Skip to main content

ஐய்யோ சென்றடைய கூடு இல்லையே

 




எழுத்தாளர்களின் ஆளுமையை அவர்களின் எழுத்து வழி மட்டுமே அறிந்து கொண்டால் போதும் என்று இருக்கும். நேரில் சென்று சந்தித்தால் அவர்களின் சிறுமை வெளிப்பட்டுவிடும். எழுத்தில் கண்டு வியந்த அந்த ஆளுமை அங்கு இருக்காது. மீறி போய் சந்தித்தால் அதுவரையில் அவர்கள் மீது கொண்டிருந்த பெரும் மதிப்பு கரைந்துவிடும். எழுத்தாளன் புத்தகத்தோடு மட்டுமே இருக்க வேண்டிய தனிப் பிறவி. மீறி நம்மை அவரோ அவரை நாமோ சென்று சந்திக்க வேண்டியதில்லை. எலும்புக் கூட்டின் மீது தசைகளையும் தோலையும் சேர்த்து கட்டி உருவாக்க பட்ட அந்த சாதாரண மனிதன் நமக்கு தேவை இல்லை. எழுத்தில் வெளிப்படும் ஆளுமை வேறு யதார்த்தத்தில் வாழும் எழுத்தாளன் என பெயர் கொண்ட அம்மனிதன் வேறு. அது Shakespeareகவே இருந்தாலும் சரி.

இது பெரும்பான்மையின் நிலை. அது அப்படித்தான் இருக்கும். எனினும் விரல் விட்டு எண்ணும்படியான எழுத்தாளர்கள் தமிழ் நவீன இலக்கியத்தில் விதிவிலக்கானவர்கள். எழுத்தில் காணும் அதே ஆளுமையை அவர்களது வீட்டிலும் காண முடியும்.  எந்த வேலையில் சென்றாலும் தேனீரோ மதிய உணவோ சொந்தக் காரர்களுக்கு இருப்பது போன்று தயாராக இருக்கும். வரவேற்று உபசரித்து அனுப்புவார்கள். கரிசல் காட்டு முது கிழவர் கி.ரா அப்படிப்பட்டவர் என்று கேள்விப்பட்டதுண்டு. ஒரு நூற்றாண்டின் கதையை சொல்லும் கரிசல் நிலத்தின் கதை சொல்லி; யதார்த்தத்தில் ஒருவர் புத்தகத்தில் வேறு ஒருவர் என்று கிடையாது.

கி ராவை கதைகளில் கண்டு வியந்திருந்தாலும் கரிசல் எழுத்தின் முன்னத்தி ஏராக விளங்கிய பெரியவராக எழுத்தாளர் சொ. தர்மன் மூலம் மட்டுமே தெரியும். ”கரிசல் இலக்கியம் என்று உருவாகி இத்தனை பேர் எழுத்தாளர்கள் என்று இருக்கிறோம் என்றால் அதற்கு எங்க நைனா தான் காரணம்” என்பார் தர்மன். இதுவரை நேரில் அவரை சென்று பார்த்ததில்லை. காரணம் அவர் வாழ்ந்த ஒரு நூற்றாண்டின் இறுதி முனையில் இருந்து வேறொரு நூற்றாண்டை நோக்கி நகரும் புதிய தலைமுறை நாம். அவருக்கும் நமக்குமான இடைவெளி காலத்தால் நீண்டது. அவரை நம்மோடு இணைக்கும் ஒரே சரடு நம்மோடு இன்று ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் வாழும் எழுத்தாளர்கள் மாத்திரமே. இருப்பினும் கி. ராவைப் போன்றும் சுராவைப் போன்றும் இன்று நம்மை அவர்களது கூட்டுக்குள் வைத்து வளர்த்தெடுக்க ஆளில்லையே என்றிருக்கிறது. ஐய்யோ சென்றடைய கூடு இல்லையே.

Comments

Popular posts from this blog

காவியமான ஆனைச் சாத்தான்

கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே    கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான பாதிப்புகளை அவை என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. இரட்டைவால் குருவி என்பதும் இவர்களுடைய மற்றொரு பெயர். இரட்டைவால் குருவியைக் காகத்துடன் ஒப்பிடும் போது அவ்வளவு ஒன்றும் பெரிய உருவம் கிடையாது. மிகச்சிறிய உருவம்தான் இந்தக் கரிச்சான் குருவி. வெளிநாட்டவர்கள் இங்கு வந்தால் காகம் என்றுதான் அழைப்பார்கள் போலும். அதன் உடலுக்கு அழகே அந்த வால்தான். நீண்டு கடைசியில் இரண்டாக பிளவுபட்டு இருக்கும். அதனாலேயே இரட்டைவால் குருவி என்று பெயரோ என்னவோ. மற்றபடி வால் சிறுத்திருந்தால் இவரையும் சிறிய காகம் என்றுதான் அழைப்பார்கள். காகம் என்றால் கூட சற்று சாம்பல் நிறம் கழுத்தில் பூத்திருக்கும். அண்டங்காக்கையென்றால் கருப்பா பயங்கரமா இருக்கும். அதீதக் கருப்பும் கருப்பல்ல. சாம்பல் பூத்த கருப்பும் கருப்பல்ல. கரிச்சான் குருவிகளின் நிறம்தான் கருப்புக்கு சிறந்த உதாரணம். அதனாலேயே இவர்கள் கரிச்சான் குருவி என்று அழைக்கப்ப...

இரு துரதிருஷ்டசாலிகள்

இரு துரதிருஷ்டசாலிகள்      என்னுடைய மாருதி 800ல் பழுது பார்க்கும் வேலை கொஞ்சம் இருந்தது. ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றினால் கொதிகலன் அதனை இன்ஜினின் இருபது நிமிட இயக்கத்திற்குக் கூட சுழற்சி செய்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. வெளியில் சென்று வீடு திரும்பும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டி இருந்தது. கடைசியாக டெம்பரேச்சர் முள் அதன் வரைவுக் கோட்டீன் எல்லையைத் தாண்டி ℌ அருகே சென்று கொண்டிருந்தது. இதனை கல்பாக்கம் சென்று கொண்டிருக்கும் போது வண்டி மகாபலிபுரத்தைத் தாண்டி அம்மாவின் பாட்டி ஊரான பெருமாளேரியைக் கடக்கும் போதுதான் கவனித்தேன். ஐந்து மைல் தூரத்திற்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நிறுத்தி இன்ஜினின் வெப்பம் குறையட்டும் என்று ஒவ்வொரு முறையும் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஒருவழியாக இன்ஜினில் இருந்து புகை எதுவும் கிளம்பாத அளவுக்கு பத்திரமாக வண்டியை சென்னைக்குக் திரும்பக் கொண்டுவந்து சேர்த்து விட்டேன்.      பழுதை சரி செய்ய மெக்கானிக் குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்றார். ரேடியேட்டரில் பிரச்சனையாம். இல்லை இல்லை ரேடியேட்டரே பிரச்சனையாம். அதை முழுவதுமாக மாற்றி புதிய ஒ...

Piercing through the Wind

Nostalgic feelings of the nursery rhyme gush to one’s memory whilst the eye gazes at the night sky.  The floating pristine disc invites a dark man from Tamil Nadu, to sing the ever tiding "Nila Nila Odi Va". Rational faculties constantly fall short in studying this moment. Tales and songs usher one to cherish this unforgettable experience. Yet, trained culture merely reasons out ignoring nature. Culture of the learned demands only scientific observation of the starry night.