Wednesday, August 29, 2018

இடைவெளி

சிறுபத்திரிகை விதை போன்றது அது எப்பேர்ப்பட்ட பாறையையும் உடைத்துக் முளைத்து கொண்டு வெளிவந்துவிடும் என்று கி ரா சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்போது இடைவெளி இதழின் ஆசிரியர் குழுவில் இருப்பது பெரும் மகிழ்ச்சி. நண்பர் சேது டார்வினுடன்  (#Sethu Darwin) உரையாடலில் விளைந்த ரணாடே கட்டுரையும் இதில் வெளிவந்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி. கட்டுரைகளை வெறும் கதை கவிதைகள் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறோமே இதைத் தவிர்த்து பிரதிக்கு வெளியே இருப்பதைப் பற்றி எழுத நம்மால் இயலாதோ என்ற ஆதங்கம் இருந்ததுண்டு. இக்கட்டுரை அதனை நிவர்த்தி செய்து வைத்தது. இலக்கியத்தின் வழியே ரணாடேவைப் பற்றி எழுதிய இலக்கியம் சாராத எனது முதல் கட்டுரை இது. எழுதி பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆசிரியர் குழுவில் கிடைத்த நண்பர்கள் நமக்கு மற்றுமொரு புதிய ஆரம்பம். நண்பர்கள் அடிக்கடி சந்தித்து உரையாடியதில் இதற்கு முன்பு வரை பயந்து கொண்டு தொடாமல் விட்டு வைத்திருந்த போர்கே கைவசமானார். ஆசிரியர் குழுவின் கூடுகையில் ஒவ்வொரு சந்திப்பும் புதிய புதிய திறப்புகளை உண்டாக்கிக் கொண்டே இருக்கின்றன. என் மீது நம்பிக்கைக் வைத்து ஆசிரியர் குழுவில் என்னை இணைத்துக்கொண்டது  எங்கள் மிட்டாய்காரர் (புத்தகக்காரர்) செந்தில்நாதன் சார்.    

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...