Tuesday, May 1, 2018

மலேசியா பயணக் குறிப்பு(1)

மலேசியா பயணக் குறிப்பு

தினமும் நாம் கடக்கும் சாலை முக்கியத்துவம் அற்ற ஒன்று. மிகவும் பழகிப் போன மும்மரமான சில மணி நேரங்களுக்கான உலகம் அது. அது அன்றாடதின் பகுதி. பழமையின் சாரம் ஊறிப் போனது அந்த அன்றாடத்தின் அங்கம். ஒரு பொருளை வாங்கிய புதியதில் அந்த பொருளின் மீது நமக்கு இருக்கும் புதுமையின் பார்வை எப்படி நீண்ட நாட்களுக்கு பின்பு முக்கியத்துவம் அற்ற புளித்து போன ஒன்றாகி விடுகிறதோ அதே போன்று இந்த சொற்ப நேர பயணத்தின் பாதை பழமையுமாகவும் இல்லாமல் புதுமையாகவும் அல்லாமல் ஏதோ ஒன்றாக இருக்கிறது. இதுதான் யதார்த்தமோ? இந்த ஏதோ ஒன்றுதான் நாவலில் யதார்த்தவாதம் போலும்.

ஊர் பயணம் என்றதும் அதே சாலை திருவிழா கோலம் பூண்டு விடுகிறது. ஏன் இப்படி ஒரு மற்றம் பார்த்து பழகிய பொருளின் மீது எற்படுகிறது. இதே உணர்வை வித்தியாசம் வித்தியாசமாக நாவலாசிரியர்கள் தங்கள் படைப்பில் கொண்டுவருவதும் படைப்பின் சூட்சமம்தான்.
இப்பொது கடல் (இல்லை) விண் கடந்து வேறு தேசம் செல்கிறேன். பழகிய அன்றாடத்தின் சாலை நேராக மலேசியாவுக்கே போவது போல் தோன்றுகிறது. 

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...