Skip to main content

கவித்துவத்தின் உச்சங்கள்


கவித்துவத்தின் உச்சங்கள்
தந்தை மகன் உறவைப் பற்றி கட்டுரை எழுதப்போக அது “Prodigal Son” உவமைக் கதையை நினைவுப்படுத்தியது. அதைப் பற்றின நல்ல படம் இருக்குமா என தேட Rembrandtன் இந்த ஓவியம் கிடைத்தது. இந்த ஓவியரைப் பற்றி எங்களுடைய பேராசிரியர் அதிகம் பேசியிருக்கிறார். பசுமாட்டிற்கு பிடில் வாசிப்பது போன்று அவர் பேசுவது அப்போதெல்லாம் இருக்கும். ஒன்றும் விளங்காது. இப்போது மிகவும் மானசீகமான ஒரு கதைக்கான Rembrandt ன் ஓவியம் எனக்கு ஓவியத்தைப் பற்றின பெரிய திறப்பை ஏற்படுத்திவிட்டது.
ஊதாரி மகன் கதை இதுதான்; அப்பாவிடம் இருந்து சொத்தை பாகம் போட்டுக் கொண்டு தூர தேசம் செல்கிறான் இளைய மகன். காமக் களியாட்டு என தகாத வழிகளில் பணத்தை செலவழிக்கிறான். பணம் மொத்தம் காலியாகிவிடுகிறது. ஊரில் பஞ்சம் வேறு ஏற்பட்டுவிடுகிறது. ஊரில் உள்ள குடியானவன் ஒருவனிடம் தஞ்சம் புகுந்து பன்றி மேய்க்கும் தொழில் செய்கிறான். பன்றி மேய்க்கும் போது பசிக்கு பன்றியின் உணவை சாப்பிடப் போக பன்றியின் உணவை அவனிடம் இருந்து தட்டிப் பறித்துவிடுகிறார்கள். இப்போது அவனது அப்பாவின் நினைவு வருகிறது. அப்பாவின் வீட்டில் வேலைக்காரர்களுக்கே நல்ல உணவு இருக்கும் போது தான் இங்கு பன்றியின் உணவைக் கூட சாப்பிட முடியாமல் இருக்கிறேனே என்று மனம் வருந்தி வீட்டிற்கு நடையைக் கட்டுகிறான். அவனுடைய அப்பாவோ அவன் சென்ற நாள் முதல் அவன் வீடு திரும்பும் இந்நாள் வரை அவனுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். மகன் தூரத்தில் வருவதைக் கண்டு ஓடிச் சென்று அவனை அரவணைத்துக் கொள்கிறார். அப்பாவும் மகனும் சந்திக்கும் தருணம்தான் இந்த ஓவியத்தின் காட்சி. மகனை வரவேற்கும் படமாகத்தான் முதலில் நாம் இந்த ஓவியத்தை பார்ப்போம்.  
ஓவியத்திற்குள் சூட்சமங்கள் பல உள்ளன. அதனை தேர்ச்சி பெற்ற ரசனையாளர் ஒருவர் அங்கம் அங்கமாக விளக்கும் போது வியப்பு மேலிடுகின்றது. முதலில் இந்த ஓவியத்தை வெறும் படமாக பார்க்க முயன்றேன். ஓவியத்தைப் பற்றி The Family Project.com ல் படிக்கும் போது எத்தனை புதிர்களை இந்த ஓவியம் தன்னகத்தே கொண்டுள்ளது என வியந்தேன். முதலாவது மிக அதிக வெளிச்சம் அப்பா மற்றும் மூத்த மகன் முகங்களில் செலுத்தப்பட்டிருக்கிறது. ஓவியத்தின் பின்புறமோ மிகவும் இருள் கவ்வியதாக இருக்கிறது. அப்பாவின் முகத்தின் மீது செலுத்தப்பட்ட வெளிச்சம் நற்கருணையை காட்டுவதற்கு. மூத்த மகன் (ஊதாரி மகனின் அண்ணன்) முதத்தில் இருக்கும் வெளிச்சம் அவனது பொறாமையக் காட்டுவதற்கு.

அப்பா தன் கைகளை அகல விரித்து தன் மனம் திருந்திய மகனை அரவணைக்கிறார். அந்தக் கைகள் ஒன்று ஆணின் கையாகவும் மட்றொன்று பெண்ணின் கையாகவும் இருக்கின்றன. இது தந்தைக்குள் இருக்கும் தாய்மை உள்ளடக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. அதே போன்று மகனின் கால்களில் ஒரு பாதம் செருப்பு இல்லாமல் காயங்களால் நிறைந்திருக்கிறது. மற்றொன்றில் செருப்பு இருக்கிறது. வெறும் கால்கள் பலம் இழந்த நிலை அதனை தாய்மை அரவணைக்கிறது. பலம் இழந்த நிலையை இன்னும் பலம் கூட்ட மற்றொரு காலில் செருப்பு அணிந்த பக்கம் அப்பாவின் கை ஒரு ஆணின் கையாக அரவணைக்கிறது. இது இழந்த பலத்தை மீட்டெடுத்து அதிக பலம் பெறச்செய்வதற்கு.
ஓவியம் என்பது வெறும் படமாக இருக்கிறதில்லை. ஒரு கவிதையை வாசித்து பாராட்ட நமக்கு எப்படி டியூட்டர் தேவைப்படுகிறாரோ அதே போன்று ஓவியத்தை விளக்கவும் ஒரு interpreter அவசியப்படுகிறார். என் பேராசிரியர் வாசித்த பிடிலுக்கு இப்போது அர்த்தம் கிடைத்துவிட்டது என நினைக்கிறேன்.  வீடுதிரும்பும் ஊதாரி மகன் – கவித்துவத்தின் உச்சம்.

Comments

Popular posts from this blog

காவியமான ஆனைச் சாத்தான்

கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே    கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான பாதிப்புகளை அவை என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. இரட்டைவால் குருவி என்பதும் இவர்களுடைய மற்றொரு பெயர். இரட்டைவால் குருவியைக் காகத்துடன் ஒப்பிடும் போது அவ்வளவு ஒன்றும் பெரிய உருவம் கிடையாது. மிகச்சிறிய உருவம்தான் இந்தக் கரிச்சான் குருவி. வெளிநாட்டவர்கள் இங்கு வந்தால் காகம் என்றுதான் அழைப்பார்கள் போலும். அதன் உடலுக்கு அழகே அந்த வால்தான். நீண்டு கடைசியில் இரண்டாக பிளவுபட்டு இருக்கும். அதனாலேயே இரட்டைவால் குருவி என்று பெயரோ என்னவோ. மற்றபடி வால் சிறுத்திருந்தால் இவரையும் சிறிய காகம் என்றுதான் அழைப்பார்கள். காகம் என்றால் கூட சற்று சாம்பல் நிறம் கழுத்தில் பூத்திருக்கும். அண்டங்காக்கையென்றால் கருப்பா பயங்கரமா இருக்கும். அதீதக் கருப்பும் கருப்பல்ல. சாம்பல் பூத்த கருப்பும் கருப்பல்ல. கரிச்சான் குருவிகளின் நிறம்தான் கருப்புக்கு சிறந்த உதாரணம். அதனாலேயே இவர்கள் கரிச்சான் குருவி என்று அழைக்கப்ப...

இரு துரதிருஷ்டசாலிகள்

இரு துரதிருஷ்டசாலிகள்      என்னுடைய மாருதி 800ல் பழுது பார்க்கும் வேலை கொஞ்சம் இருந்தது. ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றினால் கொதிகலன் அதனை இன்ஜினின் இருபது நிமிட இயக்கத்திற்குக் கூட சுழற்சி செய்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. வெளியில் சென்று வீடு திரும்பும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டி இருந்தது. கடைசியாக டெம்பரேச்சர் முள் அதன் வரைவுக் கோட்டீன் எல்லையைத் தாண்டி ℌ அருகே சென்று கொண்டிருந்தது. இதனை கல்பாக்கம் சென்று கொண்டிருக்கும் போது வண்டி மகாபலிபுரத்தைத் தாண்டி அம்மாவின் பாட்டி ஊரான பெருமாளேரியைக் கடக்கும் போதுதான் கவனித்தேன். ஐந்து மைல் தூரத்திற்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நிறுத்தி இன்ஜினின் வெப்பம் குறையட்டும் என்று ஒவ்வொரு முறையும் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஒருவழியாக இன்ஜினில் இருந்து புகை எதுவும் கிளம்பாத அளவுக்கு பத்திரமாக வண்டியை சென்னைக்குக் திரும்பக் கொண்டுவந்து சேர்த்து விட்டேன்.      பழுதை சரி செய்ய மெக்கானிக் குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்றார். ரேடியேட்டரில் பிரச்சனையாம். இல்லை இல்லை ரேடியேட்டரே பிரச்சனையாம். அதை முழுவதுமாக மாற்றி புதிய ஒ...

நிஜத்தில் யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறதா?

World News 480 × 360 Search by image நிஜத்தில் யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறதா? சிவ விஷ்வநாதன் இந்து ஆங்கில நாளிதழில் மாதம் ஒருமுறைக்காவது opinion pageல் கட்டுடையை எழுதிவிடுகிறவர். இந்த நடுப்பகுதிப் பத்தியை (column) வாசிப்பது என்பதே மிகப் பெரிய சாதனையாகும். எழுதுகிறவர்கள் ஒரு குறிப்பிட்ட துரையின் வல்லுனர்களாக இருப்பவர்கள். அவர்களுடைய பத்தியை வாசித்து முடிப்பது ஒரு அறிவுச்  சுரங்கத்திற்குள் பயணிப்பதற்கு ஒப்பானதாகும். சில நேரங்களில் தங்கவேட்டை சாத்தியப்படும். சில நேரங்களில் கடைசி பத்து விரிகளுக்கு முன்பதாகவே மூச்சு திணறல் ஏற்படும். எனினும் சில பத்தி எழுத்தாளர்களின் பெயரைக் கண்டாலே மகிழ்ச்சிதான். அதில் முக்கியமானவர் சிவ விஷ்வநாதன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பதாக அவருடைய எழுத்தின் மீது ஏதொ ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அவருக்கு மாத்திரம் கூடதல் கவனிப்பு செலுத்தி வாசிக்க ஆரம்பித்தோம். தொடர்ந்து அவருடைய கருத்துக்கள் மீதும் ஈர்ப்பு ஏற்பட ஆரம்பித்தது. இவர் மாத்திரம் மற்றவர்கள் போல் அல்லாமல் ஏதோ ஒன்றை அதுவும் மிகவும் பழகிப்போன ஒன்றை புதுமையான விதத்தில் பேசுவதைப் போன்று தோன்றியத...