கோட்பாடு வேறு உண்மை வேறு . கோட்பாட்டை ஒரு இயக்கத்திற்கு உரியதாக / சொத்தாக வைத்துக் கொண்டாடலாம் . கோட்பாடு ஒரு இயக்கத்திற்கு அப்பழுக்கற்ற உண்மையாகவும் இருக்கலாம் . ஆனால் உண்மை கோட்பாடாக மாறமுடியாது . உண்மைக் கோட்பாடு அல்ல . அப்படி என்றால் கோட்பாடு என்பது என்ன என்பதுதான் கேள்வி . தலை சுற்றுகிறது . விதியே என்று ஒரு சாராரின் கொள்கைகளை வாழ்க்கையாக வாழ்ந்து விட்டால் பிரச்சனையே இல்லை . கொள்கையற்று எங்கும் காணக் கிடைக்காத உண்மையைத் தேடி அலைவதுதான் மரணத்தின் வலி . இருப்பினும் இந்துவில் THE AGE OF POST-TRUTH POLITICS என்னும் தலைப்புக் கொண்ட நடுப் பக்கப் பத்தி சற்று ஆறுதல் அளிக்கிறது .