Skip to main content

Posts

எனக்கு ஐந்து[1] வயதிலேயே டால்ஸ்டாயைத் தெரியும்

எனக்கு ஐந்து [1] வயதிலேயே டால்ஸ்டாயைத் தெரியும் சாலையின் திருப்புமுனையில் நின்று கொண்டு ஒருவர் கைப்பிரதிகளை விநியோகித்துக் கொண்டிருப்பார். வேண்டாம் என்று உதாசினம் செய்பவர்கள் பலர். வாங்கி ’ஜோபியில்’ (சட்டைப் பை) போட்டுக் கொள்பவர்கள் சிலர். ஐந்து நிமிடங்கள் அதில் உள்ள உள்ளடக்கத்தை வாசிப்பவர்கள் மிகச் சொற்பம். எத்தனை கதைகள்! அவைகளை வாசித்த பின்பு ஒருவர் இலக்கியம் படிக்க நேரிட்டால் அது டாஸ்டாய் கதை அல்லவா? தாஸ்தாவஸ்கி கதை அல்லவா? என்று ஆச்சரியப்படக் கூடும். அப்படி அந்த கைப்பிரதியில் இருந்து என் ஒன்றாம் வகுப்பில் படிக்கக் கேட்ட கதை இன்றளவும் அது டால்ஸ்டாய் கதையல்லவா? என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. டாட்ஸ்டாயின் அந்த கதையைப் இப்போது படிக்கும் போதெல்லாம் எனக்கு அந்த ஐந்து வயதில் கதை கேட்ட அனுபவம் அந்த கதையின் மீது மெல்லியதொரு உணர்வாக படர்ந்து செல்லும். கைப்பிரதிகளை வாங்கும் போதெல்லாம் நிச்சயம் ஒரு அருமையான கதை அதில் இருக்கும் என்ற நிச்சயம். வாங்கிய உடன் இரயிலில் ஓரத்தில் அந்த கைப்பிரதியில் இருக்கும் கதைக்கு கொஞ்சம் மரியாதை செலுத்தி வாசிப்பேன். இறைமைந்தன் ஒரு உவமை...

The Parentage of Royal Enfield

The Parentage of Royal Enfield To own a Royal Enfield or a Thunder Bird is a matter of prestige. It is not just a matter of someone showcasing his wealth. It is something else in which we cannot relate it with money. A person who owns this motor cycle need not to a rich man. He stands beyond the measurement of currency value. On the road if we happened to hear that thundering noise of the gigantic machine installed in that cycle we may imagine the personality of whom the cycle bears him on its cushion comfortably. It is indeed a matter of prestige to ride this vehicle. Various impressions cross through our mind on this motor cycle and riders come across our memory. They are from various moments and different stages of my life. First time I saw this bike in my village. To spend time in our village in the afternoon is an eerie experience. The dead silence engulfs the whole village in the noon. Village folk drive their cattle at 9am in the morning for the pasture. From nine to th...

Old Women in MTC: Age cannot Wither their Reserved Strength

Old Women in MTC: Age cannot Wither their Reserved Strength It is the strength that keeps old age in respect. When strength fails life falls into miserable state. If a little amount of strength is reserved after seventies, life will go on peacefully. The truth is realized not by experience but by witnessing an incident in an MTC bus. The moment we get into the bus our only botheration is how to manage the conductor with hundred a rupee note. He will be like a land lord of hundred acres and we as the vassal under his regime. Whatever may be our social status, in that moment the so called Tamil plural respect will be diminished into singularity - நீ வா போ . Many times I had an urge to tell him “Don’t you know who Am I. I am …..”. I swallow the half at the moment it raises above my throat because he should not insult me with the reply, “so what?”. If people like us in the prime of life would be treated in this way then surly this is not the world for old people. For them bus ...

கவித்துவத்தின் உச்சங்கள்

கவித்துவத்தின் உச்சங்கள் தந்தை மகன் உறவைப் பற்றி கட்டுரை எழுதப்போக அது “Prodigal Son” உவமைக் கதையை நினைவுப்படுத்தியது. அதைப் பற்றின நல்ல படம் இருக்குமா என தேட Rembrandtன் இந்த ஓவியம் கிடைத்தது. இந்த ஓவியரைப் பற்றி எங்களுடைய பேராசிரியர் அதிகம் பேசியிருக்கிறார். பசுமாட்டிற்கு பிடில் வாசிப்பது போன்று அவர் பேசுவது அப்போதெல்லாம் இருக்கும். ஒன்றும் விளங்காது. இப்போது மிகவும் மானசீகமான ஒரு கதைக்கான Rembrandt ன் ஓவியம் எனக்கு ஓவியத்தைப் பற்றின பெரிய திறப்பை ஏற்படுத்திவிட்டது. ஊதாரி மகன் கதை இதுதான்; அப்பாவிடம் இருந்து சொத்தை பாகம் போட்டுக் கொண்டு தூர தேசம் செல்கிறான் இளைய மகன். காமக் களியாட்டு என தகாத வழிகளில் பணத்தை செலவழிக்கிறான். பணம் மொத்தம் காலியாகிவிடுகிறது. ஊரில் பஞ்சம் வேறு ஏற்பட்டுவிடுகிறது. ஊரில் உள்ள குடியானவன் ஒருவனிடம் தஞ்சம் புகுந்து பன்றி மேய்க்கும் தொழில் செய்கிறான். பன்றி மேய்க்கும் போது பசிக்கு பன்றியின் உணவை சாப்பிடப் போக பன்றியின் உணவை அவனிடம் இருந்து தட்டிப் பறித்துவிடுகிறார்கள். இப்போது அவனது அப்பாவின் நினைவு வருகிறது. அப்பாவின் வீட்டில் வேலைக்காரர்களுக்கே நல்ல உ...

அப்பாக்களும் பையன்களும்: புரியாத புதிர்கள்

அப்பாக்களும் பையன்களும்: புரியாத புதிர்கள் அப்பாக்கள் அனைவரும் ஒரே மாதிரி இல்லை. ஒருவரில் இருந்து மற்றொருவர் மாறுபடுகிறார். தங்கள் மகன்களைக் கண்டிக்கும் போதும் சரி, அன்பு செலுத்தும் போதும் சரி அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் கிடையாது. இதுவரை என்னுடைய வகுப்புகளில் மாணவர்கள் என்ற மட்டில் பல பையன்களைப் பார்த்து அன்பு செலுத்தியிருக்கிறேன், கோபப்பட்டிருக்கிறேன், கேலி செய்திருக்கிறேன், பயந்திருக்கிறேன். அனைத்து குணங்களைக் கொண்டவர்களின் கூட்டு மொத்தம் ஒரு வகுப்பறை. வேறுபட்ட குணாம்சங்களை எதிர்கொள்வது என்பது மிக சுவாரசியமான அனுபவமும் கூட. வருடா வருடம் புதிது புதிதாக இந்த தொடர் சுவாரசியம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே செல்லும். மானுடப் படைப்பு எவ்வளவு விசித்திரமானது. நம்மை நாமே நாம் பார்த்து அலுத்து போய்விட்டது. ஒரே சுற்றத்தாரைக் கண்டும் வேதனைக் கொண்டோம். வகுப்பறையோ ஒரு புதுமையின் உலகம். எனினும் வகுப்பறை ஒற்றை குணம் கொண்ட மாணவர்களின் கூட்டுத் தொகுதியாக இருக்க வேண்டும் என்பது நமது விருப்பம். உள்ளே நுழைந்தவுடன் அனைவரும் புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு நம் முகத்தையே உற்று நோக்கி...

ஸ்டீபன் ஹாக்கிங்கோடு ஒரு ஆழ்நிலை உறக்கம்

ஸ்டீபன் ஹாக்கிங்கோடு ஒரு ஆழ்நிலை உறக்கம் உலகத்திலேயே மிகவும் ஆபத்தான செயல்பாடு விவாதிப்பது என தோன்றுகிறது. கைக்களப்பு என்றால் கூட பரவாயில்லை எண்ணங்களின் உரசல்? அது புரோட்டானையும் நியூட்ரானையும் மோதவிடுவது போலிருக்கிறது. அணுச்சிதைவும் எண்ணங்களின் மோதலும் நம் உள்ளான மனோவியல் உலகத்தை சிதைவுறச்செய்து ஆட்டம்காணச் செய்கிறது. ஒருவர் ஆக்ரோஷமாக விவாதிக்க வரும்போது அணுச்சிதைவுக்கு ஒப்பான பேராபத்து ஏற்படுமோ என பயம் பீடித்துக் கொள்கிறது. விவாதத்தை தவிர்க்க வேண்டும் போல் இருக்கிறது. அதே நேரம் வீம்புக்கு விவாத களத்தில் குதித்து அதன் சூட்டில் உச்சத்திற்கு சென்று சண்டை போட்டு வெற்றிபெற வேண்டும் என்ற பேராவல். எதிராளியை சொற்களால் வீழ்த்தவேண்டும் என்பதுதான் விவாதத்தின் நோக்கமே. எதிராளி மண்ணைக் கவ்வ வேண்டும். ஒருமுறை வாய்ச் சண்டை போட்டபின்பு அதன் பின்விளைவுகள் மிக நீண்ட நாட்களுக்கு தொடரும் போல. எப்படி ஒரு முறை அணுச்சிதைவு நடந்து அதன் பாதிப்பு பல காலங்களுக்கு ஒரு உயிர் பரிணாமத்தையே அங்கங் குறைய பாதித்தது போன்று நம் மன அழகை அகோரமாக்கிவிடுகிறது இந்த எண்ணங்களின் அணுச்சிதைவு. இருப்பினும் ஒருவர் பேச ...

குஜராத்துல கூட இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்திச்சி

குஜராத்துல கூட இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்திச்சி என்ன தப்பு செய்தார் என் கட்சிக்காரர் என்று வட்டசெயலாலர் வண்டு முருகன் மேடையில் முழங்குவார். பேச்சு வீராவேசமாக இருக்கும். அடிவாங்கியது அவர்தான் வேறு யாரும் கிடையாது. கூட்டத்தில் இருந்து இருவர் அதைச் சுட்டிக்காட்டி”இவந்தான் எங்கியோ செமத்தியா வாங்கியிருக்கான்” என்று சிரித்துக் கொள்வார்கள். வண்டுமுருகனும் அதை பொருட்படுத்தாமல் கண்டனக் குரலை மேலும் அதிகமாக்குவார். செய்தி என்னவெனில், மாபெரும் தத்துவங்களுக்கு பின்னால், வீர வசனங்களுக்கு பின்னால் ஒரு மூத்திரச்சந்து அனுபவம் நிச்சயம் இருக்கும். இல்லாமல் போகாது. மூத்திரச்சந்து தத்துவவாதிகளையும், இலக்கியவாதிகளையும், பெரும் பிரபலங்களையும் உருவாக்கியிருக்கியிருக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

பைத்தியங்கள்

பைத்தியங்கள் கரமசோக்களின் உலகத்தில் இருந்து தூர இருக்க வேண்டும் என்பது என்னுடைய தற்போதைய விருப்பம் அல்லது கட்டாயம். தாஸ்தாவஸ்கியின் நாவலில் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை தூர தூக்கி எறிந்து நிம்மதி காணும் அனுபவம் நம்முடையது அல்ல. எவ்வளவுக்கு எவ்வளவு நடுக்கடலில் தூக்கி எறிகிறோமோ கடலலைகள் நம்முடைய அந்த எதிர்முகத்தை அதாவது கண்ணாடி போல் பிரதிபளிக்கும் முகத்தை துக்கிக் கொண்டு வந்து நம் கண் முன் வைத்து “பார் இதுதான் நீ” என்று மீண்டும் மீண்டும் நினைப்பூட்டிக் கொண்டே இருக்கின்றன. இந்த காரணத்தினாலேயே தாஸ்தாவஸ்கியின் உலகத்தைக் கைவிட்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டன. இப்போது கோமாளித்தனம் நிறைந்த வகுப்புகளை எதிர்கொள்வதால் ஆத்திரம் சில நேரங்களில் என்னுடைய உறுதியான மன வலிமை சோதித்து கண்ணாடி போன்று சுக்கு நூறாக உடைக்கிறது. முற்றிலும் கோமாளிகளின் உலகமாக இந்த உலகம் மாறிக்கொண்டே வருகிறது போன்ற உணர்வு. மாணவர்களின் பைத்திய நிலையை சில நேரங்களில் புரிந்து கொள்வதற்கு யாராவது ஒருவரோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டுமே என முயற்சி செய்ததுண்டு. நினைவுக்கு எட்டிய ஒரே ஒரு முகம் பேட் மேனில் வரும் ஜோக்கர். கன்னங்களில் சிரிப்ப...

சொல்லும், செயலும்

வழிமுறை எதுவாயினும் பரவாயில்லை இலக்கை அடைவதுதான் முக்கியம். அடையும் வழிமுறை எப்படிப்பட்ட ஒழுக்க மீறலில் செயல்பட்டாலும் அது ஒரு பொருட்டே அல்ல. இலக்குதான் முக்கியம். இதனை ஒரு மதவாதி பேசவே துணிய மாட்டார். செய்வது ஒன்றாக இருந்தாலும் அதனை நியாயமாகவே அவர் முன் நிறுத்தி பேசுவார். மதம் எப்போதும் உண்மையை தன் ஆடையாக போர்த்திக் கொண்டு எந்தக் காரியத்தையும் செயல்படுத்தும். அது நன்மையாக இருக்கட்டும் தீமையாக இருக்கட்டும் தன்னை முன்நிலைப்படுத்திக் கொள்வது உண்மை என்ற சாதனத்தின் மூலமாகவே. மதம் சற்று சாரம் பொருந்திய வார்த்தையான ’தர்மம்’ என்ற பத்தத்தை பயன்படுத்திக் கொள்கிறது. அந்த வார்த்தையின் வைப்ரேஷன் சற்று கூடுதலானது. மதம் மாத்திரமே கையில் எடுக்கும் பதம். அறம், தர்மம் இந்த வார்த்தைகளை தொட தத்துவவாதிகள் வெட்கப்படுவார்கள். மதம் அவர்களுக்கு ஒவ்வாமையை உண்டாக்குகிறது. இந்த வார்த்தைகளைத் தொட சற்று நாணுவார்கள். அப்படியே பயன்படுத்திவிட்டாலும் அவர்களுடைய நிலைப்பாடே மாறிவிடுகிறது. மதத்தின் தளத்தில் தங்களைப் பொருத்திக் கொள்கிறார்கள். சொல்லும் சொல்லே ஒருவருடைய அடையாளமாகிறதோ? தத்துவவாதிகள் தர்மம், அறம், சத...

கரன் கார்க்கியின் ஒற்றைைப் பல்: நிணத்தின் வாடைவீசும் யதார்த்தவாதம்

கரன் கார்க்கியின் ஒற்றைப் பல்: நிணத்தின் வாடைவீசும் யதார்த்தவாதம் யதார்த்தவாதத்தைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் வெட்டி தோலுரித்து தொங்கவிடப்பட்ட மாமிசத்தின் மீது  எழும் நிணத்தின் வாடை நினைவிற்கு வரும். அனைவருக்கும் வாய்க்காத எழுத்தின் உத்தி யதார்த்தவாதத்தின் உத்தி. அதுவே உயர் கலை என கொள்ளலாம். வாழ்க்கை நம் கண் முன் தோலுரித்துக் காட்டப்படுகிறது. ஒருமுறை எழுத்தாளர் இமயத்திடம் பேசிக்கொண்டிருக்கும் போது யதார்த்தவாதம் பற்றி கேள்வி கேட்டேன். அவர் மிக இயல்பாக பதிலைத் தந்தார். பதில் கேள்வியாகவே இருந்தது. ”எழுத்தில் ஏது யதார்த்தம். பேனாவை தொட்டவுடனேயே கற்பனையில் இறங்கிவிடுகிறோமே?” இலக்கியத்தில் நாம் நினைக்கிற அதி தூய்மையான யதார்த்தவாதம் சாத்தியம் கிடையாது” என்று சொன்னார். எனினும் ரஷ்ய எழுத்தாளர் கார்க்கியைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் A 1 பீப் ஸ்டாலில் எழும் மாம்சத்தின் நிண வாடை நினைவில் எழும்பும். வாழ்க்கையை அதன் நிர்வாண நிலையில் முதன்மைப்படுத்துவது அது. அதனிடம் அணுகிச் செல்லுவதற்கு நமக்கு ஏனோ பயம். இது பிரதியை பிரித்து வாசிக்காமலேயே ஏற்படும் பாதிப்பு. அதுவே கரன் கார்க்கியின் ஒற்றைப...

ஆதித் தேடலும், செட்டிக்கடை வட்டியும்

ஆதித் தேடலும், செட்டிக்கடை வட்டியும் புலன்களுக்கு சிக்காத எதுவொன்றும் நம்மை அச்சமூட்டக்கூடியவை. அதுவே ஐம்புலன்களின் ஆளுகைக்குள் உட்படும் போது அச்சம் நீங்கி ஆளுகை செய்ய வேண்டும் என்ற ஆவல் மேற்கொள்கிறது. நாம் எவ்வளவு தீரர்கள் என்பது பொருட்டல்ல. நம்முடைய பிரக்ஞையில், உணர்வுகளில் உட்படும் போது அது நமதாக மாறிவிடுகிறது. வானத்தின் உயரமும் கடலின் ஆழமும் நம்மை எப்போதும் பிரமிக்க வைக்கக்கூடியவைகள். யாரேனும் ஒருவர் அவைகளின் எல்லையைத் தொட்டுவிட்டு வரும் போது அந்த ஒருவரின் அனுபவம் நம் அனைவரின் அகந்தையாக மாறிவிடுகிறது. அந்த ஒருவரின் எல்லையைப்பற்றியக் கண்டுபிடிப்பு நம்முடையதாகவும் மாறிவிடுகிறது. காரணம் இதுதான்: அதுவரை எல்லையே ஒன்று கிடையாது என்ற சூட்சமத்தில் வாழ்ந்துவந்தோம் அதனால் அச்சம் பீடித்திருந்தது. எல்லை ஒன்று உண்டு என சொன்ன பின்பு அச்சம் நீங்கி “இப்பிரபஞ்சம் என்னுடையது” என்ற கர்வம் ஏற்படுகிறது. முடிவே இல்லாத ஒன்றில் நம் அச்சத்தை எப்போதும் வைத்திருக்கிறோம். முடிவற்றதின் எல்லையைக் கண்டடையும் போது அதுவரை நாம் வைத்திருந்த அனைத்துக் கற்பிதங்களும் தகர்ந்து தர்க்கத்திற்கு உள்ளாகிறது. புலன்களுக...

மந்திரக்காரன் கார்சியா மார்க்கேஸ்

மந்திரக்காரன் கார்சியா மார்க்கேஸ் இலக்கிய வாசிப்புக்கு இனி எதுவும் கிடையாது என்று சொன்னால் சந்தோசமாக தண்டனையை ஏற்றுக் கொள்வேன். One Hundred Years of Solitude முடிந்துவிட்டது. கண்களை மூடிக்கொண்டு கனவு உலகத்தில் மிதந்தது போன்று இருந்தது வாசிப்பு அனுபவம். மூன்று நாட்கள் விடுமுறை. மழைக்காலமும் தோதாகிவிட்டது. புற உலகம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. இரண்டாயிரத்து பதினான்கில் இதே போன்றதொரு அனுபவம். இடைவெளிவிடாமல் The Idiot ஒரு நீண்ட கனவாக நான்கு நாட்கள் தொடர்ந்தது. மிஷ்கினின் க்ளைமேக்ஸையும் புயேந்தியாக்களின் க்ளைமேக்ஸையும் இனி மறக்கவே முடியாது. மார்க்வேஸ் தன் கதைகளில் ஜாலங்கள் செய்யும் ஒரு மந்திரக்காரன். இந்த இரண்டு நாவல்களை இரசனையோடு வாசித்தேன் என்ற அனுபம் ஒன்றே போதும். இன்னும் ஒருமுறை இவ்விரண்டையும் தமிழ் மொழிபெயர்ப்பில் முயற்சி செய்ய வேண்டும்.

Prey Searching White Birds

Prey Searching White Birds One can see thousands of birds camped on the bog land of “*******”. They are very busy by looking down into the marsh land searching for something. They look like the one who had lost his precious diamond on the open ground. Almost for entire day they are in that constant search. When the day is gone they go back to their nests. But their search is only on this marsh land. They come here and start their duty everyday. No one knows when they are going to discover their lost diamond. For this alone they take a long journey for this unending pursuit.

இஞ்சி குஞ்சி இடியாப்பங்கள்: டர்ர்ர்ர் புர்ர்ர்ர் டமால்

Photo: Greenhouse gases புரட்சியாகட்டும், கலகமாகட்டும் அது தனிமனிதன் சார்ந்த காரியம் அல்ல. ஒரு குழு கூடும்போது அதில் இருக்கும் ஒன்று அல்லது இரண்டு பேர்களுடைய தாக்கம்தான் அது. அவர்களுடைய ஆற்றலே முழு குழுவிற்குமான ஆற்றல். ஆரம்பிப்பது என்னவோ ஒரே ஒருவனிடத்தில் இருந்துதான் தொடங்குகிறது. பின்பு அது அனைவரையும் தொற்றிக் கொள்கிறது. இது தான் காலங்கள் தோறும் நடந்துவரும் புரட்சிகளின் நிதர்சனம். அந்த ஒரே ஒரு இயங்கு சக்தியை முடக்கிவிட்டால் முழு கூட்டத்தின் செயல்திரனும் ஸ்தம்பித்துவிடும். அந்த ஒற்றைப் புள்ளியை இனம் காணாமல் ஒரு பெரிய ஆற்றலை அணுகுவது காட்டுத்தீயை ஒரு வாளி தண்ணீரைக் கொண்டு அணைப்பதற்கு இணையானதாகும். இது ஆபத்தை விளைவிக்கும். ஒரு கூட்டத்தின் ஆற்றலை முடக்குவதற்கான வழி அதுவல்ல. கூட்டத்தில் ஒற்றையாக இருக்கும் மைய சக்தி அதுதான் மிக முக்கியம்.

விரியும் கனவுகளும், உருகும் மெழுகுச்சிறகுகளும்

அவனுக்கு மெழுகுச் சிறகுகள் கொடுக்கப்பட்டன. பறப்பதற்கான சுதந்திரம் அது. அதைக் கொண்டு எவ்வளவு அகலத்திற்கு வேண்டுமானாலும் அவன் பறக்கலாம். அதிக உயரம் மாத்திரம் கூடாது. எச்சரிப்பு அவன் தந்தையிடம் இருந்து வந்தது. செய்யாதே என்று சொல்லும் போதுதானே அதை செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. அதுவே மனித இயல்பு. Icarus உயரத்தின் எல்லையை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் எச்சரிக்கையை தடையாகக் கருதாமல் தடையை விசாசலமான வாசலாகக் கருதி மெழுகு றெக்கைகளை படபடத்துக் கொண்டு மேல் நோக்கி இன்னும் அதிகம் இன்னும் அதிகமாக பறக்க ஆரம்பித்தான். கனவுகள் இன்னும் விரிய ஆரம்பித்தன. இன்னும் மேலும் மேலும் செல்ல உயர பறக்க ஆசை உந்தித் தள்ளியது. வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க மெழுகு வெப்பம் தாளாமல் உருக ஆரம்பித்துவிட்டது. சிறகுகள் உருகிக் கொண்டே அவன் பூமியின் மீது இறங்கிக் கொண்டிருந்தான். அவன் பூமியை நெருங்கும் போது பூமியின் குடிகள் அனைவரும் அந்த வீழ்ச்சியின் காட்சியை கண்டு கொண்டிருந்தனர். அன்று அந்த காட்சிக்கு பார்வையாகத கண்கள் எதுவும் கிடையாது. அவர்களுக்கு இருந்த ஒரே விசேஷித்தக் காட்சி அந்த வீழ்ச்சி மாத...

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்

How GW Can Grow 40K With 5 Marine Minis - Bell of Lost Souls belloflostsouls.net 730 × 828 Search by image முகம் ஒன்றுதான் அது அத்தனை உணர்வுகளுக்குமான நாடக மேடையாக திகழ்கிறது. எத்தனை அடுக்குகளிலான உணர்வுகள் அதன் மீது அரங்கேற்றப்படுகின்றன. அத்தனைக்கும் அந்த முகம் உயிர் கொடுக்கிறது. அந்த அரங்கேற்ற மேடை மாத்திரம் இல்லை என்றால் அத்தனை உணர்வுகளுக்கும் உயிர் அற்று போய் விடும். கோபம் இப்படித்தான் இருக்கும் என அதனை தனியாகத் துண்டித்துக் காட்டக் கூடியவர் யார்? கனிவு என்பதை அதன் இருப்பில் தனியாகத் துண்டித்துக் காட்ட முடியுமா? இவைகள் அனைத்துக்கும் முகம் என்ற நாடக மேடை அவசியப்படுகிறது. அனைத்து உணர்வுகளுக்குமான வெளியாக்கமாக முகம் இருப்பது இயல்பானது. அது அப்படித்தான் இருந்தாக வேண்டும். கோபம் வந்தால் உடனே அதனை வெளிப்படுத்தியாக வேண்டும். அன்பு என்றால் அதனையும் உடனே வெளிப்படுத்தியாக வேண்டும். இதில் ஒவ்வொருவரும் ஓவ்வொரு உணர்வை அதீதத்தில் வெளிக்காண்பிக்க பேர்போனவர்கள். அனைவரும் அனைத்து உணர்வுகளையும் சமச்சீர் விகிதத்தில் தங்கள் முகத்தில் திரையிடும் இயல்பு இல்லாதவர்கள். ஒரு மனிதனால்...

மிஸ்ட்டர் பேனா அமுக்கி

சென்ற வாரம் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் இருந்து கடிதம் ஒன்று வந்தது. என் வாழ்நாளில் இதுதான் எனக்கு வந்த முதல் கடிதம். அதாவது நீல நிற Inland letterல். ஆவலோடு பிரித்து வாசிக்க ஆரம்பித்தேன். வாசிப்பின் தொடர்ச்சியில் என்னை பயம் கவ்விக் கொள்ள ஆரம்பித்தது. அது ஒரு விமர்சனக் கடிதம். நான் எழுதிய “கூப்பிடுக்கள் புதுமைப்பித்தனை” கட்டுரைக்கான எதிர்வினை அது. கிழித்து தொங்கபோட்டுவிட்டார். எழுதிய கடிதத்தை அப்படியே என்னுடைய பிலாக்கில் பதிவிடும்படி உத்தரவும் போட்டுவிட்டார். சில வசவுகளை மாத்திரம் நீக்கிவிடுகிறேன் என்ற கோரிக்கைக்கு சம்மதம் தெறிவித்துக் கொண்டார். கடித்தத்தில் வந்த எதிர்வினை இதுதான். மிஸ்ட்டர் பேனா அமுக்கி, விலை உயர்ந்த அந்த காமா பேனா அதிகம் இன்க் பிடிக்கும் என்பதால் கண்டமேனிக்கு எழுதுவதை தவிர்த்தல் நலமாக இருக்கும். பேசும்போது நாவடக்கம் எவ்வளவு அவசியாமோ அதே அளவிற்கு பேனாவைக் கையாளும்போதும் அதிகம் அவசியம். தர்க்கம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. “கொசுக்களை வடிகட்டி ஒட்டகத்தை விட்டுவிடுகிறீகள்”. நான் ஒட்டகம் என்று சொன்னது வணிக இலக்கியத்தைப் பற்றினது. கொசுக்கள் என்று சொன்னது சீரி...

ஒழுக்கம் என்னும் ஒற்றைக் கோடு

சாராயம் அருந்தாத ஐந்து பேரை கிராமங்களில் பார்ப்பது அரிது. மதுவுக்கு அடிமையானவர்கள்/ஆகாதவர்கள் என்று வேறு பிரித்து வைத்து பார்க்கிறோம். இதனை அதிகம் ஒழுக்கத்தோடு தொடர்புப்படுத்தி பார்த்துவிட்டோம். ஐந்து பேர் மாத்திரம் சாராயம் குடித்துவிட்டு மற்ற ஆண்கள் அனைவருமே யோக்கியர்களாக இருந்தால் அந்த ஐந்து பேரை ஒழுக்கத்தின் சாட்டையால் தண்டித்துவிடலாம். இப்போது பிரச்சனை ஐந்து பேர் யோக்கியர்களாகவும் மற்ற அனைத்து கிராமத்தார்கள் குடிகாரர்களாகவும் இருப்பது நம்மை யோசிக்க வைக்கிறது. அந்த ஐந்து பேரைக் கொண்ட குழு இயல்பானதா? அல்லது ஊர் முழுக்க குடிகாரர்களாக இருப்பது இயல்பானதா? என்பதும் கேள்வியே. இந்தக் கேள்வி என் சிறுவயதுமுதல் கேள்வியாக இல்லாமல் ஒருவித குழப்பமாகவே இருந்து வந்திருக்கிறது. அந்த ஐந்து பேர் மாத்திரம் ஏன் விதிவிலக்காக இருக்கிறார்கள் என்பதுவும் ஆச்சரியமூட்டுகிறது. அவ்வளவு சுய கட்டுப்பாடு கொண்டவர்களா அந்த ஐந்து பேர்கள்? இமயம் தன்னுடைய சிறுகதை ஒன்றில் “ஏன் எங்கள் தெரு பெண்களுக்கு மாத்திரம் பேய் பிடிக்கிறது?” என்ற கேள்வியைக் கேட்பார். அதே கேள்வியை நானும் “ஏன் அந்த ஐந்து பேரைத் தவிர்த்து மற்றவ...