Skip to main content

 

 

வாசிக்கும் போதே இந்த தன் வரலாற்று நூலின் சில பகுதிகளைப் பகிராமல் இருக்க முடியவில்லை. பௌத்த வேட்கையின் பயணத்தில் கொஸாம்பி எடுத்து வைத்த முதல் அடி அர்னால்ட் எழுதிய, ”Light of Asia” ஆகும். அது அவரைத் தேடி அவரிடம் தானாக வந்தடைந்த புத்தகம். கொஸாம்பி இதனை மராத்தி மொழிபெயர்ப்பில் வாசித்திருக்கிறார். இதனை மொழிபெயர்ப்பில் முழுமையாக வெளிப்படாத நூல் என்கிறார்கள். மூல நூலில் இருந்து ஆறில் ஒரு பங்கு மட்டுமே வெளிப்பட்ட அந்த மராத்தி மொழிபெயர்ப்பு நூல் கொஸாம்பியை பெருமளவில் கவர்ந்திருக்கிறது. மூல நூல் ஆங்கிலத்தில் இருப்பதால் ஆங்கிலத்தையும் கற்க தயாராக இருந்திருக்கிறார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நூல் கௌதம புத்தரின் வாழ்க்கையை விவரிக்கும் கவிதை நடையில் எழுதப்பட்ட கதைசொலல் ஆகும். மேலும் மேலும் பௌத்தத்தை பற்றி கற்க விரும்புகிறார். அதற்கு மொழி அவருக்கு ஒரு தடையாக இருந்திருக்கவில்லை. ஏற்கனவே அவர். இங்கே பூனேவுக்கு வந்த நோக்கமே எப்படியாவது சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்பதுதான். அதுகூட பௌத்ததை முழுமையாக் கற்பதற்குத்தானோ! பௌத்ததைப் பற்றி மேற்கொண்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இலங்கை அல்லது நேபாளத்திற்கு போக வேண்டும் என்கிறார்கள். எந்த வித தயக்கமும் இன்றி அந்த பெரும் பயணத்திற்கு அவர் தயாராகிறார்.

இங்கே இவர்கள் பௌத்ததை ஒரு மதமாக ஆங்கிலத்தின் வழியே கற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதே கால கட்டத்தில் தமிழகத்தில்  பண்டிதர் ஒருவர் தமிழின் தொல் இலக்கியப் பிரதிகள் வழியாகவும் சடங்குகள் வழியாகவும் அதனை பண்பாடாக வாசித்துக் கொண்டிருந்திருக்கிறார் என்பதை பௌத்த வேட்கையை வாசித்துக் கொண்டிருக்கும் போதே அதனைக் காட்சிப்படுத்தி உணர முடிகிறது. நிச்சயம் கொஸாம்பி அந்த பண்டிதரை சந்திக்கத்தான் போகிறார்.  சொந்த மண்ணிற்கே ஒரு மதம் அந்நியமாகிக் கிடப்பது என்ன ஒரு நகை முரண்! இந்த மண்ணுக்கு உரிய மத்ததை அந்நிய மொழியின் வழியாக ஒருவர் கற்க வேண்டி இருக்கிறது. அதனுடைய இறுதி எச்சங்கள் இரண்டு இடங்களில் மாத்திரமே இருந்திருக்கிறது என்பது ஆச்சரியமளிக்கவும் செய்கிறது.

இந்த மண்ணில் தோன்றிய மதம் எப்படி அதன் சுவடுகளே இல்லாமல் போகக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கும். அது வேரூன்றிய நிலத்தில் எப்படி  பிற்போக்கான சாதிய ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூகம் அதனை இல்லாமல் செய்து அதன் இடத்தில் தன்னை இடம் மாற்றம் செய்திருக்க முடியும். நிச்சயமாக ஒருவர் சாதிய மன நிலையில் இருந்து பௌத்த்தை கற்க முன் வர வாய்ப்பே இல்லை. சரஸ்வத் பிராமணரான கொஸாம்பி பௌத்தத்தை அறிய முதலில் தன்னுடைய சாதிய அடையாளத்தில் இருந்து விடுதலையாக வருகிறார். ஒரே நேரத்தில் ஒருவர் சாதிய பிடிமானம் உடையவராகவும் பௌத்த வேட்கைக் கொண்டவராகவும் இருக்க முடியாது. பௌத்த வேட்கைக் கொண்டவர் நிச்சயமாக தன்னைத்தானே சாதியத்தில் இருந்தும் அதன் பிற்போக்கான பாரம்பரியங்களில் இருந்து தன்னை விடுவுத்துக் கொண்டவராக இருக்க வேண்டும். கொஸாம்பி சாதிய கட்டுகளில் இருந்து விடுதலையடைந்த பௌத்த பிக்கு. இப்படியும் சொல்லாம் பௌத்த்தின் தேடலே அல்லது வேட்கையே அவரை விடுதலை அடைந்தவராக ஆக்கி இருக்கிறது. ஒருவர் தனது பிற்போக்கு பாரம்பரியங்களில் இருந்து விடுதலை அடைந்தினால் பௌத்த்தை  நோக்கொ பயணித்தார் என்று சொல்ல முடியாது. பௌத்த்தை நோக்கிய பயணமே அவரை விடுதலையாக்கியிருக்கிறது.

பௌத்தத்தை அறிய அந்த பாதங்கள் பெரும் பயணத்திற்கு தயாராகி விட்டன.  

 

Comments

Popular posts from this blog

காவியமான ஆனைச் சாத்தான்

கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே    கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான பாதிப்புகளை அவை என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. இரட்டைவால் குருவி என்பதும் இவர்களுடைய மற்றொரு பெயர். இரட்டைவால் குருவியைக் காகத்துடன் ஒப்பிடும் போது அவ்வளவு ஒன்றும் பெரிய உருவம் கிடையாது. மிகச்சிறிய உருவம்தான் இந்தக் கரிச்சான் குருவி. வெளிநாட்டவர்கள் இங்கு வந்தால் காகம் என்றுதான் அழைப்பார்கள் போலும். அதன் உடலுக்கு அழகே அந்த வால்தான். நீண்டு கடைசியில் இரண்டாக பிளவுபட்டு இருக்கும். அதனாலேயே இரட்டைவால் குருவி என்று பெயரோ என்னவோ. மற்றபடி வால் சிறுத்திருந்தால் இவரையும் சிறிய காகம் என்றுதான் அழைப்பார்கள். காகம் என்றால் கூட சற்று சாம்பல் நிறம் கழுத்தில் பூத்திருக்கும். அண்டங்காக்கையென்றால் கருப்பா பயங்கரமா இருக்கும். அதீதக் கருப்பும் கருப்பல்ல. சாம்பல் பூத்த கருப்பும் கருப்பல்ல. கரிச்சான் குருவிகளின் நிறம்தான் கருப்புக்கு சிறந்த உதாரணம். அதனாலேயே இவர்கள் கரிச்சான் குருவி என்று அழைக்கப்ப...

இரு துரதிருஷ்டசாலிகள்

இரு துரதிருஷ்டசாலிகள்      என்னுடைய மாருதி 800ல் பழுது பார்க்கும் வேலை கொஞ்சம் இருந்தது. ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றினால் கொதிகலன் அதனை இன்ஜினின் இருபது நிமிட இயக்கத்திற்குக் கூட சுழற்சி செய்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. வெளியில் சென்று வீடு திரும்பும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டி இருந்தது. கடைசியாக டெம்பரேச்சர் முள் அதன் வரைவுக் கோட்டீன் எல்லையைத் தாண்டி ℌ அருகே சென்று கொண்டிருந்தது. இதனை கல்பாக்கம் சென்று கொண்டிருக்கும் போது வண்டி மகாபலிபுரத்தைத் தாண்டி அம்மாவின் பாட்டி ஊரான பெருமாளேரியைக் கடக்கும் போதுதான் கவனித்தேன். ஐந்து மைல் தூரத்திற்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நிறுத்தி இன்ஜினின் வெப்பம் குறையட்டும் என்று ஒவ்வொரு முறையும் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஒருவழியாக இன்ஜினில் இருந்து புகை எதுவும் கிளம்பாத அளவுக்கு பத்திரமாக வண்டியை சென்னைக்குக் திரும்பக் கொண்டுவந்து சேர்த்து விட்டேன்.      பழுதை சரி செய்ய மெக்கானிக் குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்றார். ரேடியேட்டரில் பிரச்சனையாம். இல்லை இல்லை ரேடியேட்டரே பிரச்சனையாம். அதை முழுவதுமாக மாற்றி புதிய ஒ...

Piercing through the Wind

Nostalgic feelings of the nursery rhyme gush to one’s memory whilst the eye gazes at the night sky.  The floating pristine disc invites a dark man from Tamil Nadu, to sing the ever tiding "Nila Nila Odi Va". Rational faculties constantly fall short in studying this moment. Tales and songs usher one to cherish this unforgettable experience. Yet, trained culture merely reasons out ignoring nature. Culture of the learned demands only scientific observation of the starry night.