சமீபத்தில் இரண்டு புத்தகங்களை வாசித்தேன். ஒன்று சிறந்த கட்டுரை. மற்றொன்று மார்க்விசின் நூற்றாண்டு தனிமையில் நாவலை தழுவிய ஒரு தமிழ் நவீன நாவல். இந்த நாவல் மார்க்விசை விட சிறந்த நாவல் என்று சொல்லுவேன். அடுத்த முறை இந்த நவீனத்திற்கு கண்டிப்பாக நோபல் பரிசை கொடுத்தாக வேண்டும். கட்டுரையை பற்றி சொல்ல வேண்டுமே. அது என்னுடையது தான். இந்திய ஆங்கில நாவல் ௨௦௨௦ பற்றிய மிக நீண்ட கட்டுரை . இது ஒரு பக்தினிய அணுகுமுறை. எப்படி பலக்குரல்கள் உத்தி இந்த நாவலில் உள்ளது என்பதை பற்றிய கட்டுரை. இந்தக் கட்டுரையும் நவீனமும் இந்நூற்றாண்டின் முக்கியமான படைப்புகள். இரண்டும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட வேண்டியவைகள்.
கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான பாதிப்புகளை அவை என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. இரட்டைவால் குருவி என்பதும் இவர்களுடைய மற்றொரு பெயர். இரட்டைவால் குருவியைக் காகத்துடன் ஒப்பிடும் போது அவ்வளவு ஒன்றும் பெரிய உருவம் கிடையாது. மிகச்சிறிய உருவம்தான் இந்தக் கரிச்சான் குருவி. வெளிநாட்டவர்கள் இங்கு வந்தால் காகம் என்றுதான் அழைப்பார்கள் போலும். அதன் உடலுக்கு அழகே அந்த வால்தான். நீண்டு கடைசியில் இரண்டாக பிளவுபட்டு இருக்கும். அதனாலேயே இரட்டைவால் குருவி என்று பெயரோ என்னவோ. மற்றபடி வால் சிறுத்திருந்தால் இவரையும் சிறிய காகம் என்றுதான் அழைப்பார்கள். காகம் என்றால் கூட சற்று சாம்பல் நிறம் கழுத்தில் பூத்திருக்கும். அண்டங்காக்கையென்றால் கருப்பா பயங்கரமா இருக்கும். அதீதக் கருப்பும் கருப்பல்ல. சாம்பல் பூத்த கருப்பும் கருப்பல்ல. கரிச்சான் குருவிகளின் நிறம்தான் கருப்புக்கு சிறந்த உதாரணம். அதனாலேயே இவர்கள் கரிச்சான் குருவி என்று அழைக்கப்ப...
Comments
Post a Comment