Sunday, December 17, 2017

கரன் கார்க்கியின் ஒற்றைைப் பல்: நிணத்தின் வாடைவீசும் யதார்த்தவாதம்

கரன் கார்க்கியின் ஒற்றைப் பல்: நிணத்தின் வாடைவீசும் யதார்த்தவாதம்
யதார்த்தவாதத்தைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் வெட்டி தோலுரித்து தொங்கவிடப்பட்ட மாமிசத்தின் மீது  எழும் நிணத்தின் வாடை நினைவிற்கு வரும். அனைவருக்கும் வாய்க்காத எழுத்தின் உத்தி யதார்த்தவாதத்தின் உத்தி. அதுவே உயர் கலை என கொள்ளலாம். வாழ்க்கை நம் கண் முன் தோலுரித்துக் காட்டப்படுகிறது. ஒருமுறை எழுத்தாளர் இமயத்திடம் பேசிக்கொண்டிருக்கும் போது யதார்த்தவாதம் பற்றி கேள்வி கேட்டேன். அவர் மிக இயல்பாக பதிலைத் தந்தார். பதில் கேள்வியாகவே இருந்தது. ”எழுத்தில் ஏது யதார்த்தம். பேனாவை தொட்டவுடனேயே கற்பனையில் இறங்கிவிடுகிறோமே?” இலக்கியத்தில் நாம் நினைக்கிற அதி தூய்மையான யதார்த்தவாதம் சாத்தியம் கிடையாது” என்று சொன்னார். எனினும் ரஷ்ய எழுத்தாளர் கார்க்கியைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் A 1 பீப் ஸ்டாலில் எழும் மாம்சத்தின் நிண வாடை நினைவில் எழும்பும். வாழ்க்கையை அதன் நிர்வாண நிலையில் முதன்மைப்படுத்துவது அது. அதனிடம் அணுகிச் செல்லுவதற்கு நமக்கு ஏனோ பயம். இது பிரதியை பிரித்து வாசிக்காமலேயே ஏற்படும் பாதிப்பு. அதுவே கரன் கார்க்கியின் ஒற்றைப் பல் பிரதியின் மீது ஏற்படுகிறது.
ரஷ்ய கார்க்கியை கலைஞரின் ”தாய்” மொழிப்பெயர்ப்பின் பல ஆண்டுகளுக்கு முன் வாசித்திருக்கிறேன். யதார்த்தத்தின் நிணம்  பழக்கப்பட்டதுதான். இப்போது ஒற்றைப் பல்லையும் வாசிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...