Skip to main content

இமையத்தின் வீணடிக்கப்படாத போலச்(imitate) செய்யும் சொற்கள்


இமையத்தின் வீணடிக்கப்படாத போலச்(imitate) செய்யும் சொற்கள்
இமையம் எப்போதும் வார்த்தைகளை எழுத்தாளர்கள் வீணடிக்கிறார்கள் என்று குறைவு பட்டுக் கொண்டிருப்பார். இதனால் மற்ற எழுத்தாளர்களை திட்டவும் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இதனைக் கேட்க்கும் போது உள்ளூர குற்ற உணர்வு ஏற்படும். எழுதுவதற்கு தயக்கமும் ஏற்படும். எழுத்தை வீணடிக்கக் கூடாது என்று இமையம் சொல்லும் போது அவர் எதை அர்த்தப்படுத்தி பேசினார் என்பது இன்றைக்கு அவருடைய பேட்டியை இந்துவில் படித்த பின்புதான் புரிந்து கொண்டேன். இமையம் தன் எழுத்திற்கென்று சமீப காலங்களாக ஒரு கோட்ப்பாட்டை முன் நிறுத்திக் கொண்டிருக்கிறார். இதனை கோட்பாடு என்று சொல்வதற்கு கூட பயமாய் இருக்கிறது. காரணம் கோட்பாடு என்ற வார்த்தை முழுவதும் இப்போது தவறாக அதுவும் கல்வி புலங்களில் பேராசிரியர்களால் அறைகுறையாக புரிந்து கொள்ளப்பட்டு போதிக்கப் பட்டு பதிப்பிக்கப்பட்டும் வருகின்றன. எனினும் இமையம் உருவாக்கும் தன்னுடைய விழுமியங்கள் (இந்த வார்த்தை கூட கொஞ்சம் சிக்கலான வார்த்தை தான்) முற்றிலும் தன்னுடைய படைப்பு சார்ந்ததாகவே இருக்க செய்கின்றன. படைப்பில் இருந்து உருவாக்கப்படும் கோட்பாடுகள் தான் மிக திடமானவைகள். அந்த வகையில் ஹென்றி ஜேம்சின் நாவலின் கலைத் தன்மை என்ற கட்டுரை பொதுவாக நாவல் வடிவம் என்ற பொதுப்படையில் முன்வைக்கப்படும் கருத்தாக்கங்களாக அல்லாமல் தன்னுடைய படைப்புகளில் இருந்தே முன் வைக்கப்பட்டவைகளாக இருக்கின்றன.
யதார்த்தம் உருவாக்கும் கோட்பாடுகள் அந்தக் காலத்திற்கானவைகள். குறிப்பாக அந்த ஒரு குறிப்பிட்ட வாழ்நாளில் வாழப்பட்ட வாழ்க்கையை மதிப்பிட்டு காட்டுபவைகள். இமையம் சொல்ல முற்படும் அழியாத சொற்கள் என்பது தன்னுடைய படைப்பின் மொழியைப் பற்றிய கருத்தாக்கம் ஆகும். இமையத்தின் மொழி அவருடைய தனித்தன்மையைக் கொண்ட மொழி. அது அந்த பிராந்தியத்திற்கான மொழி. தன் கலைவடிவத்திற்கான மொழி. ஒரு சுவாரசியக் கதையை வாசித்த பின்பு அதனை இலக்கியம் இன்றோ கலைத்தன்மைக் கொண்டது என்றோ கூற ஒருபோதும் துணிய மாட்டோம். கதையின் சுவாரசியத்திற்காக அந்தக் கதைகள் வாசிக்கப்படுகின்றன அவ்வளவுதான். அதே நேரத்தில் சீரியஸான ஒன்றைப் பேசுவதற்கும் எழுத்து ஏதோ ஒரு விதத்தில் தன்னை இலக்கியம் என்று நிலைநிறுத்திக் கொள்கிறது. இருப்பினும் மொழி என்பது ஒரு பிராந்தியத்தின் மொழியை போலச் (imitate) செய்வதற்கான சாதனம் அதில் தான் அதனுடைய அழகியல் மேலோங்கி நிற்கிறது. மொழியும் கதையும் யதார்த்ததிற்கு மிக நீண்ட தூரத்தில் தன்னை வைத்துக் கொண்டு இயக்கும் பட்சத்தில் அதனுடைய இலக்கிய தரத்திற்கான தேடல் என்பது சம்பந்தப்படாத ஒன்றாகும். மொழியும் சரி கதையும் சரி யதார்த்ததை போலச் செய்ய வேண்டும் அதே நேரத்தில் அது யதார்த்ததை தன்னுடைய வெற்று நிலையில் அப்படியே கட்சிப்படுத்தவும் கூடாது, முடியாது.
ஒரு இலட்சியத்தை கதையாக்குவது ஓவியனுக்கும் சரி கதையாளனுக்கும் சரி மிகவும் எளிதானக் காரியம். ஏற்கனவே காலம் காலமாக இதையேதான் நாம் செய்து கொண்டிருக்கிறோம். இலட்சிய வாழ்க்கையைப் பற்றியும் அதன் மதிப்பீடுகளைப் பற்றியும் வரைவதோ எழுதுவதோ நமக்கு மிக ஏளிதான செயல். யதார்த்த வாழ்க்கையை போலச் செய்வதற்குத் தான் மிகப் பெரிய பிரயத்தனம் தேவைப்படுகிறது. அது அவ்வளவு எளிதானது அல்ல. எழுத்தாளன் ஒரு பிராந்தியத்தின் மொழியை போலச் செய்வது அப்படியே மக்கள் பேசும் மொழியை வார்த்தைக்குள் கொண்டுவருகின்றான் என்று அர்த்தம் அல்ல. அதனை டேப் ரெக்கார்டர் எளிதில் சாதித்து விடும். அதே போன்று ஒரு கேமரா அல்லது இன்றைய நவீன ஸ்மார்ட் ஃபோன் எளிமையாக செய்து முடித்து விடும். இதில் ரெக்கார்டரின் குரலும் எழுத்தாளனின் போலச் செய்யும் குரலும் ஒன்றாகி விடுமா என்ன. கேமரா பதிவு செய்யும் படமும் ஓவியன் தீட்டும் சித்திரமும் ஒன்றாகி விடுமா என்ன. பொது புத்திதான் இதனை ஒன்றாக வைத்துப் பார்க்கும். அதனிடம் இலட்சிக் கதைகளைக் காட்டினால் தான் இலக்கியம் என்று ஏற்க்கும்.
இமையம் ”சொற்களை வீணடிக்கிறார்கள்” என்று சொல்வதின் அர்த்தம் இதுதான். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று மொழியைக் கொண்டு ஒரு வாழ்க்கையை போலச் செய்யமுடியும் என்ற துடுக்குத் தனத்தைத்தான் இமையம் இன்றளவும் சாடிக்கொண்டிருக்கிறார். கேமரா ஒரு நொடியில் படத்தை கிளிக் செய்து விடுகிறது. எந்த பிரயத்தனமும் தேவை இல்லை மக்களின் பேச்சை அது அப்படியே பதிவு செய்து விடும். இருப்பதை அப்படியே செய்வது என்பது கலை அல்ல. அங்கு ஒரு இலக்கிய பரிசோதனையே நடைபெறுகிறது. இந்தப் பரிசோதனையின் விளைவுதான் வட்டார இலக்கியங்கள். கி. ராஜநாரயணன் சொல்லுவார் ”எங்களுடைய மொழி என்பது கதை உருவாக்கும் மொழி அது கதைக்கான மொழி. அவர்களுடைய மொழியோ அது தன்னில் தானே தன்னிச்சையாக செயல்படும் மொழி. அதில் இருந்துதான் அவர்கள் கதைகளை உருவாக்குகிறார்கள்” என்று. இதில் காவிரி டெல்டாக்களில் உருவான மொழியும் சரி சுவாரசியக் கதைகளை உருவாக்கிய மொழிகளும் சரி அவைகள் எதோ ஒரு விதத்தில்  தன்னிச்சையில் செயல்படுபவைகள். இதில் தி. ஜானகிராமன் விதிவிலக்கு.

இமையம் எழுதும் சொற்கள் வீணடிக்கக் கூடாத சொற்கள். அது யதார்த்த வாழ்க்கையை, மொழியை போலச் செய்யும் சொற்கள். அந்த சொற்களில் தான் உயிர் இருக்கிறது அந்த சொற்களில் தான் ஒரு வாழப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. இந்த வாழ்க்கைதான் அடுத்த தலைமுறைக்கான கல்வி அறிவு அனைத்தும். மற்றப்படி படைப்பாளன் என்று கூறிக்கொண்டு கதை எழுதினால் கதையின் மொழிக்கும் தினசரி பத்திரிக்கையின் மொழிக்கும் என்ன வித்தியாசம். இப்பொழுது என்னளவில் நான் ஒரு குற்ற உணர்வில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டேன். இமையம் வசைபாடியது என்னை அல்ல. நான் படைப்பளி அல்ல. ஏதோ கதைகளைப் படித்து விட்டு ஆஹா ஓஹோ என்று பாராட்டி விட்டு அதனை மதிப்புரைகள் என்று பிதற்றிக் கொண்டிருப்பவன். ஆக, நான் தொடர்ந்து எழுதளாம். எந்த தடையும் எனக்கு இப்போது இல்லை.  

Comments

Popular posts from this blog

காவியமான ஆனைச் சாத்தான்

கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே    கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான பாதிப்புகளை அவை என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. இரட்டைவால் குருவி என்பதும் இவர்களுடைய மற்றொரு பெயர். இரட்டைவால் குருவியைக் காகத்துடன் ஒப்பிடும் போது அவ்வளவு ஒன்றும் பெரிய உருவம் கிடையாது. மிகச்சிறிய உருவம்தான் இந்தக் கரிச்சான் குருவி. வெளிநாட்டவர்கள் இங்கு வந்தால் காகம் என்றுதான் அழைப்பார்கள் போலும். அதன் உடலுக்கு அழகே அந்த வால்தான். நீண்டு கடைசியில் இரண்டாக பிளவுபட்டு இருக்கும். அதனாலேயே இரட்டைவால் குருவி என்று பெயரோ என்னவோ. மற்றபடி வால் சிறுத்திருந்தால் இவரையும் சிறிய காகம் என்றுதான் அழைப்பார்கள். காகம் என்றால் கூட சற்று சாம்பல் நிறம் கழுத்தில் பூத்திருக்கும். அண்டங்காக்கையென்றால் கருப்பா பயங்கரமா இருக்கும். அதீதக் கருப்பும் கருப்பல்ல. சாம்பல் பூத்த கருப்பும் கருப்பல்ல. கரிச்சான் குருவிகளின் நிறம்தான் கருப்புக்கு சிறந்த உதாரணம். அதனாலேயே இவர்கள் கரிச்சான் குருவி என்று அழைக்கப்ப...

இரு துரதிருஷ்டசாலிகள்

இரு துரதிருஷ்டசாலிகள்      என்னுடைய மாருதி 800ல் பழுது பார்க்கும் வேலை கொஞ்சம் இருந்தது. ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றினால் கொதிகலன் அதனை இன்ஜினின் இருபது நிமிட இயக்கத்திற்குக் கூட சுழற்சி செய்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. வெளியில் சென்று வீடு திரும்பும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டி இருந்தது. கடைசியாக டெம்பரேச்சர் முள் அதன் வரைவுக் கோட்டீன் எல்லையைத் தாண்டி ℌ அருகே சென்று கொண்டிருந்தது. இதனை கல்பாக்கம் சென்று கொண்டிருக்கும் போது வண்டி மகாபலிபுரத்தைத் தாண்டி அம்மாவின் பாட்டி ஊரான பெருமாளேரியைக் கடக்கும் போதுதான் கவனித்தேன். ஐந்து மைல் தூரத்திற்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நிறுத்தி இன்ஜினின் வெப்பம் குறையட்டும் என்று ஒவ்வொரு முறையும் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஒருவழியாக இன்ஜினில் இருந்து புகை எதுவும் கிளம்பாத அளவுக்கு பத்திரமாக வண்டியை சென்னைக்குக் திரும்பக் கொண்டுவந்து சேர்த்து விட்டேன்.      பழுதை சரி செய்ய மெக்கானிக் குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்றார். ரேடியேட்டரில் பிரச்சனையாம். இல்லை இல்லை ரேடியேட்டரே பிரச்சனையாம். அதை முழுவதுமாக மாற்றி புதிய ஒ...

Piercing through the Wind

Nostalgic feelings of the nursery rhyme gush to one’s memory whilst the eye gazes at the night sky.  The floating pristine disc invites a dark man from Tamil Nadu, to sing the ever tiding "Nila Nila Odi Va". Rational faculties constantly fall short in studying this moment. Tales and songs usher one to cherish this unforgettable experience. Yet, trained culture merely reasons out ignoring nature. Culture of the learned demands only scientific observation of the starry night.