கொண்டது .