Skip to main content

உசிலம்பட்டி காற்றாலையும், உள்ளூர் குயிக்சாட்டுகளும்


கள்ளிப்பட்டியானால் என்ன? காற்றாலைகளே இல்லாத உசிலம்பட்டியானால் என்ன? நம்முடைய கட்டுரையின் கருவின் கட்டாயத்திற்காக புனைவிற்காகவாவது ஒரே ஒரு காற்றாலையை நம்முடைய அசகாய வீரனுக்காக தற்காலிகமாக அங்கே நட்டுவைப்போமாக.   
ஒரே ஒரு முறை புனைவில் ஒரு சாகச வீரன் அரக்கர்களை வீழ்த்த முயன்று தோற்று போனான். அந்த தோல்விதான் புனைவை யதார்த்தமாக்கியது. ஒருவேளை அவன் அந்த அரக்கர்களை அழித்திருந்தால் அவன் ஏறக்குறைய ஐநூறு நூற்றாண்டுகளுக்கு ஞாபகத்தில் இல்லாமல் போய் இருப்பான். அவனுடைய வெற்றி கற்பனைக்கதையாக வாசிக்கப்பட்டு என்றோ மறக்கப்பட்டிருந்திருக்கும். அவனுடைய தோல்வியும் அவனுடைய பார்வையில் இருந்த மாய வித்தையும் அவனை கோமாளியாக என்றென்றைக்கும் நம் நினைவில் வைக்க வேண்டிய கட்டாயமாகிவிட்டது. காலம் காலமாக இருந்து வந்த அந்த சாகச வீரம் அசட்டுத்தனமாக்கப்பட்டுவிட்டது. இதையெல்லாம் ஏற்படுத்தியது அந்த படைப்பாளியின் கதையாடல். அதுவரையில் என்றும் இல்லாத ஒரு கதையாடலையும் கதையையும் வைத்துவிட்டுப் போய் விட்டான். அது தன்னில் இன்றும் தனித்துவமாக நிலைநின்று கொண்டிருக்கிறது.
டான்குவிக்சாட் அசகாய வீரன். தன் உதவியாளன் சான்கோ பான்சோவுடன் வீர சாகசம் நிகழ்த்தி தனக்கென ஒரு நாட்டை பிடிக்க கிளம்பினான். அவன் அதுவரை புத்தகங்களின் உலகத்தில் தன்னை மூழ்கடித்து கொண்டிருந்திருந்தான். தனக்கென ஒரு சிந்தனை தனக்கென ஒரு உலகம், அதிலேயே அவன் வாழ்ந்து கொண்டிருந்தான். வீர சாகச பயணத்தில் திடீர் என்று அவன் கண் முன்பதாக அரக்கர்கள் நின்று கொண்டிருந்தார்கள். சான்கோவிற்கோ அவர்கள் நம்முடைய உசிலம்பட்டி காற்றாலைகள். குவிக்சாட்டுக்கிற்கோ நிச்சயமாக அவர்கள் அரக்கர்கள்தான். சான்கோ நம்மைப் போன்று ஓரு சாமான்யன். அவன் கண்ணுக்கு காற்றாலை காற்றாலையாகத்தான் தெரியும். ஆனால் குயிக்ஸாட்டுக்கு அது காற்றாலை என்று என்னதான் அழுத்தம் திருத்தமாக சொன்னாலும் கேட்கவும் மாட்டான் நம்பவும் மாட்டான். ஈட்டியை எடுத்துக் கொண்டு அரக்கர்களை அழிக்க சென்று விட்டான். அசுரத்தனமாக இறக்கைகள் அவனை கொசுவை அடிப்பது போன்று ஒரு தாக்கு தாக்கி கீழே தள்ளி விட்டது. எலும்புகள் முறிந்து விட்டன.
குயிக்ஸாட்டுக்கோ அவர்கள் அரக்கர்கள், சான்கோவுக்கும் நமக்கும் அவர்கள் வெறுமனே காற்றலைகள். ஒருவேளை அன்று இருந்த வாசகர்களுக்கு அவைகள் யாரோ? அது அவர்களுக்குத்தான் தெரியும். அவைகள் அன்றைய ஸ்பெயின் நாட்டின் அரசியல் சிஸ்டமா அல்லது அரசியல்வாதிகளா என்று. அவர்கள் கண்டிப்பாக குயிக்சாட்டையும், காற்றாலையையும் நம்மைவிட மிக சுவாரசியமாக வாசித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு அப்பட்டமாக அந்த நாவல் அன்றைக்கான அரசியல் நாவலாகத்தான் இருந்திருக்கும். நமக்கோ என்ட்டர்டெயின் பன்னும் வெறுமனே கதை அவ்வளவுதான்.
இருப்பினும் உசிலம்பட்டி காற்றாலைகளைப் பற்றிதான் யாரும் எதையும் எழுதுவதற்கில்லை. இருப்பினும் லா மான்சாவின் காற்றாலையைக் கொண்டு இன்றைய உசிலம்பட்டி காற்றாலையை நன்றாக விளங்கிக் கொல்லலாம் என்றுதான் நினைக்கிறேன். அப்படியெனில் நம்முடைய குயிக்சாட்டுகள் யார்?
சிஸ்டம் சரி இல்லை என்று புலம்பினால் சரி. அது நியாயமான புலம்பல். என்னைக் கேட்டால் அதைப் பற்றி புலம்பாதவன் ஒரு பொறுப்பற்ற இந்தியன் Anti இந்தியன் என்று கூட நான் சொல்லுவேன். சரி நான் சிஸ்ட்டத்தை மாற்றுகிறேன் பார் என்று கையில் இருக்கும் ஈட்டியை எடுத்துக் கொண்டு காற்றாலையை அடிக்க போனால்! ஒரு மாதத்திற்கு வீட்டில் மின் விளக்கு எரியாதே. இபோது உசிலம்பட்டி காற்றாளையின் மீது தவறா அல்லது நம்மூர் குயிஸாட்டுகளின் தவறா என்பது இன்னும் நமக்கு விளங்கவில்லை. இருப்பினும் இந்த குயிக்சாட்டுகள் சும்மா இருக்க போவதில்லை. காற்றாலையும் தன் அசுரத்தனமான சுழற்சியையும் விடப்போவதில்லை. சான்கோக்களாகிய நமக்கும் மின்சார நட்டம் எதுவும் வரப்போவதில்லை. அது அப்படியே சுழன்று கொண்டே இருக்கும். காற்றாலை வேகமாக சுற்றவில்லை என்று நம்மை நம்ப வைத்துவிட்டார்களே அதுதான் இப்போது நமக்கு மிகப் பெரிய பிரச்சனையே. அது காலம் காலமாக அப்படியேத்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. வேகமாக சுற்றவேண்டுமானால் அது காற்றின் பிரச்சனை அதற்கு காற்றாலை என்ன செய்யும்.
“அடே காற்றாலை வேகமாக சுற்றவில்லையடா”.
 “ஆமாம் சுற்றவில்லைதான். அதற்கு என்ன செய்ய.”
”இப்படி பொறுப்பில்லாமல் பேசுகிறாயே. வேகமாக சுற்ற நாம் எதையாவது செய்தாக வேண்டாமா?”
“”ஆமாம் எதையாவது செய்துதான் ஆக வேண்டும் ஆனால் என்ன செய்ய?”
இப்போது குயிக்சாட்டிடம் குற்றவாளிகளாக நிற்பது நாம்தான். நமக்கு நன்றாகத் தெரியும் நம்மால் எதையும் செய்ய முடியாது என்று. இருப்பினும் அதனை அந்த அசடனிடம் எப்படி சொல்வது.
”அது அப்படித்தாங்க சுற்றும். ஆனா சுற்றிகொண்டே இருக்கும். கவலைப்படாதீங்க”
என்று சொன்னால் பதிலுக்கு நம்முடைய மனசாட்சியே நம்மை பொறுப்பற்றவர்கள் என்று குற்றப்படுத்திவிடும். இந்தப் பிரச்சனையில் இருந்து நம்மால் மீளவே முடியாது.
ஆனால் புதிது புதிதாக குயிக்ஸாட்டுகள் தோன்றும் போது நமக்கு மனதில் ஓரத்தில் ஏதோ ஒரு நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. “கண்டிப்பா இந்த முறை இந்த நெப்போலியன், இந்த ஹிட்லர், எதையாவது செய்துவிடுவான் என்று நம்புகிறோம்.” பத்து குயிக்சாட்டுகள் தோற்றுப் போய் எலும்பை முறித்துக் கொண்டாலும் நமக்கு குயிக்ஸாட்டுகளின் மீது இருக்கும் நம்பிக்கை மாத்திரம் மாறப் போவதே இல்லை. நாமும் அவர்களை அனுமத்தித்துக் கொண்டே இருக்கிறோம். அந்த உசிலம்பட்டி காற்றலையும் அவர்கள் எலும்பை தவறாமல் எண்ணிவிடுகிறது. கடைசியில் அவகளைப் பார்த்து நாம் சிரித்ததுதான் மிச்சம்.

இனியும் குயிக்சாட்டுகள் வந்து கொண்டே இருக்கப் போகிறார்கள் அந்த உசிலம்பட்டி காற்றலையும் தன் கைவரிசையை காட்டத்தான் போகிறது. கண்டிப்பாக நம்முடைய உசிலம்பட்டி காற்றாலை அது பாட்டிற்கு மெதுவாக தன் றெக்கைகளை சுழற்றிக் கொண்டே நமக்கு வேண்டிய மின்சாரத்தைக் கொடுத்துகொண்டேதான் இருக்கப்போகிறது. ஆனால் அந்த ஐயோ பாவம் குயிக்சாட்டுகளை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. இருப்பினும் அவர்களைப் பார்த்து நாம் சிரிக்கக் கூடாது. அவர்களுடைய தையிரியத்தை பாராட்ட வேண்டும். 

Comments

Popular posts from this blog

காவியமான ஆனைச் சாத்தான்

கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே    கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான பாதிப்புகளை அவை என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. இரட்டைவால் குருவி என்பதும் இவர்களுடைய மற்றொரு பெயர். இரட்டைவால் குருவியைக் காகத்துடன் ஒப்பிடும் போது அவ்வளவு ஒன்றும் பெரிய உருவம் கிடையாது. மிகச்சிறிய உருவம்தான் இந்தக் கரிச்சான் குருவி. வெளிநாட்டவர்கள் இங்கு வந்தால் காகம் என்றுதான் அழைப்பார்கள் போலும். அதன் உடலுக்கு அழகே அந்த வால்தான். நீண்டு கடைசியில் இரண்டாக பிளவுபட்டு இருக்கும். அதனாலேயே இரட்டைவால் குருவி என்று பெயரோ என்னவோ. மற்றபடி வால் சிறுத்திருந்தால் இவரையும் சிறிய காகம் என்றுதான் அழைப்பார்கள். காகம் என்றால் கூட சற்று சாம்பல் நிறம் கழுத்தில் பூத்திருக்கும். அண்டங்காக்கையென்றால் கருப்பா பயங்கரமா இருக்கும். அதீதக் கருப்பும் கருப்பல்ல. சாம்பல் பூத்த கருப்பும் கருப்பல்ல. கரிச்சான் குருவிகளின் நிறம்தான் கருப்புக்கு சிறந்த உதாரணம். அதனாலேயே இவர்கள் கரிச்சான் குருவி என்று அழைக்கப்ப...

இரு துரதிருஷ்டசாலிகள்

இரு துரதிருஷ்டசாலிகள்      என்னுடைய மாருதி 800ல் பழுது பார்க்கும் வேலை கொஞ்சம் இருந்தது. ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றினால் கொதிகலன் அதனை இன்ஜினின் இருபது நிமிட இயக்கத்திற்குக் கூட சுழற்சி செய்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. வெளியில் சென்று வீடு திரும்பும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டி இருந்தது. கடைசியாக டெம்பரேச்சர் முள் அதன் வரைவுக் கோட்டீன் எல்லையைத் தாண்டி ℌ அருகே சென்று கொண்டிருந்தது. இதனை கல்பாக்கம் சென்று கொண்டிருக்கும் போது வண்டி மகாபலிபுரத்தைத் தாண்டி அம்மாவின் பாட்டி ஊரான பெருமாளேரியைக் கடக்கும் போதுதான் கவனித்தேன். ஐந்து மைல் தூரத்திற்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நிறுத்தி இன்ஜினின் வெப்பம் குறையட்டும் என்று ஒவ்வொரு முறையும் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஒருவழியாக இன்ஜினில் இருந்து புகை எதுவும் கிளம்பாத அளவுக்கு பத்திரமாக வண்டியை சென்னைக்குக் திரும்பக் கொண்டுவந்து சேர்த்து விட்டேன்.      பழுதை சரி செய்ய மெக்கானிக் குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்றார். ரேடியேட்டரில் பிரச்சனையாம். இல்லை இல்லை ரேடியேட்டரே பிரச்சனையாம். அதை முழுவதுமாக மாற்றி புதிய ஒ...

இமையத்தின் வீணடிக்கப்படாத போலச்(imitate) செய்யும் சொற்கள்

இமையத்தின் வீணடிக்கப்படாத போலச் (imitate) செய்யும் சொற்கள் இமையம் எப்போதும் வார்த்தைகளை எழுத்தாளர்கள் வீணடிக்கிறார்கள் என்று குறைவு பட்டுக் கொண்டிருப்பார். இதனால் மற்ற எழுத்தாளர்களை திட்டவும் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இதனைக் கேட்க்கும் போது உள்ளூர குற்ற உணர்வு ஏற்படும். எழுதுவதற்கு தயக்கமும் ஏற்படும். எழுத்தை வீணடிக்கக் கூடாது என்று இமையம் சொல்லும் போது அவர் எதை அர்த்தப்படுத்தி பேசினார் என்பது இன்றைக்கு அவருடைய பேட்டியை இந்துவில் படித்த பின்புதான் புரிந்து கொண்டேன். இமையம் தன் எழுத்திற்கென்று சமீப காலங்களாக ஒரு கோட்ப்பாட்டை முன் நிறுத்திக் கொண்டிருக்கிறார். இதனை கோட்பாடு என்று சொல்வதற்கு கூட பயமாய் இருக்கிறது. காரணம் கோட்பாடு என்ற வார்த்தை முழுவதும் இப்போது தவறாக அதுவும் கல்வி புலங்களில் பேராசிரியர்களால் அறைகுறையாக புரிந்து கொள்ளப்பட்டு போதிக்கப் பட்டு பதிப்பிக்கப்பட்டும் வருகின்றன. எனினும் இமையம் உருவாக்கும் தன்னுடைய விழுமியங்கள் (இந்த வார்த்தை கூட கொஞ்சம் சிக்கலான வார்த்தை தான்) முற்றிலும் தன்னுடைய படைப்பு சார்ந்ததாகவே இருக்க செய்கின்றன. படைப்பில் இருந்து உருவாக்கப்படும் ...