Skip to main content

To Be or Not To Be



To Be or Not To Be
எழுத்தாளர் கட்டியங்காரன் தற்போதைய நவீன தமிழ் இலக்கியத்தில் தவிர்க்கமுடியாத ஆளுமை என உருவாகிவருகிறார். எங்கள் men Friday வாசிப்பு குழுமம் இவரை ஒரு மாபெரும் படைப்பாளியாக உருவாக்கும் பொருட்டு இலக்கிய தீனி போட்டு வளர்த்து வருகிறது. இவர் கதை எழுதுவதைப் பார்த்தால் பித்தனுக்கும், சு ரா வுக்கும் சற்றும் சளைத்தவர் அல்ல என்பது தெரிகிறது. கூட்டங்கள் என வெளியில் உலாவக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லியிறுக்கிறோம். எந்த இலக்கிய நிகழ்ச்சிக்கும் அவர் போக(வே)க் கூடாது என்பது குழுமத்தின் கட்டுப்பாடு. காலம் கெட்ட கெடப்பில் அரசியல் சார்பு மூளையில் ஒட்டிக்கொள்ளும். அதுவும் கோட்பாடற்ற அரசியல். மானுடதைப் பற்றி 'எழுதுய்யா' என்றால் தத்துவம், கருத்தியல், கோட்பாடு என எதையாவது உளறிக் கொண்டிருப்பார். 
கட்டுப்பாட்டில் ஒரே ஒரு relaxation - எவ்வளவுக்கு வேண்டுமானாலும் வெளிநாடுகளுக்கு சுற்றுளா பயணம் என சுற்றித் திரியலாம். பயணத்திற்கு தம் சொந்த பணத்தில் இருந்துதான் செலவழிக்க வேண்டும். இல்லையென்றாள் நம் நண்பரும் Loyola கல்லூரியின் பேராசிரியருமான ஜெய் தினேஷ் போன்று வட்டிக்கு கடன் வாங்கியாவது அவரை போல ஐரோப்பா, இலங்கை என ஊர் சுற்றளாம். உள்ளூரில் மாத்திரம் எங்கேயும் எழுத்தாளன் என்று சொல்லிக் கொண்டு திரியக் கூடாது.
கட்டியங்காரன் மலேசியா சிங்கப்பூர் என ஊர் சுற்றி விட்டு கடந்த மே இறுதியில் ஊர் திரும்பியிருக்கிறார். பயணப் படியை பன்னிரண்டு மாதத் தவணையில் செலுத்திக்கொள்ளலாமாம்.
ஊர் திரும்பியதும் பயண அனுபவத்தை நண்பர்களிடம் ஓயாமல் ஒரு வாரத்திற்கு கதைகட்டியிருக்கிறார். அவர் வாயை அடைக்க நாடகக்காரர் டேவிட் வெஸ்லி விருந்திற்கு அவரை அழைத்திருக்கிறார். நண்பர் டேவிட் வெஸ்லியின் அம்மா செய்யும் பிரியாணி எங்கள் அனைவருக்கும் அத்தனை பிரியம். அதற்கு கடோர்கஜன்களாகிய நானும் சேது டார்வினும்தான் சரியான ஆட்கள். பாவம் கட்டியங்காரன் பித்தனைப் போலவே அவருக்கும் வயிற்று உபாதை. அளவோடுதான் சாப்பிடுவார். சென்றவாரம் பிரியாணி சாப்பிட டேவிட் வீட்டிற்கு சென்றிருந்தோம். நீண்ட நாட்களுக்கு பிறகு மென் பிரைடே குழுமம் மீண்டும் சந்திக்கிறது. வழக்கம்போல் பிரியாணி பின்பு நல்ல கதை, விவாதம் கடைசியில் தேனீர் கடையில் டீ. இதுவே திருவல்லிக்கேணியாக இருந்தால் முதலில் கதை பின்பு மற்ற அனைத்தும் என தலைகீழாக இருக்கும். எப்படியிருந்தாலும் பிரியாணி, கதை, விவாதம் கடைசியில் டீ/ஜூஸ் இல்லாமல் மென் பிரைடே கூட்டம் இருந்ததில்லை. கூட்டத்திற்கு இவைகள் அனைத்தும் அத்தியாவசியமானவைகள். இந்தமுறை குழுமம் உருப்படியாக  எதையாவது செய்ய வேண்டும் என உத்தேசித்துள்ளது. இனி ஆண்டுக்கு இருமுறை அரையாண்டு ஆங்கில பத்திரிக்கை ஒன்றை கொண்டு வரவேண்டும் என முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கட்டியங்காரன் அகடவிகடம் பத்திரிக்கையை நடத்திவருகிறார். தமிழில் இப்போதைக்கு அதுதான் தரமான இலக்கிய பத்திரிக்கை. இப்போதெல்லாம் ஒரு கட்டுரையை பத்திரிக்கைக்கு அனுப்பினால் மூன்று வருடங்கள் கழித்துத்தான் வெளிவருகிறது. கதைகளை அனுப்பினால் சொல்லவே வேண்டாம். அதனால்தான் கட்டியங்காரன் சொந்த பத்திரிக்கையை ஆரம்பித்துவிட்டார் போலும். இந்த பெயரையே ஆங்கில பத்திரிக்கைக்கும் வைத்துவிடலாம் என என் காதில் சிசுகிசுத்தார். ஆங்கில பத்திரிக்கைக்கு இந்த பெயர் சூட் ஆதாது என விசயத்தை அப்படியே அமுக்கிவிட்டேன். கோபத்தில் போய்வருகிறேன் என்று ஒருவார்த்தை கூட சொல்லிக்கொள்ளாமல் டீக்கடையில் இருந்து நேராக அம்பத்தூர் பஸ்டாண்டுக்கு சென்று திருவல்லிக்கேணிக்கு போக பஸ் பிடித்து கிளம்பிவிட்டார். இவர்கள் எல்லோரையும் வைத்துக் கொண்டு நான் படும் பாடு எனக்குத்தான் தெரியும். அவர் ஆங்கில பத்திரிக்கைக்கு தன் பத்திரிக்கையின் பேரை சிபாரிசு செய்ததும் அதனை நான் தட்டிக்கழிக்க அவர் கோபப்பட்டதும் நல்லவேளை எனக்கு மட்டும்தான் தெரியும். இது எதுவுமே தெரியாமல் நாடக்காரர் டேவிட் வெஸ்லி பெரும் மகிழ்ச்சியில் இந்த சந்திப்பின் அனுபவத்தை வைத்து ஒரு கதை வேறு எழுதிவிட்டார். அதுவும் தமிழில்.  அவருக்கு கட்டியங்காரன் என்றால் தனிப்பிரியம். கட்டியங்காரன் Hamlet பாத்திரத்தை அவர் நாடகத்தில் சும்மா மிடுக்காக To be or not to beயை  ராஜபாட் ரங்கதுரை போன்று  நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. கதைக்காரருக்கு ஏன் நாடகம் நடிப்பு இதுவெல்லாம். சேது டார்வினுக்கு இது தெரிந்தால் இடம் அதிரும்படி சிரித்து வைத்துவிடுவார். அதற்கு வேறு தனி பஞ்சாயத்து வைக்க வேண்டிவரும். இனி குழுமத்தில் இருந்து நாடகங்களில் கலந்து கொள்ளக் கூடாது என மற்றுமொரு கட்டுப்பாட்டை கட்டியங்காரனுக்கு விதிக்க வேண்டும். நாடக்காரரின் கதை மிக அருமை.
   

Comments

Popular posts from this blog

காவியமான ஆனைச் சாத்தான்

கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே    கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான பாதிப்புகளை அவை என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. இரட்டைவால் குருவி என்பதும் இவர்களுடைய மற்றொரு பெயர். இரட்டைவால் குருவியைக் காகத்துடன் ஒப்பிடும் போது அவ்வளவு ஒன்றும் பெரிய உருவம் கிடையாது. மிகச்சிறிய உருவம்தான் இந்தக் கரிச்சான் குருவி. வெளிநாட்டவர்கள் இங்கு வந்தால் காகம் என்றுதான் அழைப்பார்கள் போலும். அதன் உடலுக்கு அழகே அந்த வால்தான். நீண்டு கடைசியில் இரண்டாக பிளவுபட்டு இருக்கும். அதனாலேயே இரட்டைவால் குருவி என்று பெயரோ என்னவோ. மற்றபடி வால் சிறுத்திருந்தால் இவரையும் சிறிய காகம் என்றுதான் அழைப்பார்கள். காகம் என்றால் கூட சற்று சாம்பல் நிறம் கழுத்தில் பூத்திருக்கும். அண்டங்காக்கையென்றால் கருப்பா பயங்கரமா இருக்கும். அதீதக் கருப்பும் கருப்பல்ல. சாம்பல் பூத்த கருப்பும் கருப்பல்ல. கரிச்சான் குருவிகளின் நிறம்தான் கருப்புக்கு சிறந்த உதாரணம். அதனாலேயே இவர்கள் கரிச்சான் குருவி என்று அழைக்கப்ப...

இரு துரதிருஷ்டசாலிகள்

இரு துரதிருஷ்டசாலிகள்      என்னுடைய மாருதி 800ல் பழுது பார்க்கும் வேலை கொஞ்சம் இருந்தது. ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றினால் கொதிகலன் அதனை இன்ஜினின் இருபது நிமிட இயக்கத்திற்குக் கூட சுழற்சி செய்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. வெளியில் சென்று வீடு திரும்பும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டி இருந்தது. கடைசியாக டெம்பரேச்சர் முள் அதன் வரைவுக் கோட்டீன் எல்லையைத் தாண்டி ℌ அருகே சென்று கொண்டிருந்தது. இதனை கல்பாக்கம் சென்று கொண்டிருக்கும் போது வண்டி மகாபலிபுரத்தைத் தாண்டி அம்மாவின் பாட்டி ஊரான பெருமாளேரியைக் கடக்கும் போதுதான் கவனித்தேன். ஐந்து மைல் தூரத்திற்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நிறுத்தி இன்ஜினின் வெப்பம் குறையட்டும் என்று ஒவ்வொரு முறையும் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஒருவழியாக இன்ஜினில் இருந்து புகை எதுவும் கிளம்பாத அளவுக்கு பத்திரமாக வண்டியை சென்னைக்குக் திரும்பக் கொண்டுவந்து சேர்த்து விட்டேன்.      பழுதை சரி செய்ய மெக்கானிக் குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்றார். ரேடியேட்டரில் பிரச்சனையாம். இல்லை இல்லை ரேடியேட்டரே பிரச்சனையாம். அதை முழுவதுமாக மாற்றி புதிய ஒ...

கெய்ஷா: ஆண் அகங்காரத்தின் மீட்டெடுப்பு

கெய்ஷா :   ஆண்   அகங்காரத்தின்   மீட்டெடுப்பு ஜெயமோகனின்   கெய்ஷா   சிறுகதை தன்னில் தானே ஒரு வசிகரத்தை வைத்துக் கொண்டு வாசிப்பை வலியின்றி தன்னுள் இலகுவாக பயணிக்கச் செய்யும் கதையாகும் . அவருடைய வலைபக்கத்தில் கதையை பார்த்தவுடன் முழுவதையும் வாசித்து விட வேண்டும் என்ற தீர்மானம் ஏற்பட்டது . கதை ஆரம்பித்ததுதான் தெரியும் எப்படி முடிந்தது என்று எண்ணம் கொஞ்சம் கூட இல்லை . அதுதான் ஒரு சிறந்தக் கதைக்கான இயல்பு . உண்மையில் அன்று காலை , வாசிப்புக்கு ஏற்ற காலையாக இருக்கவில்லை . நோக்கம் எதுவும் இன்றி எதை எதையோ இயந்திரத்தனமாக செய்து கொண்டிருந்தேன் . அந்தத் தருணத்தில் கதை தன்னுடையை கரங்களை கெய்ஷாவைப் போல் தன்னுள் என் வாசிப்பை அரவணைத்துக் கொண்டது .