Thursday, May 3, 2018

மலேசியா, நம் கண்முன் விரியும் தேசம் (பயணக் குறிப்பு 2)

நம் கண்முன் விரியும் தேசம்

ஓவ்வொரு நிலமும் அதற்கான தனித்துவத்தைக் கொண்டிருக்கிறது. அது அந்நிலதின் குறிப்பிட்ட வாழ்வியல் முறையாக இருக்கலாம் அல்லது அந்நிலத்தின் இயற்கை வளமாக இருக்கலாம். இவைகள் அனைத்தும் அங்கேயே பிறந்து வளர்ந்த ஒருவருக்கு ஒரு பொருட்டாகவே தெரியாது. மற்றமை என்ற நிலையில் இருந்து பார்க்கும் போது அந்த நிலத்திற்கு உரிய சிறப்பு அம்சம் தனித்துவமாக காணப்படும். இதற்கு அந்த மற்றமையின் நிலையில் இருந்து நம்மையும் அல்லது மற்றவரையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
நீண்ட நாட்களுக்கு முன்பு காலனிய காலத்து இந்தியாவை சித்தரிக்கும் நாவலை ஒன்றை வாசித்தேன். நாவலில் உள்ள ஓரே ஒரு படிமம் இந்தியா என்றால் என்ன என்ற உணர்வை கொடுத்தது இங்கிலாந்தில் இருந்து துரைச்சானி அம்மாள் இந்தியா வருகிறாள். துறைமுகத்தில் இருந்து சத்தம் ஒன்று கேட்கிறது. நிலப்பகுதியில் இருந்து வரும் சத்தத்தை இவ்வாறு பதிவு செய்கிறாள்: ஆயில் ஊற்றப்படாத மாட்டு வண்டி சத்தத்தை முதல் சத்தமாக இந்தியாவுக்குள் நுழையும் போது கேட்டேன் என்று.
துரு பிடித்த நிலையில் உள்ள கட்டை வண்டியின் சத்தம் எவ்வளவு தூரத்திற்கு நம் பண்பாட்டின் சத்தமாக அவர்களை  வியந்து கேட்கச் செய்யும் சத்தமாக இருந்திருக்கும். அந்த சத்ததின் வழியே நம் தேசத்தை நாம் பார்க்கிறோம். "க்ரீச்சிடும்" வண்டி சக்கரம் நம் பரந்து விரிந்த தேசத்தைப் பார்க்கும் படிமம். (படிமதைப் பற்றி எனக்கு என்ன தெரியும். எல்லாம் ஒரு உட்டான்ஸ்தான்).

மலேசிய வந்து இறங்கியதும் கண் முன் விரிந்த காட்சி ஒரு வித தென்னை போன்ற மரங்கள் முழு தேசத்தையும் நிரப்பி கிடக்கின்றன. பேருந்தில் முன்னால் நின்றுகொண்டு வரைபடத்துடன் guide நாட்டைப் பற்றி விளக்க ஆரம்பித்தார். முதலாவது இந்த தென்னை போன்ற மரம். பாம் எண்ணைக்கான மரமாம். அடுத்தது பெட்ரோல் பற்றி பேசினார். இங்கு உள்ளது போன்று பெட்ரோல் நாம் நாட்டில் மலிவாக இருந்தால் ஸ்கூட்டரிலேயே வட்ட முனை இமயமலையில் இருந்து தென்கோடி குமரி வரை ஊர் சுற்றலாம். மெய்ஞானமும் அதிகமாகும்.

கோலாலம்பூர் பட்டணமே பெரிய  கல்லூரிகளின் வளாகத்தை பொன்றதொரு  பராமரிப்பு.

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...