Friday, January 6, 2017

”Publish or Perish”



”Publish or Perish” என்று சொல்வார்கள். ஆரம்ப காலத்தில் இதைக் கேட்கும் போது உள்ளூர நடுக்கம் ஏற்படும். படிப்பு பிழைப்பு எல்லாம் இலக்கியம். வாழவே முடியாதோ என்ற பயம் அது. எழுதுவது என்பது ஒரு அலாதியான அனுபவம் என்பதை கற்றுக் கொடுத்தவர் நண்பர் அபிலாஷ். அதனையே பதிப்பில் பார்க்கும் போது கிடைக்கிற மன நிறைவு அதை விட அதிகம். என்னாலும் எழுதமுடியும் என்ற நம்பிக்கையை நான் உணர்ந்தது நணபர் அபிலாஷின் நட்பின் சூழலில் மாத்திரமே. அவருடைய நாவல் ’ரசிகன்’ பற்றி பல நாட்கள் என்னால் எதனையும் பேச முடியாமல் இருந்து வந்தது. ஏதோ ஒரு மையப்புள்ளியை நோக்கி என்னுடைய மௌனம் நாவலில் பயணித்துக் கொண்டிருந்தது. சடார் என்று ஒரு நாள் அந்த மையப்புள்ளியின் இருப்பிடம் தென்பட்டது. இரவு ஒரு மணிக்குள் மதிப்புரையை எழுதி முடித்து விட்டேன். இப்போது ”புத்தகம் பேசுது” இதழில் நூல் மதிப்புரையை பதிப்பில் பார்ப்பது பூரண மகிழ்ச்சியைத் தருகிறது. Thanks to Abilash.


No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...