Skip to main content

ஓவியம்: ஒரிஜினலை காப்பியடிக்கும் Imitation



டிக்கடி நாம் பார்க்கின்றவைகள் ஒருவித சலிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. முக்கியமாக பழகிய மனிதர்கள். மனது விரும்புவது புதுமையான ஒன்றை.  அதே இடம் அதே பழகிய மனிதர்கள் என்றால் இந்த பழகிய எல்லைக் கோட்டில் இருந்து தப்பித்து புதிய உலகத்தை கண்டடைய மனம் ங்கும். நம் வரப்புக்கு மீறி அன்னியமான இடத்திற்கு நகரும் போது விட்டுப் பிரிந்த பழகிய இடத்தின், மனிதர்களின்,  பொருட்களின் மீதான பந்தம் பிரிவின் ஏக்கத்தை ஏற்படுத்தும்.  புதிய சூழல் பழகும் வரை எற்கனவே விட்டுப் பிரிந்த பழைய வாழ்க்கையின் நினைவுகள் மனதில் இருந்து நீங்காது வாதிக்கும்.  புதிய அனுபவம் பழக்கத்திற்கு உட்படும் வரை பழைய’ என்ற ஒன்று பிரிவின் வேதனையாக மனதிற்குள் நின்று கொண்டே இருக்கும்.  
ஒரே இடத்தில் தேங்கிக் கிடப்பது வெறுப்பின் அனுபவம்.  ஒன்று ஒரு இடத்தில் வசிப்பவர் அவ்விடம் விட்டு நகர வேண்டும் அல்லது அந்த இடம் அவருக்கு புதிதானதாக மாற வேண்டும்.  புதிய இடத்திற்கு இடம் பெயறுவதும் இருக்கும் இடம் புதிதானதாக மாறுவதுமே மனித உள்ளம் பாழடைந்து போகாமல் இருப்பதற்கான வழி.  
இரண்டில் ஒன்று எப்போதும் நடந்து கொண்டே இருக்க வேண்டும்.  நீண்ட நாள் தங்கி விட்ட மண், நெடு நாள் பராமரித்த பிரியம் கொண்ட சுற்றம் எப்போதும் அதே வாசனையில் பிரியத்தில் இருக்க வேண்டுமானால் ஒரு நாள் பிரிவே  போதும். நிழலின் அருமை வெய்யிலில் தெரியும் என்பார்கள்.  நிழல் எல்லைக்குட்பட்டது.  நிழலின் விளிம்பு வெய்யிலின் வெளிச்சம் தொடாத கரு நிற பாய்விறிப்பு. எல்லைக் கோட்டை தாண்டாத இடம் மரக்கிளைகள் படர்ந்து விரித்த நிழல். அது இதமானது என்பது வெளிச்சத்தின் தகிப்பு உணர்த்தும் வரையில் தெரியாது.
ஒன்றின் அர்தத்தை மற்றொன்று வழங்குகிறது. அல்லது பூர்த்திசெய்கிறது. இந்த இருமையின் நிலை ஒன்றையொன்று பூர்த்தி செய்ய அவசியமாகிறது. வெளியில்  இருக்கும் அகமும் புறமும் மாறாதவைகள்.  அவைகளின் புதுத்தன்மைகள் தொடர்ந்து மனதின் மாற்றத்தால் முதலில் பழையதாகி பின்பு புதியதாகி விடுகின்றது. மாறாதது என்னவோ புறம்பான அகமும் புறமும் தான். மாறிக் கொண்டிருப்பது என்னவோ மனதின் நிச்சயமற்ற நிலை.
இருப்பினும் மனது தன்னுள் உள்ளடக்கிக் கொள்ள தன்னை விட மிகப் பெரிய ஒன்றை நாடுகிறது. அல்லது தனக்கிணையான ஒன்றை நாடுகிறது. மனதின் விஸ்த்தாரம் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது.  சில நேரங்களில் இப்பிரபஞ்சத்தையே விழுங்கும் அளவுக்கு தன் வாயைதிறந்து வைத்துக் கொள்கிறது.  சில நேரங்களில் கவிதையின் இரண்டு வரிகளைக் கூட உள் வாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கிறது. மனம் ஒரு ஏமாற்றுக்காரன்.
மனதின் உள்வாங்கும் திறனுக்கும் மீறி பேரண்டத்தை விழுங்க மனிதனின் அகம் தயாராக இருக்கிறது.  எதையும் யோசிக்கவும் முடிவெடுக்கவும் திறனற்ற நேரத்தில் மனதின் செயல்பாடு ஸ்தம்பித்து விடுகிறது.  இந்த நேரத்தில் நடை பயணம் மிகுந்த செயலூக்கி என்று சொல்லலாம்.  அப்படியும் மனம் தன் இயல்பு நிலைக்கு திரும்பாவிட்டால். தன்னைக் காட்டிலும் மிக பிரம்மாண்டமான ஒன்றை சற்று நேரம் ஆழ்ந்து உற்று நோக்கினாலே போதுமானது. செயலற்று கிடப்பது தன்னிலைக்கு திரும்பிவிடும். தன்னைக் காட்டிலும் மிகப் பெரிய ஒன்று எப்போதும் கண் முன்னால் இருக்க வேண்டி இருக்கிறது.
நடை பயணம் மனதின் அளவை சற்று விசாலமாக்குகிறது என எண்ணம் கொள்ளும் போது அதுவும் தவறான கருத்தோ என எண்ணத் தோன்றுகிறது. ஊதினால் வீங்கிப் பெருகும் பலூன் என்று வேண்டுமானால் மனதின் நிலையை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இயல்பு நிலை என்னவோ சிறியதுதான். காற்றின் அடர்த்திக்கு ஏற்றவாறு வீங்கி விடுகிறது. தகவல்கள்,  கருத்துக்கள் என காற்றை உட் செலுத்தி அதன் அடர்த்தியை திடமாக்கபடுகிறது. காற்றின் அடர்த்தி அதிகமாக அதிகமாக கொள்திறனுக்கும் மீறி வெடித்து பைத்திய நிலையை அடைந்து விடுகிறது. புத்திசுவாதீனம்.
நடை பயணம் காற்றின் அடர்த்தியை சற்று குறைக்கிறது என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். அதுவும் சரிப்படாத நிலையில் இயற்கையின் எழில் உதவி செய்யும்.  வெடிக்கும் தருவாயில் அழகு நிறைந்த இயற்கையின் காட்சி மனதில் Cataclysm ஒன்றை  நிகழ்த்துகிறது. அதுவரை சேமித்து வைக்கப்பட்ட கருத்துக்கள் தரவுகள் அகத்தின் ஆழத்திற்குள் தன்மயமாக்கப்படுகிறது. தரவுகளின் இந்த அடுத்த பரிணாமம் மெய்ஞானம்.
மனது ஒன்று உள்ளே செல்வதற்கும் வெளியேறுவதற்குமான வாசல் மாத்திரமே. அதுவே தங்கும் அறை அன்று.  தவறாக அதீதமான கருத்துக்கள் இங்கேயே தங்கி விடுகின்றன. உள்ளே எதுவும் நகருவதில்லை. வாசலில் அப்படியே வைத்து திரும்பவும் தெருவுக்கே அனுப்பப்படுகிறது. இப்பொது பிரச்சனையே வேறு.  தங்கிவிட்ட ஒன்றை எப்படி வெளியில் அனுப்புவது என்பதுதான் அது. மனது தான் தேவையில்லாமல் சேமித்து வைத்தவற்றை மறக்க வேண்டும்.  அப்படியே மறப்பது கடினமான செயல் என்றால் தன்னுள் மறக்க முடியாமல் இருக்கும் வேறு ஒன்றை உற்று நோக்க வேண்டும்.  நடைபயணம் கொழுப்பை கறைப்பது போன்று நினைவுகளை கரைக்க வேண்டும்.  அதுவும் சரிப்படாமல் போனால் அதி சிறந்த ஔஷதம் இயற்கையின் எழில்.
நீலமான நீளம் சந்திக்கிற இடம் இறைவன் தன் கற்பனையை வண்ணங்கள் குழைத்து தூரிகை கொண்டு சித்திரம் தீட்டும்
திரைச்சீலை
.  கண்ணுக்கு புலப்படாத அந்த மாபெரும் கலைஞனின் கற்பனைக்கு எல்லையே கிடையாது.  அம்மாபெறும் கற்பனாவாதிக்கு அந்த நீளமான நீலக்கடலும், மற்றொரு நீளமான நீலவானமும் தான் தோதான திரைச்சீலைகள். அதிகாலையில் இந்த பிரம்மாண்ட நீலங்கள் மத்தியில் மேகங்களையும் சூரியக்கதிர்களையும் குழைத்து உண்டாக்கும் மஞ்சல் சிவப்பு வண்ணங்கள் பிரென்சு ஓவியர்களுக்கு ஒரு மாடல். அதற்கு முன் மனிதனின் கலை அதைக் காட்டிலும் சற்று குறைவானதுதான். ஒரிஜினலை காப்பி அடிக்கும் வெறும்imitation’. இறைவன் ஆகச் சிறந்த கர்பனாவாதி. ஓவியர்களோ அம்மாபெரும் கலைஞனின் நிழலாட்டங்கள். நாம் யாருடைய நிழலாட்டங்கள் என இப்போது மௌனிக்கு தெரியும் என நினைக்கிறேன்.

Comments

Popular posts from this blog

காவியமான ஆனைச் சாத்தான்

கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே    கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான பாதிப்புகளை அவை என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. இரட்டைவால் குருவி என்பதும் இவர்களுடைய மற்றொரு பெயர். இரட்டைவால் குருவியைக் காகத்துடன் ஒப்பிடும் போது அவ்வளவு ஒன்றும் பெரிய உருவம் கிடையாது. மிகச்சிறிய உருவம்தான் இந்தக் கரிச்சான் குருவி. வெளிநாட்டவர்கள் இங்கு வந்தால் காகம் என்றுதான் அழைப்பார்கள் போலும். அதன் உடலுக்கு அழகே அந்த வால்தான். நீண்டு கடைசியில் இரண்டாக பிளவுபட்டு இருக்கும். அதனாலேயே இரட்டைவால் குருவி என்று பெயரோ என்னவோ. மற்றபடி வால் சிறுத்திருந்தால் இவரையும் சிறிய காகம் என்றுதான் அழைப்பார்கள். காகம் என்றால் கூட சற்று சாம்பல் நிறம் கழுத்தில் பூத்திருக்கும். அண்டங்காக்கையென்றால் கருப்பா பயங்கரமா இருக்கும். அதீதக் கருப்பும் கருப்பல்ல. சாம்பல் பூத்த கருப்பும் கருப்பல்ல. கரிச்சான் குருவிகளின் நிறம்தான் கருப்புக்கு சிறந்த உதாரணம். அதனாலேயே இவர்கள் கரிச்சான் குருவி என்று அழைக்கப்ப...

இரு துரதிருஷ்டசாலிகள்

இரு துரதிருஷ்டசாலிகள்      என்னுடைய மாருதி 800ல் பழுது பார்க்கும் வேலை கொஞ்சம் இருந்தது. ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றினால் கொதிகலன் அதனை இன்ஜினின் இருபது நிமிட இயக்கத்திற்குக் கூட சுழற்சி செய்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. வெளியில் சென்று வீடு திரும்பும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டி இருந்தது. கடைசியாக டெம்பரேச்சர் முள் அதன் வரைவுக் கோட்டீன் எல்லையைத் தாண்டி ℌ அருகே சென்று கொண்டிருந்தது. இதனை கல்பாக்கம் சென்று கொண்டிருக்கும் போது வண்டி மகாபலிபுரத்தைத் தாண்டி அம்மாவின் பாட்டி ஊரான பெருமாளேரியைக் கடக்கும் போதுதான் கவனித்தேன். ஐந்து மைல் தூரத்திற்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நிறுத்தி இன்ஜினின் வெப்பம் குறையட்டும் என்று ஒவ்வொரு முறையும் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஒருவழியாக இன்ஜினில் இருந்து புகை எதுவும் கிளம்பாத அளவுக்கு பத்திரமாக வண்டியை சென்னைக்குக் திரும்பக் கொண்டுவந்து சேர்த்து விட்டேன்.      பழுதை சரி செய்ய மெக்கானிக் குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்றார். ரேடியேட்டரில் பிரச்சனையாம். இல்லை இல்லை ரேடியேட்டரே பிரச்சனையாம். அதை முழுவதுமாக மாற்றி புதிய ஒ...

இமையத்தின் வீணடிக்கப்படாத போலச்(imitate) செய்யும் சொற்கள்

இமையத்தின் வீணடிக்கப்படாத போலச் (imitate) செய்யும் சொற்கள் இமையம் எப்போதும் வார்த்தைகளை எழுத்தாளர்கள் வீணடிக்கிறார்கள் என்று குறைவு பட்டுக் கொண்டிருப்பார். இதனால் மற்ற எழுத்தாளர்களை திட்டவும் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இதனைக் கேட்க்கும் போது உள்ளூர குற்ற உணர்வு ஏற்படும். எழுதுவதற்கு தயக்கமும் ஏற்படும். எழுத்தை வீணடிக்கக் கூடாது என்று இமையம் சொல்லும் போது அவர் எதை அர்த்தப்படுத்தி பேசினார் என்பது இன்றைக்கு அவருடைய பேட்டியை இந்துவில் படித்த பின்புதான் புரிந்து கொண்டேன். இமையம் தன் எழுத்திற்கென்று சமீப காலங்களாக ஒரு கோட்ப்பாட்டை முன் நிறுத்திக் கொண்டிருக்கிறார். இதனை கோட்பாடு என்று சொல்வதற்கு கூட பயமாய் இருக்கிறது. காரணம் கோட்பாடு என்ற வார்த்தை முழுவதும் இப்போது தவறாக அதுவும் கல்வி புலங்களில் பேராசிரியர்களால் அறைகுறையாக புரிந்து கொள்ளப்பட்டு போதிக்கப் பட்டு பதிப்பிக்கப்பட்டும் வருகின்றன. எனினும் இமையம் உருவாக்கும் தன்னுடைய விழுமியங்கள் (இந்த வார்த்தை கூட கொஞ்சம் சிக்கலான வார்த்தை தான்) முற்றிலும் தன்னுடைய படைப்பு சார்ந்ததாகவே இருக்க செய்கின்றன. படைப்பில் இருந்து உருவாக்கப்படும் ...